என் மலர்
நீங்கள் தேடியது "Indian Women Cricket"
- இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின.
- பார்வை மாற்றுத்திறனாளி டி-20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம்.
பார்வையற்றோர் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், பார்வை மாற்றுத்திறனாளி டி-20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவுது:-
முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற நமது அற்புதமான பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
துணிச்சல் வழிநடத்தும்போது வரலாறு படைக்கப்படுகிறது.
சாம்பியன் பட்டம் வென்ற மகளிர் அணி இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு உத்வேகமாகவும் உயர்ந்து நிற்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடி பாராட்டுகளை தெரிவித்தார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் ராஜ்பவனில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் நேற்று மாலை பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர்.
அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடி பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர், பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டு வீராங்கனைகள் மகிழ்ந்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் ராஜ்பவனில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில்," 2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர்.
அணியை வாழ்த்திய ஜனாதிபதி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றைப் படைத்துள்ளதாகவும், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக மாறிவிட்டதாகவும் கூறினார்.
இந்த அணி இந்தியாவைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். அவர்கள் வெவ்வேறு பிராந்தியங்கள், வெவ்வேறு சமூகப் பின்னணிகள், வெவ்வேறு சூழ்நிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், என்றாலும் அவர்கள் ஒரே அணி - இந்தியா" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி, சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன.
இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.
இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கிறார்.
அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் டைட்டஸ் சாது ஆகியோரும் காயம் காரணமாக இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.

இருப்பினும் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி ஆகியோரும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், காஷ்வீ கௌதம், சினே ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசாப்னிஸ், ஸ்ரீ சரணி, சுசி உபாத்யாய்.
- முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது.
- இலங்கை அணியில் அதிகபட்சமாக நிலாக்சி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் சேர்த்தார்.
பல்லேகலே:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று கடைசி போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 75 ரன்கள் விளாசினார். ஷபாலி சர்மா 49 ரன்கள், பூஜா வஸ்திராகர் 56 ரன்கள் (நாட் அவுட்), யாஸ்திகா பாட்டியா 30 ரன்கள் எடுத்தனர்.

பூஜா வஸ்திராகர்
இதையடுத்து ஆடிய இலங்கை அணி 47.3 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில், அதிகபட்சமாக நிலாக்சி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் சேர்த்தார். கேப்டன் சமாரி அட்டபட்டு 44 ரன்களும், ஹாசினி பெரேரா 39 ரன்களும் சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என ஒருநாள் போட்டித் தொடரை முழுமையாக கைப்பற்றியது. கடைசி போட்டியின் சிறந்த வீராங்கனை மற்றும் இந்த தொடரின் சிறந்த வீராங்கனை என இரண்டு பரிசுகளையும் ஹர்மன்பிரீத் கவுர் தட்டிச்சென்றார்.
இதனால் பிசிசிஐ ரமேஷ் பவாரின் பதவியை நீட்டிப்பு செய்யவில்லை. புது பயிற்சியாளரை தேர்வு செய்ய முடிவு செய்தது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோர் விண்ணப்பம் செய்யலாம் என விளம்பரம் செய்தது. மேலும், பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட இடைக்கால தேர்வு கமிட்டியை நியமனம் செய்தது.
இவர்கள் நேற்று 10-க்கும் மேற்பட்டோரை நேர்காணல் செய்தனர். இதில் கேரி கிர்ஸ்டன், டபிள்யூ.வி. ராமன் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரை பரிந்துரை செய்தனர். இதில் கேரி கிர்ஸ்டன்தான் முன்னணியில் இருந்தார். ஆனால் டபிள்யூ.வி. ராமன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.
கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்படாததற்கு ஐபிஎல் தொடர்தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கேரி கிர்ஸ்டன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். பிசிசிஐ-யின் விதிப்படி பிசிசிஐ கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு அமைப்பில் சம்பளம் வாங்கும் நபர், இன்னொரு அமைப்பில் சம்பளம் வாங்க முடியாது.

இது ‘இரட்டை ஆதாயம்’ வரைமுறைக்குள் வரும். கேரி கிர்ஸ்டன் ஆர்சிபி-யின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக விரும்பாததால் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவியை இழந்துள்ளார்.
இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டிற்கும் இதே பிரச்சனை ஏற்பட்டதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரி கிர்ஸ்டன் தலைமை பயிற்சியாளராக இருக்கும்போது இந்தியா 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வெஸ்ட்இண்டீஸில் கடந்த மாதம் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. அரையிறுதி ஆட்டத்தில் சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜிக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.
இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்ததாக மிதாலி ராஜ் புகார் தெரிவித்தார். அதேநேரத்தில் தொடக்க வீராங்கனையாக தன்னை இறக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மிதாலி ராஜ் மிரட்டியதாகவும், அவர் தனிப்பட்ட சாதனைக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் ரமேஷ்பவார் குற்றம் சாட்டினார்.
ரமேஷ் பவாரை பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்கக்கூடாது என்று மிதாலியும், ரமேஷ் பவாரை பயிற்சியாளராக தொடர செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் சிங், மந்தனா ஆகியோரும் வற்புறுத்தினார்கள். இந்த சர்ச்சையால் ரமேஷ் பவாரின் இடைக்கால பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான டயானா எடுல்ஜி மறைமுகமாக ரமேஷ் பவாருக்கு ஆதரவு தெரிவித்தார். வீராங்கனைகள் தேர்வு குறித்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்று டயானா எடுல்ஜி கூறினார்.
அத்துடன் கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளின்படி இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டதுபோல் இந்திய பெண்கள் அணிக்கும் பயிற்சியாளரை நியமனம் செய்தால் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து வெளிநாட்டினர் உள்பட 28 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியான 10 பேருக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த இறுதி பட்டியலில் கேரி கிர்ஸ்டன், கிப்ஸ் (இருவரும் தென்ஆப்பிரிக்கா), இடைக்கால பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார், டபிள்யூ.வி. ராமன், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் (4 பேரும் இந்தியா), டிரென்ட் ஜான்ஸ்டன் (அயர்லாந்து) மார்க் கோலெஸ், மாஸ்கரனாஸ் (இருவரும் இங்கிலாந்து), பிராட் ஹாக் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியால் நியமிக்கப்பட்ட இடைக்கால தேர்வு கமிட்டியினர் கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் இறுதிபட்டியலில் இடம் பிடித்துள்ள 10 பேரிடமும் நேர்காணல் நடத்தினார்கள்.






