search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people"

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து உத்தரவு வந்தது.
    • இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சங்கர்(35). இவர் மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து சங்கருக்கு உத்தரவு வந்தது. ஆனால் அங்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி மாவட்டம் அமச்சியாபுரம் தெற்குதெரு காலனியை சேர்ந்த முத்து மனைவி மீனாட்சி(63). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மீனாட்சி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர் வார ச்சந்தை, கோபி பஸ் ஸ்டாப் சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக வெள்ளி த்திருப்பூர், கோபி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வெள்ளி திருப்பூர் பகுதி யைச் சேர்ந்த ராசு மகன் கண்ணன் (வயது 32), கோபி முடச்சூர் பகுதியை சேர்ந்த சிவனு மகன் பாலசுப்பி ரமணியம் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் வைத்தி ருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் பவானி கிருஷ்ணம்பாளையம் சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பவானியை சேர்ந்த மாணி க்கம் மகன் சவுந்தர்ராஜன்,

    கருங்கல்பாளையம் கந்தசாமி மகன் குணசேகரன் (49), கருங்கல்பா ளையம் காவிரி ரோடு மாணிக்கம் மகன் தேவராஜ் (42) ஆகியோர் மீது கருங்க ல்பா ளையம், பவானி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.

    மேலும் அவர்களிடமி ருந்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு டவுன் போலீசார் மளிகை கடைகள் , பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர்.
    • தாராராம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையி லை பொருள்கள் விற்பனை யை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதி யான சத்தி ரோடு, கொங்கல ம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள் , பெட்டிக்கடைகளில் சோத னை நடத்தினர்.

    அப்போது சத்தி ரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றின் அருகி ல் உள்ள பெட்டிக்கடையில் சோதனையிட்டதில் அங்கு தடைசெய்யப்பட்ட பான்ம சாலா, குட்கா உள்ளிட்ட அர சால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் 1.562 கிலோ கிராம் விற்பனை க்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 4,040 ஆகும்.

    இதையடுத்து பெட்டிக் கடை உரிமையாள ரான ஈரோ டு அடுத்துள்ள அவல்பூந்துறை பூவாண்டி வலசு பகுதியை சேர்ந்த மணி (59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல கொங்கலம்ம ன் கோவில் மேற்கு வீதியில் உள்ள ஜெனரல் ஸ்டோரில் சோதனை யிட்டதில் 1.489 கிலோ கிராம் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதன் மதிப்பு ரூ.20,770 ஆகும். இதையடுத்து டவுன் போலீசார் கடையின் உரிமை யாளரான ராமசாமி லைன் பகுதியை சேர்ந்த தாராராம் (38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • விவசாயிகள் 742 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
    • இதன் விற்பனை மதிப்பு ரூ. 17 லட்சத்து 30 ஆயிரத்து 450 ஆகும்.

    ஈரோடு:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச்சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று நடைபெற்ற கொள்முதல் ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 742 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.

    இதில் 60 கிலோ எடையிலான மூட்டை, முதல் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2,720-க்கும், அதிக பட்சமாக ரூ. 2,730-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் குறைந்த பட்சமாக ரூ.2,600-க்கும், அதிகபட்சமாக ரூ. 2,650-க்கும் விற்பனையானது. இதில் 38 ஆயிரத்து 520 கிலோ எடையிலான 642 நாட்டுச்சர்க்கரை மூட்டை கள் விற்பனையானது.

    இதன் விற்பனை மதிப்பு ரூ. 17 லட்சத்து 30 ஆயிரத்து 450 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பா ளர் தெரிவித்தார்.

    • காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
    • 2 பேரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னி மலை அருகே ஈங்கூரில் தனியா ருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் அலுவலக பணியாளராக பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி (47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த தொழிற்சாலையின் மற்றொரு கிளை அதே பகுதியான ஈங்கூர் பாலப்பாளையம் அருகே இயங்கி வருகிறது. தினமும் காலை ஈங்கூர் தொழிற்சாலையில் இருந்து அலுவலக ஊழியர்கள் பாலப்பாளையம் தொழிற்சா லைக்கு பணம் கொண்டு சென்று அங்கு பண பரிவர்த்தனை முடிந்த பிறகு மீண்டும் மாலையில் தொழிற்சாலைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    அதன்படி கடந்த 24-ந் தேதி மாலை வழக்கம் போல் நிறுவனத்தின் அலுவலக பணியாளர் சத்தியமூர்த்தி பாலப்பாளையம் தொழிற் சாலையில் பணப் பரிவர்த்தனை முடிந்த பின்னர் மீதி உள்ள ரூ.23 லட்சத்தை எடுத்துக் கொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான காரில் ஈங்கூர் தொழிற்சாலைக்கு கிளம்பி சென்றார்.

    பாலப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென எதிரே ஒரு காரில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி ஓட்டி சென்ற காரை வழிமறித்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து சத்தியமூர்த்தியை அதே காரில் கடத்தி சென்றனர்.

    இதனையடுத்து ரங்கம்பா ளையம் குறிஞ்சி நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தின் அருகே காரை நிறுத்தி சத்தியமூர்த்தியின் கை கால்களை கட்டி ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர். இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் முதற்கட்ட விசாரணையில் கொள்ளை யர்கள் நன்கு திட்டம் போட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே இந்த நிறுவனத்திற்கு நன்கு பழக்கமானவர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    குற்றவாளிகளை பிடிக்க சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் ஒரு கார் சென்றது பதிவாகி இருந்தது. சத்தியமூர்த்தியிடம் அந்த காரை காண்பித்து கொள்ளையர்கள் வந்த கார் இதுதானா என்று கேட்கப்பட்டது. அப்போது அவர் இதுதான் கார் என அடையாளம் காட்டினார். அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி னர்.

    அப்போது அந்த கார் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் விரைந்து சென்றனர்.

    அங்கு சென்று அந்த காருக்கு சொந்தமான நபரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், திருப்பூரில் பணியாற்றும் ஒருவர் பெயரை சொல்லி அவர் வர சொன்னதால் தான் வந்ததாக கூறினார். உடனடியாக திருப்பூர் விரைந்து சென்ற போலீசார் அவர் கூறிய நபரை கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

    அதாவது திருப்பூரில் வேலை பார்க்கும் அந்த நபர் கொள்ளை நடந்த அந்த தனியார் இரும்பு தொழிற்சாலையில் ஏற்கனவே பணிபுரிந்தவர் என தெரிய வந்தது. சில காரணங்களுக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த நபர் அந்த தொழி ற்சாலையில் இருந்து வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்தது. அதன் பிறகு அந்த நபர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    ஏற்கனவே அந்த நிறுவனத்தில் வேலை பார்த்ததால் அந்த நிறுவனத்தின் பணம் வரவு, செலவுகள், பணம் எப்போது கொண்டு செல்லப்படுகிறது. அதை யார் கொண்டு செல்கிறார்கள் போன்ற விவரம் அவருக்கு தெரிந்துள்ளது.

    இதனையடுத்து அவர் திட்டம் தீட்டி நண்பர்கள் உதவியுடன் இந்த துணிகர கொல்லையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் இந்த கொள்ளைக்கு இவர் தான் மூளையாக செயல்பட்டாரா? அல்லது வேறு யாரும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து முழுவதுமாக தகவல் தெரியவில்லை.

    தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் தான் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

    • உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • ரஞ்சித் தூக்கிப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்காள மாநிலம் திக் நகரை சேர்ந்தவர் பிரசாந்த்ஜித் பெளரி. இவரது மனைவி அர்ச்சனா பெளரி (32). கணவன், மனைவி இருவரும் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த ஒரு கார்மெண்ட்ஸ்சில் வேலை பார்த்து வந்தனர். விஜயமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ் புத்தாண்டு என்பதால் கம்பெனிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் கணவன் -மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பிரசாந்த்ஜித் கோபித்து கொண்டு வீட்டை விட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் இருந்த அர்ச்சனா பெளரி ஆத்தி ரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றினர்.

    உடனடியாக ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அர்ச்சனா பெளரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் கிளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மனைவி தங்கமணி.

    இவர்களுக்கு ஒரு மகளும், ரஞ்சித் (25) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். ரஞ்சித்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் கடந்த 3 வருடமாக ரஞ்சித் வயிற்று வலியால் அவதி அடைந்து அதற்கு மாத்திரை எடுத்து வந்தார். சம்பவத்தன்று ரஞ்சித்தின் தாய் மற்றும் தந்தை மகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    ரஞ்சித் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் மாலை ரஞ்சித்தின் பெற்றோர் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது கதவு தாழிடப்படாமல் சாத்தப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் ரஞ்சித் தூக்கிப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரஞ்சித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் கையில் கட்டை பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (49) என்பது தெரிய வந்தது.

    அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா ஆகியவை இருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் ஒரு கிலோ 919 கிராம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

    இதேப்போல் ஆசனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆசனூர் அரேப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் ஒரு நபர் கையில் பச்சை கலர் கட்டை பையுடன் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் கோவை மாவட்டம் மோப்பெரிபாளையம், தோட்ட சாலை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிர மணியம் (46) என்பது தெரியவந்தது.

    அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ், புகை யிலை பொருட்கள் பான் மசாலா இருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிர மணியத்தை கைது செய்தனர். 

    • 2 பேர் யானைகளை புகைப்படம் எடுத்தனர்.
    • வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாளவாடி ஆசனூர், டி.என்.பாளையம் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், மான், சிறுத்தை புலிகள் என பல்வேறு வன விலங்கு கள் வசித்து வருகின்றன.

    ஆசனூர் வனப்பகுதியில் மைசூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளதால் தினமும் கார், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் என ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கரும்பு களை ஏற்றி கொண்டு லாரி கள் அதிகளவில் சென்று வருகிறது.

    தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி சாலைகளை கடந்து செல்கிறது.

    சாலைகளில் உலா வரும் யானை கள் லாரிகளில் உள்ள கரும்புகளை பறித்து தின்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதே போல் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை துரத்துவதும் அடிக்கடி நடக்கிறது.

    இதேபோல் ஆசனூர், திம்பம் மற்றும் தாளவாடி வனப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் ரோட்டில் சுற்றி திரியும் யானைகளை படம் பிடித்து வருகிறார்கள்.

    மேலும் ஆபத்தை உணராமல் பலர் யானை முன்பு நின்று செல்பி எடுத்தும் வரு கிறார்கள். ஒரு சில நேர ங்களில் அவர்களை யானை விரட்டியும் வருகிறது.

    இதையடுத்து வனத்துறை யினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் வரு கிறார்கள்.

    இந்த நிலையில் ஆசனூர் வன சரகத்துக்குட்பட்ட வனப்பகுதி ரோட்டில் வன சரகர் சிவக்குமார் தலை மையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது காரப்பள்ளம் ஆசனூர் ரோட்டில் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்பி எடுத்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதி யில் யானைகள் கூட்டமாக கடந்து சென்றது. இதை யடுத்து அவர்கள் 2 பேர் யானைகளை புகைப்படம் எடுத்தனர். மேலும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி யதாகவும் கூறப்படுகிறது.

    இதை கண்ட வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி னர். இதில் அவர்கள் மைசூரில் இருந்து கோவை க்கு சென்றதும் யானை களுக்கு இடையூறு ஏற்படு த்தியதும், புகைப்படம் எடுத்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து யானைகளுக்கு தொந்தரவு செய்ததாக கூறி அவர்கள் 2 பேருக்கும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க ப்பட்டது.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, வனப்பகுதி களில் வாகன ங்களில் வரும் பொதுமக்கள் வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. மேலும் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க கூடாது.

    இதை மீறி பொதுமக்கள் யானைகளை புகைப்படம் எடுத்தாலும் அவைகளுக்கு தொந்தரவு தந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை பெருந்துறை போலீசார் தேடி வந்தனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை, நால்ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையை பரமசிவம் (வயது 58) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். கடையின் முன் பகுதியில் இரவு நேர காவலாளி மட்டும் இருந்துள்ளார்.

    நள்ளிரவு கடையின் பின்பகுதியில் மர்ம நபர்கள் துளையிட்டு நகைக்கடைக்குள் சென்று நகை வைத்திருக்கும் லாக்கர் அறையை திறக்க முயன்றனர்.

    அப்பொழுது அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் நகைக் கடை க்குள் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். அலாரம் அடிப்பதை கண்ட காவலாளி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம்கோயல், இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொ ண்டனர்.

    இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை பெருந்துறை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கேமிராவில் பதிவான உருவங்களை வைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் பெருந்துறை குன்னத்தூர் ரோடு, மருத்துவக் கல்லூரி யின் அருகே அமைந்துள்ள மேம்பாலத்தின் அருகில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டு இருப்பதாக பெருந்துறை போலீசார் தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் பெருந்துறை நகைக்கடையில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற விவரத்தை ஒப்புக்கொண்டனர்.

    மேலும் அவர்களை விசாரிக்கையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 47), விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பகுதியை சேர்ந்த வேலன் (வயது 45) என்பது தெரிய வந்தது.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் பெருந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

    • ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஆண்டவன் (60). இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    ஆண்டவன் டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை பார்த்து வந்தார். ஆண்டவனுக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு சரி வர கொடுக்காமல் செலவழித்து வந்துள்ளார். இதனை உஷா கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆண்டவன் வேலை விஷயமாக பெங்களூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு உஷா கணவருக்கு பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண்டவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). இவருக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    வெங்கடேசனுக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத–போது வெங்கடேசன் திடீரென தூக்குபோட்டு கொண்டார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவைபழைய சுங்கம் அருகே உள்ள அகஸ்டின் பேட்டையை சேர்ந்தவர் மணி (வயது 77).

    சம்பவத்தன்று இவர் கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள திருச்சி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மணி மீது ேமாதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த மணியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளி அருகே உள்ள பாலகணேசபுரத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (57).

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடவள்ளி - லிங்கனூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் ரங்கராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிருக்கு போராடிய ரங்கராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சுடுகாட்டில் போதை மருந்துகளை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் நேற்று இரவு முத்துப்பட்டிக்கு ரோந்து சென்றனர்.

    மதுரை

    மதுரையில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்கள் போதையின் பிடியில் சிக்கி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.

    மதுரையில் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட வருங்கால தலைமுறையை பாதிக்கும் போதைமருந்து கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமி ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் தலைமையில் போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை முத்துப்பட்டி சுடுகாட்டு பகுதியில் போதை மருந்துகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு முத்துப்பட்டிக்கு ரோந்து சென்றனர்.

    பாண்டியன் நகர் சுடுகாடு அருகே 10 பேர் கும்பல் போதை மருந்து, மாத்திரை, ஊசிகளுடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பி யது. அவர்களில் 2 வாலிபர்களை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 40 பாக்கெட் வலி நிவாரணி மருந்துகள், 5 ஊசி மருந்து, மாத்திரை அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியை சேர்ந்த ஆஷிக்அலி (26), சாலையூர் பக்கீர்மஸ்தான் மகன் சையதுமுகமதுஆஸ்பெக் (19) என்பது தெரியவந்தது.

    வலி நிவாரணி மருந்து, மாத்திரைகளை போதை மருந்தாக பயன்படுத்தி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விற்பனை செய்த மேற்கண்ட 2 வாலிபர்களையும் சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர்.

    மெடிக்கல் கடைகளில் பிரசவ கால வலி நிவாரணியாக சிறப்பு ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை டாக்டரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே வாங்க முடியும். ஒரு சில கும்பல் மருந்து கடைக்காரர்களிடம் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மேற்கண்ட ஊசி மருந்து மாத்திரைகளை வாங்கி, அவற்றை போதை மருந்தாக விற்பனை செய்து வருகிறது.

    இதன் அடிப்படையில் மதுரை நகர் முழுவதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுப்பிரமணியபுரத்தில் போதை மருந்து, மாத்திரைகளுடன் 2 பேரை கைது செய்துள்ளோம். மதுரையில் போதை மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

    ×