search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fined for"

    • 2 பேர் யானைகளை புகைப்படம் எடுத்தனர்.
    • வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாளவாடி ஆசனூர், டி.என்.பாளையம் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், மான், சிறுத்தை புலிகள் என பல்வேறு வன விலங்கு கள் வசித்து வருகின்றன.

    ஆசனூர் வனப்பகுதியில் மைசூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளதால் தினமும் கார், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் என ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கரும்பு களை ஏற்றி கொண்டு லாரி கள் அதிகளவில் சென்று வருகிறது.

    தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வெளியேறி சாலைகளை கடந்து செல்கிறது.

    சாலைகளில் உலா வரும் யானை கள் லாரிகளில் உள்ள கரும்புகளை பறித்து தின்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதே போல் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை துரத்துவதும் அடிக்கடி நடக்கிறது.

    இதேபோல் ஆசனூர், திம்பம் மற்றும் தாளவாடி வனப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் ரோட்டில் சுற்றி திரியும் யானைகளை படம் பிடித்து வருகிறார்கள்.

    மேலும் ஆபத்தை உணராமல் பலர் யானை முன்பு நின்று செல்பி எடுத்தும் வரு கிறார்கள். ஒரு சில நேர ங்களில் அவர்களை யானை விரட்டியும் வருகிறது.

    இதையடுத்து வனத்துறை யினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் வரு கிறார்கள்.

    இந்த நிலையில் ஆசனூர் வன சரகத்துக்குட்பட்ட வனப்பகுதி ரோட்டில் வன சரகர் சிவக்குமார் தலை மையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது காரப்பள்ளம் ஆசனூர் ரோட்டில் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்பி எடுத்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதி யில் யானைகள் கூட்டமாக கடந்து சென்றது. இதை யடுத்து அவர்கள் 2 பேர் யானைகளை புகைப்படம் எடுத்தனர். மேலும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி யதாகவும் கூறப்படுகிறது.

    இதை கண்ட வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி னர். இதில் அவர்கள் மைசூரில் இருந்து கோவை க்கு சென்றதும் யானை களுக்கு இடையூறு ஏற்படு த்தியதும், புகைப்படம் எடுத்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து யானைகளுக்கு தொந்தரவு செய்ததாக கூறி அவர்கள் 2 பேருக்கும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க ப்பட்டது.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, வனப்பகுதி களில் வாகன ங்களில் வரும் பொதுமக்கள் வன விலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. மேலும் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க கூடாது.

    இதை மீறி பொதுமக்கள் யானைகளை புகைப்படம் எடுத்தாலும் அவைகளுக்கு தொந்தரவு தந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×