

ஈரோடு:
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு வடக்கு, கோபி, அந்தியூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து 4 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 33 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.