என் மலர்
நீங்கள் தேடியது "Manoj Tiwary"
- ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
- அந்த தொடருடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்றார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அந்த தொடருடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விடைபெற்றார்.
அதனை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சில அதிரடி மாற்றங்கள் அவ்வபோது இந்திய அணியில் நடந்து வருகிறது.
அந்த வகையில் வெளிநாட்டு தொடர்களில் இடம் கிடைக்காத விரக்தியில் அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ரோகித், விராட் ஆகியோர் ஒரே நாளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் மற்றும் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவை நீக்கி விட்டு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இப்படி இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் அரங்கேறி உள்ளது.
இந்நிலையில் சீனியர் வீரர்கர் அவர்களாகவே வெளியேறும் வகையிலான சூழலை கம்பீர் உருவாக்கினார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வுபெற கவுதம் கம்பீரே காரணம் மூத்த வீரர்கள் கம்பீரின் முடிவுகளை எதிர்க்கலாம் என்பதால் அவர்களாகவே வெளியேறும் வகையிலான சூழலை உருவாக்கினார்.
இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.
- டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் ஆக்ரோஷத்தைக் காட்டலாம்.
- நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அடுத்த தலைமுறை அதைக் கற்றுக்கொள்ளும்.
லண்டன்:
இந்திய டெஸ்ட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், விராட் கோலியின் ஆக்ரோஷமான பாணியை பின்பற்றுவதை செய்வதை நிறுத்திவிட்டு, தனது இயல்பான ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கேப்டன் சுப்மன் கில் விஷயங்களைக் கையாளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த காலத்தில் விராட் கோலி செய்ததை அவர் காப்பி அடிக்க முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அது அவரது பேட்டிங்கிற்கு உதவவில்லை.
அவர், "ஐபிஎல்-ல் கேப்டன் ஆனதிலிருந்தே, அவர் ஒரு ஆக்ரோஷமான மனநிலைக்குச் செல்வதையும், நடுவர்களுடன் காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவதையும் நான் கவனித்திருக்கிறேன். இது கில்லின் இயல்பு அல்ல. அவர் அந்த வகையான ஆக்ரோஷத்தைக் காட்டத் தேவையில்லை, எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் ஆக்ரோஷத்தைக் காட்டலாம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனிடம் இருந்து வெளிப்படும் இதுபோன்ற ஆக்ரோஷம் விளையாட்டுக்கு நல்லதல்ல.
ஸ்டம்புகளுக்கு அருகில் இருக்கும்போது ஆடியோவில் வரும் மொழி மற்றும் வார்த்தைகளில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். முந்தைய கேப்டன்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் இது ஒரு போக்காகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அடுத்த தலைமுறை அதைக் கற்றுக்கொள்ளும்.
என்று மனோஜ் திவாரி கூறினார்.
- 15 சர்வதேச போட்டியில் மட்டுமே மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது
- ரெய்னா, கோலி, ரோகித் ரன்கள் குவிக்க முடியாமல் தவித்தனர் என்றார் மனோஜ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர், மனோஜ் திவாரி (Manoj Tiwary).
வலது கர பேட்ஸ்மேனான திவாரி, அவ்வப்பொது லெக் ப்ரேக் பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் மட்டுமே அவரால் பங்கேற்க முடிந்து.
2011 டிசம்பரில் தனது முதல் சர்வதேச சதத்தை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மனோஜ் பதிவு செய்தார். ஆனால், அதற்கு பிறகு அவர் பல போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.
தற்போது 38 வயதாகும் மனோஜ், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் குறித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனியை சந்திக்க நேர்ந்தால் நான் நிச்சயம் சில கேள்விகளை எழுப்புவேன். மேற்கிந்திய அணிக்கு எதிராக சதம் அடித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் "பிளேயிங் லெவன்" வீரர்களில் என்னை சேர்க்கவில்லை.
என் மீது தவறு ஏதும் இல்லாத போதும் என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என அவரிடம் கேட்பேன். குறிப்பாக, ஆஸ்திரேலியா-இந்தியா போட்டியில் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட பலரும் ரன்களை குவிக்க முடியாமல் தவித்தனர். நான் அந்த காலகட்டத்தில் சிறப்பாக விளையாடி வந்தேன்.
ஆனால், அந்த போட்டிக்கு என்னை தவிர்த்தார் தோனி. அது ஏன் என அவரிடம் கேட்பேன்.
14 போட்டிகளில் தொடர்ந்து நான் புறக்கணிக்கப்பட்டேன்.
தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும் போது அதை எவரேனும் அழித்தால், அந்த நடவடிக்கையே விளையாட்டு வீரரை கொன்று விடும்.
வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் நானும் கோலி அல்லது ரோகித் போன்று சிறப்பான வீரராக உருவெடுத்திருக்க முடியும்.
தற்போது நான் இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை.
இவ்வாறு திவாரி கூறினார்.

12 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய மனோஜ் திவாரி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, முழு நேர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள்.
- அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆர்வமில்லாதது போல் தெரிகிறது.
ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னையை கடைசி போட்டியில் தோற்கடித்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதனால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். அவர் இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 52 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சமமாக ஆர்சிபி அணியில் விளையாடவில்லை எனவும் அடுத்து வருடம் ஆர்சிபி அணியில் இருந்து மேக்ஸ்வெல்லை கழற்றி விட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னார் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாம் மேக்ஸ்வெல் பற்றி பேச வேண்டும். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடர் என்று வரும் போது மட்டும் அவருக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு இங்கே ஆர்வமில்லாதது போல் தெரிகிறது. குறிப்பாக அவுட்டானால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஏனெனில் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் சென்று விடுகிறது.
அதனால் ஜாலியாக இருந்து சிரித்து விட்டு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்வார். ஆனால் இறுதி முடிவு என்ன? நீங்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும். எனவே அவரை விட்டு ஆர்சிபி நகர வேண்டும். அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது என்ன பிரச்சனை என்பதை நாங்கள் இங்கே அமர்ந்து விவாதிக்கிறோம். ஆனால் அவர்கள் 6 வெற்றியுடன் தகுதி பெற்றதால் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையான முடிவு கோப்பை வெல்வதில் தான் இருக்கிறது. அது அவர்களிடம் இல்லாததால் அங்கே பிரச்சினை இருக்கிறது.
இவ்வாறு திவாரி கூறினார்.






