என் மலர்
நீங்கள் தேடியது "Women World Cup 2025"
- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் இன்று பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர். அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2017-ல் பிரதமரை சாம்பியன் கோப்பை இல்லாமல் சந்தித்தோம். தற்போது சாம்பியன் கோப்பையுடன் சந்தித்தோம். பிரதமர் மோடியை அடிக்கடி சந்திக்க விரும்புகிறோம் என்றார்.
- இறுதி போட்டியில் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் வீழ்த்தவில்லை.
- உலக கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 298 ரன்கள் குவித்தது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 246 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ளது.
மகளிர் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பரிசுகளும் குவிந்து வருகின்றன. பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கிராந்தி கௌட்டுக்கு, மத்திய பிரதேச மாநில அரசு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
மிதவேகப் பந்து வீச்சாளரான இவர் இறுதிப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் 6 ஓவர்கள் வீசி 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
உலக கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- மழையால் 2 மணி நேரம் தாமதமாக டாஸ் சுண்டப்பட்டது.
- ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மழை பெய்ததால் போட்டி சரியாக 3 மணிக்கு தொடங்கவில்லை. காலதாமதம் ஆனது. இறுதியாக 4.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்த் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும், தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்தை அணியை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.
- தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக திடீரென மழை பெய்தது. இதனால் சரியான நேரத்தில் டாஸ் சுண்டப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் 3 மணிக்கு டாஸ் சுண்டப்படும். 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் 3 மணிக்கு டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்க இன்னும் காலதாமதம் ஆகும் .
- ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்தியாவுக்கு பின்னால் இருக்கும் இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது.
- இது மிகவும் உற்சாகமான வாய்ப்பாகும். அதே சமயத்தில், இந்தியாவுக்கு அதிக அளவில் நெருக்கடியை உண்டாக்கும்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை தோற்கடித்திருந்தது.
லீக் போட்டியில் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. ஆனால் அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா அபாரமாக இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.
இந்தியா லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்திருந்தாலும், அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.
நாளை இந்தியாவை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், நாக்அவுட் போட்டி லீக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, எனவே, ப்ரஷாக தொடங்குவோம் என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் லாரா வால்வார்த் தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டி குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வொர்த் கூறியதாவது:-
நாக்அவுட் கிரிக்கெட் லீக் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரராக ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாடியதை நாம் பார்த்ததுபோன்று, சிலர் நாக்அவுட் போட்டியில் விளையாடும் திறமையை பெற்றுள்ளனர் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பார்த்து நாங்கள் செல்வோம் என்று நினைக்கவில்லை. நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம் என்பது எங்களுக்கு தெரியும். இந்தியா மிகவும் வலுவான அணி. அவர்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடியுள்ளனர். இதனால் அவர்கள் மிகப்பெரிய அளவிலான நம்பிக்கையில் இருப்பார்கள்.
நாங்கள் இறுதிப் போட்டியில் தோற்ற வரலாறு, லீக்கில் இந்தியாவை வீழ்த்தியது போன்ற வரலாற்றை கொண்டு வர முடியாது. நாங்கள் அவை அனைத்தும் அப்புறப்படுத்திவிட்டு முற்றிலும் ப்ரெஷயாக தொடங்க முயற்சிக்கிறோம்.
ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்தியாவுக்கு பின்னால் இருக்கும் இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. ஏறக்குறைய டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இது மிகவும் உற்சாகமான வாய்ப்பாகும். அதே சமயத்தில், இந்தியாவுக்கு அதிக அளவில் நெருக்கடியை உண்டாக்கும்.
இவ்வாறு லாரா வால்வார்த் தெரிவித்துள்ளார்.
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் நாளை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்தியா முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பொதுவாக இந்திய ஆண்கள் அணி விளையாடும்போது, ரசிகர்கள் அதிக அளவில் நேரில் வந்து பார்ப்பார்கள். பெண் ரசிகர்களும் அதிக அளவில் திரள்வார்கள். இதனால் வீரர்களிடம் டிக்கெட் வாங்கித் தருமாறு நெருங்கிய வட்டாரங்கள் வேண்டுகோள் விடுக்கும். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டிற்கு அவ்வாறு கூடுவது கிடையாது.
ஆனால், இந்த இறுதிப் போட்டியை பார்க்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்திய வீராங்கனைகளிடம் டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்யுமாறு பலர் அன்புத்தொல்லை கொடுப்பதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உலக கோப்பை இறுதி போட்டி டிக்கெட்டிற்கும்தான். இது சிறந்ததது. கிரிக்கெட் வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறி.
"தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும்போது, நாம் அதிகமான மாற்றங்களை கிரிக்கெட்டில் பார்க்கலாம். கிரிக்கெட் இன்னும் அதிக வளர்ச்சியை பெறும். அது சர்வதேச அளவில் மட்டுமல்ல. உள்ளூர் அளவில் வளர்ச்சி பெறும். பெண்கள் கிரிக்கெட் இன்றும் அதிகமான சீரியஸ் தன்மை மற்றும் அதிக பார்வையாளர்களை பெறுவதை பார்க்க, நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
- தொடக்க பேட்டராக களம இறங்கிய லாரா வால்வார்த் 143 பந்தில் 169 ரன்கள் விளாசினார்.
- தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களும், காப் 42 ரன்களும் சேர்த்தனர்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிகள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்கா- 3ஆம் இடம் பிடித்த இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்டராக களம் இறங்கிய கேப்டன் லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 143 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 169 ரன்கள் குவித்தார்.
மற்றொரு தொடக்க பேட்டர் தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள் சேர்த்தார். காப் 33 பந்தில் 42 ரன்களும், ட்ரைசன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 33 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் ஷோபி எக்லெஸ்டோன் 10 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். லாரன் பெல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 320 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
- தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 47 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.
இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வி (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), ஒரு முடிவில்லையுடன் (பாகிஸ்தானுக்கு எதிராக மழையால் பாதியில் ரத்து) 11 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.
அந்த அணியில் பேட்டிங்கில் ஹீதர் நைட், அமே ஜோன்ஸ், டாமி பீமோன்டும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டோன், லின்சே சுமித், சார்லி டீனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆல்-ரவுண்டராக கேப்டன் நாட் சிவெர் அசத்துகிறார். கடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் காயம் அடைந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் பாதியில் வெளியேறினார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். நடப்பு தொடரில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அவர் ஆடமுடியாமல் போனால் இங்கிலாந்து அணிக்கு இழப்பாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாத்தில் இமாலய வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும்.
தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் பணிந்தது. அதன் பிறகு நியூசிலாந்து, இந்தியா, வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது. கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. 10 புள்ளிகள் எடுத்த தென்ஆப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் 3-வது இடம் பெற்றது.
தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். சுழலில் தகிடுதத்தம் போடும் அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 69 ரன்னிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 97 ரன்னிலும் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதனால் முக்கியமான இந்த ஆட்டத்துக்கு முன்னதாக சுழலுக்கு எதிரான பலவீனத்தை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் கேப்டன் லாரா வோல்வார்ட் (301 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார். ஆனால் தஸ்மின் பிரிட்ஸ், மரிஜானே காப், சுனே லூஸ் ஆகியோர் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். பந்து வீச்சில் மிலாபா (11 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். அவருக்கு ஆல்-ரவுண்டர்கள் மரிஜானே காப், நடினே டி கிளெர்க் பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்க முனைப்பு காட்டும் தென்ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் சுழல் ஜாலத்தை தாக்குப்பிடிப்பதை பொறுத்தே ஏற்றம் காண முடியும்.
தென்ஆப்பிரிக்க கேப்டன் வோல்வார்ட் கூறுகையில், 'எங்களது வீராங்கனைகள் அனைவரும் திறமைமிக்கவர்கள். நாளைய (இன்று) ஆட்டத்தில் பதற்றமின்றி நிதானமாக செயல்பட்டால் நாங்கள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைக்கும். எங்களை விட இங்கிலாந்துக்கு அணியினர் நிறைய நெருக்கடியில் இருப்பார்கள்' என்றார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 47 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 36-ல் இங்கிலாந்தும், 10-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
போட்டி நடக்கும் கவுகாத்தியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை பெய்வதற்கு 25 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: அமே ஜோன்ஸ், டாமி பீமோன்ட், ஹீதர் நைட், டேனி வியாட், நாட் சிவெர் (கேப்டன்), சோபியா டங்லி, அலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபி எக்லெஸ்டோன் அல்லது சாரா கிளென், லின்சே சுமித், லாரன் பெல்.
தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், அன்னெரி டெர்க்சன், மரிஜானே காப், சினாலோ ஜப்தா, குளோயி டிரையான், நடினே டி கிளெர்க், மசபதா கிளாஸ், அயாபோங்கா காகா, மிலாபா.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- 6 போட்டிகளில் 308 ரன்கள் விளாசியுள்ளார்.
- நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. பீல்டிங் செய்தபோது இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டது. இதனால் வியாழக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் மகளிர் உலக கோப்பையின் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் விளையாடி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.
பிரதிகா ராவல் ஸ்மிரிதி மந்தனாவுடன் இணைந்து தொடக்க பேட்டராக சிறப்பாக விளையாடி வந்தார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார். 6 போட்டிகளில் 308 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.33 ஆகும்.
பிரதிகா ராவல் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷும் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கெதிராக அவர் விளையாடவில்லை.
- முதலில் விளையாடிய நியூசிலாந்து 168 ரன்னில் சுருண்டது.
- இங்கிலாந்து 29.2 ஓவரில் சேஸிங் செய்தது.
மகளிர் உலக கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் போடடியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 168 ரன்னில் சுருண்டது.
இங்கிலாந்து அணியின் லின்செ ஸ்மித் 3 விக்கெட்டும் நாட் ஸ்சிவர்-ப்ரன்ட், அலிஸ் கேப்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி தொடக்க பேட்டர் ஜார்ஜியா பிலிம்மர் அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். அமெலியா கெர் 35 ரன்களும், கேப்டன் ஷோபி டிவைன் 23 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 29.2 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க பேட்டர் எமி ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார். டாமி பியூமோன்ட் 40 ரன்களும், ஹீதர் நைட் 33 ரன்களும் சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 7 போட்டிகளில் 5-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி, ஒன்றில் முடிவு இல்லை மூலமாக 11 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துளளது. நியூசிலாந்து ஒரு வெற்றி, 4 தோல்வி, 2 முடிவு இல்லை மூலம் 4 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.
- 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது தென்ஆப்பிரிக்கா.
- ஆஸ்திரேலியா 199 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்டராக களம் இறங்கிய கேப்டன் வால்வார்த் 31 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் அலனா கிங் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்ஆப்பிரிக்கா பேட்டர்கள் திணறினர்.
அவர் ஏழு ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்க்க, தென்ஆப்பிரிக்கா 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 97 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா கேப்டனை தவிர்த்து விக்கெட் கீப்பர் ஜாஃப்டா 29 ரன்களும், நடின் டி கிளெர்க் 14 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அந்த அணி 16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து, 199 பந்துகள் மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஏழு போட்டிகளில் 6-ல் வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து மூலம் 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் காலிறுதியில் வருகிற 30ஆம் தேதி மோத வாய்ப்புள்ளது.
- வீராங்கனைகள் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் அத்துமீறல்.
- ஆஸ்திரேலிய அணி மானேஜர் புகார் அளிக்க, போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
மகளிர் உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த புதன்கிழமை இங்கே ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான போட்டி நடைபெற்றது. இன்று தனது கடைசி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதனால் ஆஸ்திரேலியா அணி போட்டி முடிந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்து மறுநாள், வியாழக்கிழமை ஆஸ்திரேலியா வீராங்கனைகள் இருவர், தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அருகில் உள்ள கஃபே-க்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளனர்.
அப்போது வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளார். அவர்கள் அருகில் வந்த வாலிபர், விரும்பத்தகாத வகையில் தொட்டுள்ளார். வீராங்கனைகள் சுதாரிப்பதற்குள் அந்த இடத்தில் இருந்து அவர் தப்பி சென்றுவிட்டார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு மானேஜர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இரு வீராங்கனைளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர்.
மோட்டார் சைக்கிளின் நம்பரை வைத்து, போலீசார் குற்றவாளியை பிடித்துள்ளனர்.






