என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை தகர்த்தது இலங்கை
- முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது.
- பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.
பல்லேகலெ:
டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை சார்பில் மதுஷனகா 3 விக்கெட்டும், தசுன் ஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இலங்கை அணியை 142 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அரையிறுதி செல்ல முடியும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 145 ரன்களைக் கடந்ததால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.
Next Story






