search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

    • ராம கிருஷ்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (77). இவர் தனது மகள் புஷ்பலதா வீட்டில் வசித்து வந்தார். ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு வயிற்று வலி இருந்து உள்ளது.

    வயிற்று வலிக்காக ராமகிருஷ்ணன் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு வாரமாக வயிற்று வலி அதிகமாக இருப்பதாக ராமகிருஷ்ணன் கூறி வந்துள்ளார். இருந்தாலும் தொடர்ந்து அவர் குடித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு சாப்பிட்டு முடித்ததும் வீட்டில் உள்ள அறையில் ராமகிருஷ்ணன் தூங்க சென்றார். அவரது மகள் புஷ்பலதா மற்றொரு அறையில் தூங்கி கொண்டி ருந்தார்.

    அதி காலை 4 மணி அளவில் தந்தை படுத்து தூங்கிய அறையில் லைட் எரிந்ததால் என்னவென்று பார்க்க புஷ்பலதா அவரது அறைக்கு சென்றார்.

    அப்போது ராம கிருஷ்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராம கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×