என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலக கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு 331 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
- இந்தியாவின் தொடக்க ஜோடி 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்தது.
- ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களும், பிரதிகா ராவல் 75 ரன்களும் விளாசினர்.
மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்தது.
ஸ்மிரிதி மந்தனா ஆட்டமிழந்ததும், பிரதிகா ராவல் 96 பந்தில் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுதது வந்த ஹர்லீன் தியோல் 42 பந்தில் 38 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்னில் வெளியேறினார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 21 பந்தில் 33 ரன்களும், ரிச்சா கோஷ் 22 பந்தில் 32 ரன்களும் சேர்க்க இந்தியா 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சுதர்லேண்டு 5 விக்கெட் சாய்த்தார். ஷோபி மொலினக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.






