என் மலர்
நீங்கள் தேடியது "INDWvSLW"
- டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 269 ரன்கள் எடுத்தது.
கவுகாத்தி:
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் கவுகாத்தியில் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு பிரதிகா ராவல், ஹர்லின் தியோல் ஜோடி 67 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 37 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்லின் தியோல் 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின், பெய்த மழை காரணமாக போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 124 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்தது.
7வது விக்கெட்டுக்கு இணைந்த தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். 83 ரன்கள் சேர்த்த நிலையில் அமன்ஜோத் கவுர் 57 ரன்னில் வெளியேறினார். தீப்தி சர்மா 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ஸ்ரே ரானா அதிரடியாக ஆடி 15 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 28 ரன்கள் குவித்தார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டும், பிரபோதினி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய இலங்கை 59 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 7.2 ஓவரில் 60 ரன்கள் எடுத்து வென்றது.
போட்செப்ஸ்ட்ரூம்:
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
2-வது சுற்றில் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் என்ற அடிப்படையில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சூப்பர் சிக்சில் தனது இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை நேற்று எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. விஷ்மி குணரத்னே அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் பர்ஷவி சோப்ரா 4 விக்கெட்டும், மன்னட் காஷ்யப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய இந்தியா 7.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சவுமியா திவாரி 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.
- முதலில் ஆடிய இந்தியா 165 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 167 ரன்கள் எடுத்து வென்றது.
தம்புல்லா:
9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 60 ரன்கள் குவித்து அவுட்டானார். ரிச்சா கோஷ் 30 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார்.
ஹர்ஷிகா சமரவிக்ரமா பொறுப்புடன் ஆடி 69 ரன்கள் அடித்தார்.
இறுதியில் இலங்கை அணி 18.4 ஓவரில் 2விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
5 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இந்தியா 172 ரன்கள் அடித்தது.
- ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரித் கவுர் அரை சதம் விளாசினர்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் அடித்தது.
தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா-மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசினார். ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரைசதம் விளாசி 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 90 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி தலா 3 விக்கெட்டும், ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் இந்திய மகளிர் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3-வது மற்றும் 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகித்தது.
இன்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீராங்கனைகள் மிதாலி ராஜ் (12), மந்தனா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார்.
அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 18.3 ஓவரில் 156 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் ஸ்ரீவர்தனே, பெர்னாண்டோ தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 105 ரன்னில் இலங்கை சுருண்டது. இதனால் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-0 எனக் கைப்பற்றியது.
தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3-வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றது.

இந்நிலையில் 4-வது ஆட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. இலங்கை வீராங்கனை ஸ்ரீவர்தனே அதிகபட்சமாக 32 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இந்திய வீராங்கனை அனுஜா பட்டீல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52), அனுஜா பட்டீல் (54) அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடரை கைப்பற்றியதுடன் 3-0 என முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.






