என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச கிரிக்கெட்"

    • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்காளதேச அணி வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார்.
    • ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே கண்ணீர் விட்டு அழுதார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்காளதேச அணி வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே கண்ணீர் விட்டு அழுதார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    பிப்ரவரி 2007-ல் தமிம் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மேலும் வங்காளதேசத்திற்காக அதிக ஒருநாள் ரன்கள் (8313) மற்றும் சதங்கள் (14) அடித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் இக்பால் ஆவார்.

    • 15 சர்வதேச போட்டியில் மட்டுமே மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது
    • ரெய்னா, கோலி, ரோகித் ரன்கள் குவிக்க முடியாமல் தவித்தனர் என்றார் மனோஜ்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர், மனோஜ் திவாரி (Manoj Tiwary).

    வலது கர பேட்ஸ்மேனான திவாரி, அவ்வப்பொது லெக் ப்ரேக் பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் மட்டுமே அவரால் பங்கேற்க முடிந்து.

    2011 டிசம்பரில் தனது முதல் சர்வதேச சதத்தை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மனோஜ் பதிவு செய்தார். ஆனால், அதற்கு பிறகு அவர் பல போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    தற்போது 38 வயதாகும் மனோஜ், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் குறித்து பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனியை சந்திக்க நேர்ந்தால் நான் நிச்சயம் சில கேள்விகளை எழுப்புவேன். மேற்கிந்திய அணிக்கு எதிராக சதம் அடித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் "பிளேயிங் லெவன்"  வீரர்களில் என்னை சேர்க்கவில்லை.

    என் மீது தவறு ஏதும் இல்லாத போதும் என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என அவரிடம் கேட்பேன். குறிப்பாக, ஆஸ்திரேலியா-இந்தியா போட்டியில் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட பலரும் ரன்களை குவிக்க முடியாமல் தவித்தனர். நான் அந்த காலகட்டத்தில் சிறப்பாக விளையாடி வந்தேன்.

    ஆனால், அந்த போட்டிக்கு என்னை தவிர்த்தார் தோனி. அது ஏன் என அவரிடம் கேட்பேன்.

    14 போட்டிகளில் தொடர்ந்து நான் புறக்கணிக்கப்பட்டேன்.

    தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும் போது அதை எவரேனும் அழித்தால், அந்த நடவடிக்கையே விளையாட்டு வீரரை கொன்று விடும்.

    வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் நானும் கோலி அல்லது ரோகித் போன்று சிறப்பான வீரராக உருவெடுத்திருக்க முடியும்.

    தற்போது நான் இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. 

    இவ்வாறு திவாரி கூறினார்.

    12 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய மனோஜ் திவாரி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, முழு நேர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    • டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
    • ஆஸ்திரேலிய அணிக்காக 18995 ரன்களை வார்னர் எடுத்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் வங்காளதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் உதை வாங்கியது.

    இதனால் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் மோதிய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா அல்லது வெளியேறுமா என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்த நிலையில் அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    அவர் ஆஸ்திரேலியா 18995 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 49 சதம் அடங்கும். ஆஸ்திரேலிய அணி 2 ஒருநாள் உலகக் கோப்பைகள் வென்ற அணியில் வார்னர் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரு டி20 உலகக் கோப்பை அணியிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியிலும் வார்னர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களை கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளது.
    • புதிய முயற்சியிலும் அஸ்வின் மகத்தான வெற்றியை பெற வேண்டும்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அஸ்வினுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளித்துள்ளது. அஸ்வினின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களை கிரிக்கெட் விளையாட தூண்டியுள்ளது.

    புதிய முயற்சியிலும் அஸ்வின் மகத்தான வெற்றியை பெற வேண்டும். ஒவ்வொரு முயற்சியிலும் புத்திசாலித்தனத்தை வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது.
    • மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் அவரது மனைவி அலீசா ஹீலி இருவரும் வித்தியாசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளனர்.

    ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்திய போது சர்வதேச கிரிக்கெட் 700-வது விக்கெட்டாக அமைந்தது.

    அதே வேளையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய நாட் ஷிவர் பிரண்ட் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த நிலையில், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனான அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது. நட்சத்திர கிரிக்கெட் தம்பதிகள் இருவரும் ஒரே நாளில் 287-வது போட்டியில் விளையாடியதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அலீசா ஹீலி 10 டெஸ்ட், 115 ஒருநாள், 162 டி20 போட்டிகளிலும், மிட்செல் ஸ்டார்க் 95 டெஸ்ட், 127 ஒருநாள், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் சேர்த்து கேப்டனாக ரோகித் சர்மா 100-வது வெற்றியை பெற்றார்.
    • ஒருநாள் போட்டியில் 38 வெற்றியும், 20 ஓவர் போட்டியில் 50 வெற்றியும் கிடைத்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 228 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 231 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதன்படி வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ரன்களை ரோகித் கடந்தார்.

    அவர் இதுவரை 269 ஒருநாள் போட்டிகளில் 261 இன்னிங்சில் பேட்டிங் செய்து 32 சதம் உள்பட 11,029 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய உலக அரங்கில் 10-வது வீரர், இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி, சவுரவ் கங்குலி ஆகியோருக்கு அடுத்து 4-வது வீரர் ஆவார்.

    அத்துடன் விராட் கோலிக்கு (222 இன்னிங்ஸ்) அடுத்து இந்த ஸ்கோரை அதிவேகமாக எட்டிப்பிடித்த வீரர் என்ற சாதனையாளர் பட்டியலிலும் இணைந்தார்.

    மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் சேர்த்து கேப்டனாக ரோகித் சர்மா 100-வது வெற்றியை பெற்றார். முகமது அசாருதீன், டோனி, விராட் கோலிக்கு பிறகு மூன்று வடிவங்களிலும் கேப்டனாக 100 அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிகளைப் பெற்ற 4-வது இந்தியர் ரோகித்சர்மா ஆவார்.

    அவர் தலைமையில் டெஸ்டில் 12 வெற்றியும், ஒருநாள் போட்டியில் 38 வெற்றியும், 20 ஓவர் போட்டியில் 50 வெற்றியும் கிடைத்துள்ளது.

    ×