search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பேர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    2 பேர் தூக்குபோட்டு தற்கொலை

    • ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஆண்டவன் (60). இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    ஆண்டவன் டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை பார்த்து வந்தார். ஆண்டவனுக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு சரி வர கொடுக்காமல் செலவழித்து வந்துள்ளார். இதனை உஷா கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆண்டவன் வேலை விஷயமாக பெங்களூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு உஷா கணவருக்கு பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண்டவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). இவருக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    வெங்கடேசனுக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத–போது வெங்கடேசன் திடீரென தூக்குபோட்டு கொண்டார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×