என் மலர்
நீங்கள் தேடியது "ENGWvINDW"
- டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 318 ரன்கள் குவித்தது.
லண்டன்:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 26 ரன்னில் அவுட்டானார். 45 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா வெளியேறினார்.
ஹர்லின் தியோல் உடன் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இணைந்தார். நிதானமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்லின் தியோல் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேப்டனுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து அதிரடியை வெளிப்படுத்தினார். ஜெமிமா 45 பந்தில் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் சதமடித்து அசத்தினார். அவர் 82 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்தது. ரிச்சா கோஷ் 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- இரு அணிகள் மோதிய ஐந்தாவது டி 20 போட்டி நடைபெற்றது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகளில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் ஐந்தாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 75 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் சார்லி டீன் 3 விக்கெட்டும், சோபி எக்கல்ஸ்டோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில், சோபியா டங்க்ளே 46 ரன்னில் அவுட்டானார். டேனில் வியாட் ஹாட்ஜ் அரை சதம் கடந்து 56 ரன்னில் வெளியேறினார். பவுசியர் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். டாமி பியூமாண்ட் 30 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ஆனாலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றி அசத்தியது.
- இரு அணிகள் மோதும் மூன்றாவது டி 20 போட்டி நடைபெற்றது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.
சோபியா டங்க்ளே 75 ரன்னும், வியாட் ஹாட்ஜ் 66 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்ரீ சரனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில், ஷபாலி வர்மா 47 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிர்தி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் கவுர் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி பெற்று டி20 தொடரில் 2-1 என நீடிக்கிறது.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 210 ரன்கள் குவித்தது.
- 2-வது அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்தது.
நாட்டிங்காம்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் 2-வது அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்தது. 216 வெற்றிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.
- கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
- அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார்.
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதம் விளாசியதன் மூலம், கிரிக்கெட் போட்டியின் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் சதம் அடித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார்
உலகளவில் 3 போட்டிகளிலும் சதம் அடித்த வீராங்கனைகளின் வரிசையில் ஸ்மிருதி மந்தனா 5வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
நாட்டிங்காம்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார். ஹர்லீன் தியோல் 43 ரன்னும், ஷபாலி வர்மா 20 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து.
அந்த அணியின் கேப்டன் நாட் சீவர் பிரண்ட்42 பந்தில் 66 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இங்கிலாந்து 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு அளிக்கப்பட்டது.
இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர்.
- ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
இந்திய மகளிர் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
முதலில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 16-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. முன்னதாக இவர்கள் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அணியில் சேர்க்கப்படவில்லை.
அதேசமயம் 7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியில் ஷபாலி வர்மா இடம் பிடித்துள்ளார். அவர் டி20 அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை.
இந்திய டி20 அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஸ்நே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே
இந்திய ஒருநாள் அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே
- முதலில் ஆடிய இந்தியா 333 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
கேன்டர்பரி:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேன்டர்பரி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்தார். அவர் 143 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்லின் தியோல் 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. டேனில் வியாட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 69 ரன்னில் அவுட்டானார். அலிஸ் கேப்சி, எமி ஜோன்ஸ் தலா 39 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சார்லட் டீன் 37 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், ஹேமலதா 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 227 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஹோவ்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. ஹோவ் நகரில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதமடித்து 50 ரன்னுடன் களத்தில் இருந்தார். டேனி வியாட் 43 ரன் அடித்தார்.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுடன் விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியா ஜோடி சேர்ந்தார். பாட்டியா அரை சதம் அடித்த நிலையில் அவுட்டானார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.
அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி 44.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகி விருது பெற்றார்.






