search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "were arrested for"

    • 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகை மீட்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கதிரம்பட்டி நஞ்சனாபுரம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ். இவரது மனைவி கமலா (54). நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள 3 வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சின்னமேடு நஞ்சனாபுரம் செல்லும் சாலையில் தங்கம் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கமலாவிடம் முகவரி கேட்பது போல அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் கமலா காலத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்து அங்கிருந்து தப்பினர்.

    ஈரோடு தாலுகா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் மோட்டார்சைக்கிளின் பதிவு எண் பதிவாகி இருந்தது. இதை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில்,

    வழிப்பறியில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம் மடத்து குளத்தை சேர்ந்த சூர்யா என்கிற ஜெகதீஷ் (27), திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதி பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (60) என தெரிய வந்தது

    இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகை மீட்கப்பட்டது. வழிப்பறிக்கு பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் கையில் கட்டை பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (49) என்பது தெரிய வந்தது.

    அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா ஆகியவை இருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் ஒரு கிலோ 919 கிராம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

    இதேப்போல் ஆசனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆசனூர் அரேப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் ஒரு நபர் கையில் பச்சை கலர் கட்டை பையுடன் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் கோவை மாவட்டம் மோப்பெரிபாளையம், தோட்ட சாலை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிர மணியம் (46) என்பது தெரியவந்தது.

    அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ், புகை யிலை பொருட்கள் பான் மசாலா இருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிர மணியத்தை கைது செய்தனர். 

    • கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • செந்தில்குமார் சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கே.என்.கே. ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பதும், சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    அதேபோல மூலப்பட்டறை பகுதியில் உள்ள பேக்கரி அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் மூலப்பட்டறை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் (35) என்பதும், 6 மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேர் மீதும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பெருந்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் ஒருவர் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து 4 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • அவர்களிடம் இருந்து 33 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு வடக்கு, கோபி, அந்தியூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து 4 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 33 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.
    • அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியம ங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கட்டப்பை ஒன்று வைத்திருந்தார்.

    அதனை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 3.480 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் கோபி தாலுகா, பெருமுகை, காந்தி நகரை சேர்ந்த முருகன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் முருகன் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3,480 ஆகும். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோல் கொடுமுடி அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்றதாக சரளா என்ப வரை போலீசார் கைது செய்தனர். அவரிட மிருந்து 23 புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேப்போல் வீரப்பன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் பாக்கெட்டை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த முத்துபாண்டி (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    மரப்பாலம், பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியது.

    விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி (54), சாகுல் ஹமீது (54), ஆனந்தகுமார் (62), மற்ெறாரு சாகுல் ஹமீது (45), பாபு (59), மாரியப்பன் (42), மைதீன் (44), முஸ்தபா (45) ஆகியோர் என்பதும், பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டும், ரூ. 4,200 பணமும் பறிமுதல் செய்தனர்.

    ×