search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "including"

    • புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மறியல்
    • புதுச்சேரி நோக்கிச் சென்ற வாகனங்களும் ஸ்தம்பித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கோட்டகுப்பம் அடுத்த நடுக்குப்பம் மீனவ கிராம மக்கள் தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரி நேற்று புதுவை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மீனவர் களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தினால் புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வாகன ங்களும் சென்னை யில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற வாகனங்களும் ஸ்தம்பித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த மறியல் போராட்டம் சம்பந்தமாக கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் புகாரின் அடிப்படையில் நடுக்குப்பம் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகளான தேசப்பன், குப்புசாமி, அன்பு, ராமு, மாரியப்பன், ஜெயக்கொடி, மணிவண்ணன், மோகன்தாஸ், சுரேஷ் மற்றும் 76 பெண்கள் உள்ளிட்ட 153 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • வாலிபர்-இளம்பெண் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள மேட்டுதொட்டியக் குளத்தை சேர்ந்தவர் கணேசன்(32), கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி கவிதா. கணேசனுக்கு மது பழக்கம் இருந்தது. இதனால் சரிவர வீட்டு செலவுக்கு பணம் தரவில்லை. இதனால் கணேசனுக்கும், அவரது தந்தை சின்னணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்றும் இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கவிதா அவர்களை விலக்கி விட்டுள்ளார். இந்த நிலையில் கணேசன் ரெயில்வே கேட் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மனைவி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே செங்கமலப்பட்டியை சேர்ந்தவர்பாண்டியன், சவுதியில் வேலை பார்கி றார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் செல்வ சுபத்ரா.

    இவர் தனது உறவினரான லாரி டிரைவர் அய்யப்பனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அய்யப்பன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அப்போது அய்யப்பனின் தாய் குருவம்மாள், தந்தை பாண்டி ஆகியோர் செல்வ சுபத்ராவிடம் பிரச்சினை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமி யிடம் அவர் தெரிவித்தார். அவர் தனது உறவினரை அனுப்பி செல்வசுபத்ராவை அழைத்து வருமாறு கூறினார்.

    உறவினர் செல்வ சுபத்ராவின் வீட்டிற்கு சென்றபோது வீடு உள்பக்க மாக பூட்டி கிடந்தது. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்த போது செல்வசுபத்ரா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே பள்ளபட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள்(57). இவரது கணவர் மாரிமுத்துவை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குபே் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் உள்பட 2 பேரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதில் தொடர்புடைய கோழிகுமார், தனுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, நகைப்பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் 17 வயதுடைய இளைஞர்கள் தான் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    மதுரை ஆண்டாள் கொட்டாரம் கபீர் நகரை சேர்ந்தவர் முத்து கருப்பன் (வயது60). இவர் சம்பவத்தன்று அண்ணா நகரில் உள்ள ஆரம்ப சுகாதாரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூ.3 ஆயிரத்து 250-ஐ பறித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சென்னை வடபழனியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் பவித்ரன், திருநகர் 3-வது நிறுத்தம் நல்லான் மகன் ராஜேஷ் குமார் (37), திருப்பாச்சேத்தி ஆவாரங்காடு முருகன் என்ற குட்டை முருகன் (40), திண்டுக்கல் பேகம்பூர் சக்திவேல் மகன் சுபாஷ் (23) ஆகிய 4 பேர் முதியவரிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வில்லாபுரம் வேலுபிள்ளை தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மகன் செல்வம்(30). இவர் சம்பவத்தன்று நாகுபிள்ளை தோப்பு ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டதுமானாமதுரை ஆவாரங்காடு சிவசிங்கம் மகன் லட்சுமணன் (32),மானாமதுரை ஆவாரங்காடு சரவணகுமார் மகன் அகிலன் (22), சிவகங்கை திருப்புவனம் நந்தகோபால் மகன் கண்ணன் என்ற கேடி கண்ணன் (20), சிவகங்கை கலியநத்தூர் முருகன் மகன் நிதிஷ்குமார் என தெரியவந்தது.

    இவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கோழிகுமார், தனுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • ஆசிரியர்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள திருவேங்கடபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது50). இவரது 17 வயது மகன் 12ம் வகுப்பு செல்கிறார். அதற்காக சிறப்பு வகுப்பு களுக்கு சென்று கொண்டி ருந்தார்.

    சில நாட்களாக வகுப்புக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து வகுப்புக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.

    இந்தநிலையில் சீனிவாசனும், அவரது மனைவியும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மகன் வீட்டில் இல்லை. நண்பர்க ளிடம் விசாரித்தபோது வேறு நபருடன் ராஜ பாளையத்திற்கு சென்றதாக கூறினர். ஆனால் எங்கு சென்றார்? என கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகேயுள்ள தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது மகள் பிளஸ்-2 படிக்கிறார். அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை ஜெயலட்சுமி கண்டித்தார். இந்த நிலையில் இரவு தூங்கிக்கொண்டிருந்த மாணவியை அதிகாலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை.

    எங்கு சென்றார்? என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வச்சக்காரபட்டி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தறுமாறு ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் அருகேயுள்ள சிப்பிபாறையை சேர்ந்தவர் வெங்கடசாமி(63). இவர் அங்குள்ள தோட்டத்து பங்களா ஒன்றில் தங்கி யிருந்தார். இந்தநிலையில் திடீரென்று மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி முத்துலட்சுமி(38), நர்சிங் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் பேசி சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

    இந்தநிலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற முத்துலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் மரிய லியோஜன். இவரது மனைவி ரமணி(27). இவர் கணவருக்கு தெரியா மல் பெண் ஒருவரிடம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கியதாக ெதரிகிறது. இது தெரியவந்ததும் கணவர் கண்டித்தார்.

    இந்த நிலையில் கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விருதுநகர் அருகே வாலிபர்-தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினர்.
    • நாராயணதேவன் பட்டியை சேர்ந்த நாஞ்சில் (30) என்ற வாலிபரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார. இவரது மகன் கனகவேல் (18). இவர் உறவினர் மணிகண்டனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். மணிகண்டன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

    வாலிபர் பலி

    ஏ.ராமலிங்காபுரம் விலக்கு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் கனகவேலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

    பின்னர் மயக்கம் ஏற்பட்டதால் ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கனகவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொழிலாளி

    விருதுநகர் மாவட்டம் எம்.துரைச்சாமி புரத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது50). தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஓய்வு நேரத்தில் கடைகளுக்கு சென்று மிக்சர் பாக்கெட் விநியோகம் செய்வார். இந்த நிலையில் சைக்கிளில் சென்றவர் மயங்கி கீழே விழுந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூதாட்டி

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கீழப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (68). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் நாராயணதேவன் பட்டியை சேர்ந்த நாஞ்சில் (30) என்ற வாலிபரை கைது செய்தனர்.

    • முதியவர் உள்பட 3 பேரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜ்குமாரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை சத்தியசாய் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் சின்னமணி (வயது 29).இவர் சம்பவத்தன்று ெஜய்ஹிந்த்புரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் சின்னமணியை தாக்கி செல்போன்,ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

    எம்.கே.புரம் முத்துத்தேவர் தெருவை சேர்ந்தவர் பைசல் பாபா (28). இவர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு மின்வாரியம் அருகே நடந்து சென்றபோது, 17 வயதுடைய நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றான். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.

    எஸ்.எஸ்.காலனி காளிமுத்து நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாண்டி (68). இவர் பை-பாஸ் ரோட்டில் நடந்து சென்றபோது ஜார்க்கண்ட் மாநிலத்ைத சேர்ந்த சுராஜ்குமார் (21) உள்பட 2 பேர் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜ்குமாரை கைது செய்தனர். தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

    • முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் வேலுபிள்ளை தெருவை சேர்ந்தவர் அரிஹரன்(வயது59). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அரிஹரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநகர் 3வது ஸ்டாப் லயன் சிட்டியை சேர்ந்தவர் காளிராஜன். இவர் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் விரக்தியுடன் காணப்பட்டார். சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாழ்க்கையில் வெறுப்படைந்த காளிராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பெத்தானியாபுரம் பாத்திமாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (49).இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    பி.பி.குளம் முல்லைநகர் மாரிமுத்து மகன் வினோத்குமார்(30).இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாயார் சுமதி கொடுத்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

    • என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கட்டுமான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளி யங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவ ருடைய மகன் ஹரிஷ் குமார் (வயது 15). விருது நகரில் உள்ள ஒரு பள்ளி யில் 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.

    அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருைடய மகன் ரவிசெல்வம் (17). இவர் நரிக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஹரீஷ்குமாரும், ரவி செல்வமும், திருச்சுழி மேலேந்தல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டு மான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படு கிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஹரீஷ்குமார், ரவி செல்வம் பரிதாபமாக இறந்தனர். இவர்களது உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர்கள் உடலை உற வினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மாணவர்களின் உறவினர்கள் நரிக்குடி போலீசில் புகார் செய்தனர். அதனடிப்படையில் கட்டிட என்ஜினீயர் நெல்லையை சேர்ந்த ஜெயசீலன் ராஜா (29), மேற்பார்வையாளர் கட்டனூரை சேர்ந்த பால்சாமி மற்றும் பரமக்குடியை சேர்ந்த விஜயராகவன் ஆகிய 3 பேைர போலீசார் கைது செய்தனர்.

    • ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது44). ஓட்டல் வைத்துள்ளார். சம்பவத்தன்று கடைக்கு சாமான் வாங்குவதற்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இதைத்தொ டர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சுரேஷ்கு மாரின் மனைவி காளீஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் சந்திரகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராஜ். இவரது மகன் மாரீஸ்வரன் (24). இவர் ராமநாத புரத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஊருக்கு வந்து விட்டு கடந்த7-ந் தேதி மீண்டும் ராமநாதபுரம் சென்றார். ஆனால் ஜவுளி கடைக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டு ள்ளது. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொ டர்ந்து ஆம த்தூர் போலீஸ் நிலையத்தில் மகனை கண்டு பிடித்து தருமாறு சங்கர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா

    ரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 53). கூலி தொழிலாளி. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதில் காலில் காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் செல்வகுமாரின் ஒரு கால் அகற்றப்பட்டது. அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று மாலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கான்பாளையம் பூசாரி தோப்பை சேர்ந்தவர் மாரியப்பன் (57). சில வாரங்களுக்கு முன்பு இவர் பூர்வீக நிலத்தை விற்றுள்ளார். இது அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. மேலும் மாரியப்பனின் காலில் ஆறாத புண் உள்ளது.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மீனாம்பாள்புரம், சத்திய மூர்த்தி தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்திய டைந்த கார்த்திக் ராஜா, நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • வக்கீல்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயமாகினர்.
    • டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பஜனைகூடத் தெருவை சேர்ந்தவர் வக்கீல் சந்திரசேகரன் (வயது62). இவர் நேற்று சிவகாசி கோர்ட்டிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு செ ன்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி செந்தாமரை லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துராஜ் மாயமானார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டிலிருந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தூர் அமீர் பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (38). கேரளாவில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (24). சாத்தூர் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×