search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "17 lakhs worth of"

    • விவசாயிகள் 742 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
    • இதன் விற்பனை மதிப்பு ரூ. 17 லட்சத்து 30 ஆயிரத்து 450 ஆகும்.

    ஈரோடு:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச்சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று நடைபெற்ற கொள்முதல் ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 742 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.

    இதில் 60 கிலோ எடையிலான மூட்டை, முதல் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2,720-க்கும், அதிக பட்சமாக ரூ. 2,730-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் குறைந்த பட்சமாக ரூ.2,600-க்கும், அதிகபட்சமாக ரூ. 2,650-க்கும் விற்பனையானது. இதில் 38 ஆயிரத்து 520 கிலோ எடையிலான 642 நாட்டுச்சர்க்கரை மூட்டை கள் விற்பனையானது.

    இதன் விற்பனை மதிப்பு ரூ. 17 லட்சத்து 30 ஆயிரத்து 450 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பா ளர் தெரிவித்தார்.

    ×