search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு விபத்தில்முதியவர் உள்பட 2 பேர் பலி
    X

    வெவ்வேறு விபத்தில்முதியவர் உள்பட 2 பேர் பலி

    • பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவைபழைய சுங்கம் அருகே உள்ள அகஸ்டின் பேட்டையை சேர்ந்தவர் மணி (வயது 77).

    சம்பவத்தன்று இவர் கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள திருச்சி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மணி மீது ேமாதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த மணியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளி அருகே உள்ள பாலகணேசபுரத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (57).

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடவள்ளி - லிங்கனூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் ரங்கராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிருக்கு போராடிய ரங்கராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×