search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும்
    X

    பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும்

    • பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை 50 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 சந்திப்பு ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் இந்தியாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரிக்கு மானாமதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பாதைகள் செல்கிறது.

    மதுரை-திருச்சி அகல ரெயில் பாதை அமைக்கபட்ட காலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்படாமல் தென்மாவட்டங்களுக்கு காரைக்குடி-மானா மதுரை சந்திப்பு வழியாகத் தான் ரெயில்கள் இயக்கப்பட்டன. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது மானாமதுரையில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வசதி இருந்தது.

    இதுதவிர கேரளா மாநிலம் கொல்லம், பாலக்காடுக்கும் ரெயில் வசதி இருந்தது. அகல ரெயில் பாதை வந்த பிறகு பல ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரத்தில் இருந்து மானாமதுரை , காரைக்குடி வழியாக தினசரி பகல் நேரத்தில் சென்னைக்கு ரெயில் வசதி கிடையாது. தற்போது திருச்சி வரை வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சில ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி வரை விடப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு செல்கிறது.

    காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து தற்போது ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு கன்னியாகுமரியில் இருந்து பாண்டிசேரி வரை மின் பாதை வழிதடத்தில் நேரடியாக ரெயில்கள் செல்கிறது.

    எனவே சென்னையில் இருந்து காரைக்குடி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே துறைக்கும் மதுரை, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர்களுக்கும் மானாமதுரை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×