என் மலர்
நீங்கள் தேடியது "Alyssa Healy"
- ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
- இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள்.
புதுடெல்லி:
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.
ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஏலத்தில் நட்சத்திர ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
ஜாம்பவான் வீராங்கனையான அவரை எந்த அணியும் ஏலம் எடுக்காதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அலிசா ஹீலி தலைமையில் ஆஸ்திரேலிய அணி ஆறு முறை உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
- இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் அடித்து அவுட்டானார்.
- அரையிறுதி போட்டியிலும் லாரா வோல்வார்ட் சதம் அடித்திருந்தார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப்போட்டியில் கடைசி வரை தனி ஒருவனாக போராடிய தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் அடித்து அவுட்டானார். முன்னதாக அரையிறுதி போட்டியிலும் அவர் சதம் அடித்திருந்தார். மொத்தமாக இந்த தொடரில் 571 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம் மகளிர் உலக கோப்பையில் ஒரு சீசனில் அதிக (571) ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் லாரா வோல்வார்ட் படைத்தார்.
மகளிர் உலக கோப்பையில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் லாரா வோல்வார்ட்டுக்கு அடுத்த இடங்களில் அலிசா ஹீலி - 509 (2022) மற்றும் ராக்கேல் ஹெயின்ஸ் - 497 (2022) ஆகியோர் உள்ளனர்.
- இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன்.
- தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது.
மும்பை:
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹெலி,
இந்த போட்டி மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் இந்த தோல்விக்கு நாங்கள் தான் காரணம் எங்களுடைய அணியின் பேட்டிங்கை நாங்கள் சிறப்பாக முடிக்கவில்லை. இதே போல் எங்களுடைய பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. சில கேட்ச்களையும் நாங்கள் தவறவிட்டோம்.
இறுதியில் தோல்வியை தழுவியது மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. பல வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை. அதற்கு நானும் ஒரு காரணம் என்று தான் சொல்வேன்.
இந்த இலக்கை நிர்ணித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். கூடுதலாக சில ரன்ளை அடித்திருக்க வேண்டும். இந்தியா வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டார்கள். நெருக்கடியான சமயத்தில் அபாரமாக பேட்டிங் செய்து வெற்றியை தாண்டி விட்டார்கள்.
தோல்வி அடைந்து பேசும் இடத்தில் நான் இருப்பது கொஞ்சம் வினோதமாக தான் இருக்கின்றது. இனி அடுத்த உலக கோப்பை நோக்கி திட்டங்களை தீட்ட வேண்டியது தான். அடுத்த உலகக்கோப்பை நிச்சயம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் கண்டிப்பாக அடுத்த உலகக் கோப்பையில் நான் விளையாட மாட்டேன்.
மகளிர் கிரிக்கெட் விளையாடுவதில் எங்களுக்கு பெருமை . ஆனால் இந்த போட்டியில் தோல்விக்கு நாங்கள்தான் காரணம். கண்டிப்பாக எங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.
என்று அலிசா ஹெலி தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த ஆட்டத்தில் 73 பந்துகளில் சதத்தை எட்டினார்.
- உலக கோப்பை போட்டிகளில் அலிசா ஹீலியின் 4-வது சதமாக இது பதிவானது.
விசாகப்பட்டினம்:
13-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின.
முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த ஆட்டத்தில் 73 பந்துகளில் சதத்தை எட்டினார். பெண்கள் உலக கோப்பை வரலாற்றில் ஒரு வீராங்கனையின் 2-வது அதிவேக சதம் இதுவாகும். வெஸ்ட்இண்டீசின் டியான்ட்ரா டோட்டின் 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 71 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக தொடருகிறது.
உலக கோப்பை போட்டிகளில் அலிசா ஹீலியின் 4-வது சதமாக இது பதிவானது. உலக கோப்பையில் அதிக சதம் விளாசிய வீராங்கனைகளின் பட்டியலில் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் நாட் சிவெர் (5 சதம்) உள்ளார்.
- மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
- இதுவரை 6 முறை உலகக்கோப்பையை ஆஸ்திரேலுயா அணி வென்றுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற இருந்தது. இத்தொடருக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்ற நிலையில், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி அறிவித்திருந்தது.
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் நடந்தது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே இருந்தது.
இதனையடுத்து மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் இதில் போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதுவரை 6 முறை உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணியானது, ஏழாவது முறையாக மீண்டும் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
அதன்படி அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணியின் துணை கேப்டனாக தஹ்லியா மெக்ராத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:
அலிசா ஹீலி (கே), டார்சி பிரௌன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், டெய்லா விலேமின்க், ஜார்ஜியா வேர்ஹாம்
- இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது.
- சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
இப்போட்டியில் கொன்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி இடையேயான மோதல் பெரும் பரபரப்பை கிளப்பியது. சாம் கொன்ஸ்டாஸை இந்திய வீரர் விராட் கோலி வேண்டுமென்றே இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து விராட் கோலிக்கு ஐசிசி அபராதம் விதித்தது.
இந்நிலையில் அனுபவ வீரரான விராட் கோலி அறிமுக வீரரிடம் இதுபோல் நடந்து கொண்ட சம்பவம் கண்டனங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
இந்த நிகழ்வின் போது விராட் எங்கு நடக்கிறார் என்று பாருங்கள். விராட் வலது பக்கமாக நடந்து அந்த மோதலை ஏற்படுத்தினார். அதனால் இதில் அவர் மீது தான் தவறு என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இந்நிகழ்வு குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலீசா ஹீலி, "இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது. உங்கள் அனுபவமிக்க வீரர், நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
இது உண்மையில் ஒரு அணியின் சிறந்த செயல் அல்ல. ஆனால் இந்திய அணி அதை அணுக விரும்பும் ஒரு வழி என்றால், அப்படியே ஆகட்டும். ஆனால் அது கொன்ஸ்டாஸை சிறிதும் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
- அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது.
- மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் அவரது மனைவி அலீசா ஹீலி இருவரும் வித்தியாசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளனர்.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்திய போது சர்வதேச கிரிக்கெட் 700-வது விக்கெட்டாக அமைந்தது.
அதே வேளையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய நாட் ஷிவர் பிரண்ட் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனான அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது. நட்சத்திர கிரிக்கெட் தம்பதிகள் இருவரும் ஒரே நாளில் 287-வது போட்டியில் விளையாடியதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அலீசா ஹீலி 10 டெஸ்ட், 115 ஒருநாள், 162 டி20 போட்டிகளிலும், மிட்செல் ஸ்டார்க் 95 டெஸ்ட், 127 ஒருநாள், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






