search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ENGWvINDW"

    • முதலில் ஆடிய இந்தியா 333 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    கேன்டர்பரி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேன்டர்பரி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்தார். அவர் 143 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்லின் தியோல் 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. டேனில் வியாட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 69 ரன்னில் அவுட்டானார். அலிஸ் கேப்சி, எமி ஜோன்ஸ் தலா 39 ரன்கள் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சார்லட் டீன் 37 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், ஹேமலதா 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 227 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஹோவ்:

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. ஹோவ் நகரில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதமடித்து 50 ரன்னுடன் களத்தில் இருந்தார். டேனி வியாட் 43 ரன் அடித்தார்.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுடன் விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியா ஜோடி சேர்ந்தார். பாட்டியா அரை சதம் அடித்த நிலையில் அவுட்டானார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி 44.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகி விருது பெற்றார்.

    ×