என் மலர்
கிரிக்கெட் (Cricket)

3வது டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி
- இரு அணிகள் மோதும் மூன்றாவது டி 20 போட்டி நடைபெற்றது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.
சோபியா டங்க்ளே 75 ரன்னும், வியாட் ஹாட்ஜ் 66 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்ரீ சரனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில், ஷபாலி வர்மா 47 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிர்தி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 57 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் கவுர் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி பெற்று டி20 தொடரில் 2-1 என நீடிக்கிறது.






