search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "committed suicide by hanging"

    • திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல், வித்யா நகரை சேர்ந்தவர் திலகவதி (71). இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மகள் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    திலகவதி மட்டும் வித்யா நகரில் தனியாக வசித்து வந்தார். அவரை கவனித்து கொள்ளவும், வீட்டு வேலை கள் செய்யவும் காந்திமதி என்பவரை திலகவதியின் மகள் நியமித்து இருந்தார்.

    திலகவதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காந்திமதி ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.

    இதையடுத்து காந்திமதி ஜன்னல் வழியாக பார்த்த போது பேன் மாட்டும் கொக்கியில் திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரி சோதித்த டாக்டர் வரும் வழி யிலேயே திலகவதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திலகவதியின் மகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு சூரம்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சுரேஷ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகரா றில் ஈடுபட்டுள்ளார். இதே போல் நேற்றும் மது போதை யில் வீட்டுக்கு வந்த சுரேஷ் மனைவியையும், குழந்தை யையும் அடித்து வீட்டை வி ட்டு வெளியே துரத்தி விட்டு உள்ளே சென்று கதவை தாழ்யிட்டுகொண்டார்.

    நீண்ட நேரம் ஆகியும் கணவர் வெளியே வரா ததால் சந்தேகம் அடைந்த நித்தியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறை யில் சுரேஷ் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் எம்.எம்.கே. தெருவை சேர்ந்தவர் தாமரை க்கண்ணன் (24). ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் தாமரை கண்ணனுக்கு வலது காலில் புண் ஏற்பட்டு கடந்த 3 மாதமாகியும் ஆராத நிலையில் மிகுந்த மன வேதனைகள் இருந்து வந்துள்ளார்.

    சிகிச்சை எடுத்தும் குணமா கவில்லை. சம்பவத்தொன்று வீட்டில் தனியாக இருந்த தாமரைக்கண்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
    • வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்த் (27).

    தற்கொலை

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாததிற்கு முன்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்து பொத்தனூருக்கு வந்து விட்டார்.

    வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் அரவிந்த் வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அரவிந்த் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அரவிந்தை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விசாரணை

    இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வேலூர் அரசு மருத்துவ மனை யில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நரேஷ்குமார் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நைக்கான் காடு, கண்ணகி தெருவை சேர்ந்தவர் நரேஷ் குமார் (39). கேட்டரிங் மற்றும் சமையல் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் வயிற்று வலியை தாங்க முடியாமல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நரேஷ்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

    அவரை மீட்டு கோபி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வீட்டுக்கு வந்தார்.

    இதனையடுத்து நரேஷ்குமாருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.

    அவரது தாய் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நரேஷ்குமார் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே நரேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராம கிருஷ்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (77). இவர் தனது மகள் புஷ்பலதா வீட்டில் வசித்து வந்தார். ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு வயிற்று வலி இருந்து உள்ளது.

    வயிற்று வலிக்காக ராமகிருஷ்ணன் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு வாரமாக வயிற்று வலி அதிகமாக இருப்பதாக ராமகிருஷ்ணன் கூறி வந்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து அவர் குடித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு சாப்பிட்டு முடித்ததும் வீட்டில் உள்ள அறையில் ராமகிருஷ்ணன் தூங்க சென்றார். அவரது மகள் புஷ்பலதா மற்றொரு அறையில் தூங்கி கொண்டி ருந்தார்.

    அதி காலை 4 மணி அளவில் தந்தை படுத்து தூங்கிய அறையில் லைட் எரிந்ததால் என்னவென்று பார்க்க புஷ்பலதா அவரது அறைக்கு சென்றார்.

    அப்போது ராம கிருஷ்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராம கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராமசாமி கடையின் முன் உள்ள கேட்டின் இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மே ற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (70). கடந்த 5 வருடமாக பெருந்து றை மடத்துப்பா ளை யம் பிரிவு அருகே அமைந்துள்ள மோட்டார் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார்.

    மது பழக்கத்திற்கு அடிமையாகிய இவர் வேலைக்கு வரும் பொழுது மது அருந்தி வந்துள்ளார். மேலும் ராம சாமி வயிற்று வலி காரண மாக மருந்து மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று காலை ராமசாமி கடையின் முன் உள்ள கேட்டின் அருகே உள்ள இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு ந்து ள்ளார்.

    உடன் பணி புரிந்தவ ர்கள் இதைக்க ண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வ மனைக்கு அழைத்து சென்ற னர். அங்கு அ வரை பரிசோ தனை செய்த டாக்டர் ஏற்க னவே ராம சாமி இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த சம்ப வம் தொட ர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மே ற்கொண்டு வருகின்றனர்.

    • ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஆண்டவன் (60). இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    ஆண்டவன் டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை பார்த்து வந்தார். ஆண்டவனுக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு சரி வர கொடுக்காமல் செலவழித்து வந்துள்ளார். இதனை உஷா கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆண்டவன் வேலை விஷயமாக பெங்களூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு உஷா கணவருக்கு பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண்டவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). இவருக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    வெங்கடேசனுக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத–போது வெங்கடேசன் திடீரென தூக்குபோட்டு கொண்டார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×