search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "including old lady"

    • திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல், வித்யா நகரை சேர்ந்தவர் திலகவதி (71). இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மகள் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    திலகவதி மட்டும் வித்யா நகரில் தனியாக வசித்து வந்தார். அவரை கவனித்து கொள்ளவும், வீட்டு வேலை கள் செய்யவும் காந்திமதி என்பவரை திலகவதியின் மகள் நியமித்து இருந்தார்.

    திலகவதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காந்திமதி ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.

    இதையடுத்து காந்திமதி ஜன்னல் வழியாக பார்த்த போது பேன் மாட்டும் கொக்கியில் திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரி சோதித்த டாக்டர் வரும் வழி யிலேயே திலகவதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திலகவதியின் மகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு சூரம்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சுரேஷ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகரா றில் ஈடுபட்டுள்ளார். இதே போல் நேற்றும் மது போதை யில் வீட்டுக்கு வந்த சுரேஷ் மனைவியையும், குழந்தை யையும் அடித்து வீட்டை வி ட்டு வெளியே துரத்தி விட்டு உள்ளே சென்று கதவை தாழ்யிட்டுகொண்டார்.

    நீண்ட நேரம் ஆகியும் கணவர் வெளியே வரா ததால் சந்தேகம் அடைந்த நித்தியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறை யில் சுரேஷ் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் எம்.எம்.கே. தெருவை சேர்ந்தவர் தாமரை க்கண்ணன் (24). ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் தாமரை கண்ணனுக்கு வலது காலில் புண் ஏற்பட்டு கடந்த 3 மாதமாகியும் ஆராத நிலையில் மிகுந்த மன வேதனைகள் இருந்து வந்துள்ளார்.

    சிகிச்சை எடுத்தும் குணமா கவில்லை. சம்பவத்தொன்று வீட்டில் தனியாக இருந்த தாமரைக்கண்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×