என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shafali Verma"

    • இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஷபாலி வர்மா 87 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
    • அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மாவுக்கு சொந்த ஊரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சண்டிகர்:

    சமீபத்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக மகுடம் சூடியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 87 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தி ஆட்ட நாயகியாக ஜொலித்தார்.

    அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மாவுக்கு சொந்த ஊரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், அவர் நேற்று அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவரது சாதனையைப் பாராட்டி ரூ.1½ கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

    மேலும் அரியானா மாநில பெண்கள் ஆணையத்தின் தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

    ஷபாலியின் சாதனை, அரியானா மாநிலத்தின் அனைத்து மகள்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது. உங்களது அற்புதமான செயல்பாட்டின் மூலம் தேசத்தின் பெயரை பிரகாசிக்க செய்வதில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என நயாப் சிங் சைனி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

    • முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 298 ரன்கள் குவித்தது.
    • ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 78 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார்.

    நவி மும்பை:

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 298 ரன்கள் குவித்தது. தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா சிறப்பான ஆட்டததை வெளிப்படுத்தினர்.

    ஸ்மிருதி மந்தனா 58 பந்தில் 8 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 78 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்னும், ஹர்மன்பிரித் கவுர் 20 ரன்னும், அமன்ஜோத் கவுர் 12 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    6வது விக்கெட்டுக்கு இணைந்த தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியில் மிரட்டியது. தீப்தி சர்மா அரை சதம் கடந்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் 24 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. தீப்தி சர்மா 58 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • ஸ்மிரிதி மந்தனா 45 ரன்கள் அடித்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.
    • ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 49 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    நவி மும்பையில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டததை வெளிப்படுத்தினர். இதனால் இந்தியா 6.3 ஓவரில் 50 ரன்களை கடந்து, 17.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்மிரிதி மந்தனா 58 பந்தில் 8 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 49 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    2ஆவது விக்கெட்டுக்கு ஷபாலி வர்மா உடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தியா 20 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்துள்ளது. ஷபாலி வர்மா 56 ரன்களுடனும், ரோட்ரிக்ஸ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • 6 போட்டிகளில் 308 ரன்கள் விளாசியுள்ளார்.
    • நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. பீல்டிங் செய்தபோது இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில் மகளிர் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் விளையாடி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

    பிரதிகா ராவல் ஸ்மிரிதி மந்தனாவுடன் இணைந்து தொடக்க பேட்டராக சிறப்பாக விளையாடி வந்தார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார். 6 போட்டிகளில் 308 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.33 ஆகும்.

    பிரதிகா ராவல் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷும் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கெதிராக அவர் விளையாடவில்லை.

    • இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர்.
    • ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

    இந்திய மகளிர் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

    முதலில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 16-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

    இந்த தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. முன்னதாக இவர்கள் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அணியில் சேர்க்கப்படவில்லை.

    அதேசமயம் 7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியில் ஷபாலி வர்மா இடம் பிடித்துள்ளார். அவர் டி20 அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை.

    இந்திய டி20 அணி:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஸ்நே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே

    இந்திய ஒருநாள் அணி:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே

    • இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி, சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

    இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன.

    இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.

    இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கிறார்.

    அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் டைட்டஸ் சாது ஆகியோரும் காயம் காரணமாக இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. 

    இருப்பினும் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி ஆகியோரும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணி:

    ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், காஷ்வீ கௌதம், சினே ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசாப்னிஸ், ஸ்ரீ சரணி, சுசி உபாத்யாய்.

    • ஷபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ரிச்சா கோஷூம் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மகளிருக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் முறையாக அடுத்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. ஜனவரி 14-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இத்தொடர் டிசம்பர் 27 முதல் ஜனவரி 4 வரை நடக்கிறது.

    இந்த அணிக்கு ஷபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிச்சா கோஷூம் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே விளையாடிய அனுபவத்துடன் டி20 உலக கோப்பையில் இருவரும் பங்கேற்க வேண்டும் என்பதே பிசிசிஐயின் திட்டமாக உள்ளது.

    யு19 உலக கோப்பை போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் டி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஐக்கிய அரபு அமீரகம் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.

    • ஜூனியர் உலக கோப்பையை இந்திய பெண்கள் அணி கைப்பற்றி அசத்தியது.
    • பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா ருசித்த முதல் உலக கோப்பை இதுவாகும்.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவில் நடந்த பெண்களுக்கான முதல் ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்கு உட்பட்டோர்) இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா ருசித்த முதல் உலக கோப்பை இது தான்.

    அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மா ஜூனியர் உலக கோப்பை தொடரில் 7 ஆட்டங்களில் களம் இறங்கி 172 ரன்களுடன், 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    அடுத்து இதே தென்ஆப்பிரிக்காவில் 10 அணிகள் பங்கேற்கும் 8-வது சீனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. இதிலும் இந்தியா அசத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜூனியர் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய 19 வயதான ஷபாலி வர்மா, சீனியர் அணியிலும் பிரதான பேட்டராக அங்கம் வகிக்கிறார்.

    இந்நிலையில், எனது அடுத்த இலக்கு சீனியர் உலக கோப்பையை வெல்வது என ஷபாலி வர்மா தெரிவித்தார்.

    என்னிடம் என்ன இலக்கு இருக்கிறதோ அதில் எனது முழு கவனமும் இருக்கும். அந்த வகையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் நுழைந்தபோது, உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே எனது முழு கவனமும் இருந்தது. வீராங்கனைகளிடம் நான் சொன்ன ஒரே விஷயம், 'உலகக் கோப்பையை வென்றாக வேண்டும். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்' என்பதுதான். அதை இன்று செய்து காட்டியிருக்கிறோம்.

    இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையோடு அடுத்து சீனியர் உலக கோப்பை போட்டிக்குச் செல்வேன். இந்த வெற்றியை மறந்துவிட்டு சீனியர் அணியினருடன் கைகோர்த்து அந்த உலக கோப்பையை வெல்ல முயற்சிப்பேன்.

    என்னைப் பொறுத்தவரை இதை மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறேன். இதில் கிடைத்த அனுபவங்களில் இருந்து மேலும் கற்றுக் கொள்வேன். இந்தியாவுக்காக தொடர்ந்து நிறைய ரன்கள் குவிக்க முயற்சிப்பேன். இந்த ஒரு உலகக் கோப்பையோடு மனநிறைவு அடைந்துவிட போவதில்லை. இது வெறும் தொடக்கம் தான் என குறிப்பிட்டார்.

    • வங்காளதேச அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • வங்காளதேச அணிக்கு எதிரான டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.

    வங்காள தேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் முதல் 4 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டி20 போட்டியானது சில்ஹெட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்ன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதன் மூலம் வங்காளதேச அணியை முழுவதுமாக கைப்பற்றியது.

    இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் ஷஃபாலி வர்மா களமிறங்கியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதில் 100-வது சர்வதேச போட்டியில் விளையாடிய வீராங்கனை எனும் வெஸ்ட் இண்டீஸின் ஷெமைன் காம்பெல்லின் சாதனையை ஷஃபாலி வர்மா முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஷெமைன் காம்பெல் 21 வயது 18 நாள்களில் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது ஷஃபாலி வர்மா 20 வயது 102 நாள்களில் 100-வது சர்வதேச போட்டியில் பங்கேற்று புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 

    • சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு மகளிர் டெஸ்ட் மட்டுமே நடந்து இருக்கிறது.
    • 1976-ம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் இப்போது தான் மகளிர் டெஸ்ட் நடக்கிறது.

    சென்னை:

    தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- ஷபாலி வர்மா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் அவுட் எடுக்க முடியாமல் திணறினர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இதனால் முதல் நாள் மதிய இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 130 ரன்கள் சேர்த்தது. ஷபாலி வர்மா 65 ரன்னிலும் மந்தனா 64 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் டெஸ்ட் இதுவாகும்.

    சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு மகளிர் டெஸ்ட் மட்டுமே நடந்து இருக்கிறது. 1976-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்டில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. அது டிராவில் முடிந்தது. அதன் பிறகு இங்கு இப்போது தான் மகளிர் டெஸ்ட் நடக்கிறது.

    • இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 108 ரன்கள் மட்டுமே ஷபாலி வர்மா எடுத்துள்ளார்.

    இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில போட்டிகளில் சொதப்பிய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 108 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்துள்ளார்.

    காயம் காரணமாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல் விலகி உள்ளார். மேலும் கடந்த மாதம் நியூசிலாந்திற்கு எதிராக 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதில் விளையாடிய அணியில் இருந்து உமா செத்ரி, தயாளன் ஹேமலதா, ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் சயாலி சத்கரே ஆகிய நான்கு பேர் இடம் பெறவில்லை.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி சர்மா, மின்னு மணி , பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டைட்டாஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், சைமா தாகூர்.

    சூப்பர்நோவாஸ் அணி 18 ரன்னுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி 82 ரன்கள் சேர்த்தது.
    புனே:

    மூன்று அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது போட்டியில் சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி அணிகள் மோதின. டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சூப்பர்நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 51 பந்தில் 71 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெலாசிட்டி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.

    லாரா வால்வார்ட், கேப்டன் தீப்தி சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

    இறுதியில், வெலாசிட்டி அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகி விருது ஷபாலி வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.
    ×