என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இரண்டு 4 நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணி- பிசிசிஐ அறிவிப்பு
    X

    இரண்டு 4 நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணி- பிசிசிஐ அறிவிப்பு

    • ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கு எதிராக, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்(4 நாட்கள்) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி லக்னோவில் தொடங்க உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி உடனான இரண்டு 4 நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    சமீபத்தில் வெளியான தகவலின் படியே, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில், இந்திய அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், துணை கேப்டன், விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, யாஷ் தாகூர்.

    Next Story
    ×