search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "were killed"

    • இளம்பெண், பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மூஞ்சிமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜ். இவரது மகள் ஜென்சி(வயது23). இவருக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. பெற்றோர் வீட்டில் இருந்து பி.எட் படித்து வந்தார்.

    படிப்பு முடிவை டைந்ததால் கணவர் வீட்டிற்கு செல்லுமாறு ஜென்சியிடம் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் கணவர் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

    இதனால் பெற்றோர் அவரை கண்டித்தனர். இந்த நிலையில் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் ஜோதிராஜ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் துர்காதேவி(38),பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது 15 வயது மகள் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துர்காதேவி வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.

    பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை. இதை தொடர்ந்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் துர்காதேவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி நாலூர் பகுதியை சேர்ந்தவர் நாகஜோதி(37). இவரது 17 வயது மகன் ஐ.டி.ஐ. படித்து விட்டு மதுரையில் வேலை பார்த்து வருகிறான். தினமும் வேலைக்கு பஸ்சில் சென்று வருகிறான். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தட்டனூர் போலீஸ் நிலையத்தில் நாகஜோதி புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூர்நோக்கு இல்ல சிறுவன்-கல்லூரி மாயமானார்கள்.
    • ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மல்லி புதூரில் சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருக்கும் சிறுவன் மாடியில் காய வைக்கப்பட்ட துணிகளை எடுத்து வருவதாக கூறி சென்றார். பின்னர் அவனை காணவில்லை. எங்கு சென்றார்? என தெரியவில்லை.

    இதுகுறித்து கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் திலகவதி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகள் காயத்ரி(19). விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தோழியுடன் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்ைல. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதுகுறித்து மாணவியின் தாய் இதயகனி கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை நெசவாளர்காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜனனி(28). குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கணவர் ராஜ்குமார் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வக்கீல்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயமாகினர்.
    • டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பஜனைகூடத் தெருவை சேர்ந்தவர் வக்கீல் சந்திரசேகரன் (வயது62). இவர் நேற்று சிவகாசி கோர்ட்டிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு செ ன்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி செந்தாமரை லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துராஜ் மாயமானார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டிலிருந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தூர் அமீர் பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (38). கேரளாவில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (24). சாத்தூர் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
    • மோட்டார் சைக்கிளில் அவினாசி- கோவை ரோட்டில் சென்றனர்.

    நீலாம்பூர்

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் இவரது மகன் கவுதம் (வயது 22). விக்னேஷ் (22).

    நேற்று இரவு 9.30 மணியளவில் இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அவினாசி- கோவை ரோட்டில் சென்றனர். மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிளில் கணியூர் மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் கவுதம், விக்னேஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது விக்னே ஷ் பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்சு ஊழி யர்கள் உயிருக்கு போராடிய கவுதமை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள். பலியான விக்னேஷ் நாமக்கல் எஸ்.பி. புதூரை சேர்ந்தவர். 

    • அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ரோட்டில் கவிழ்ந்தது.
    • சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனை களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள புது கொத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உள்பட 27 பேர் ஒரு வேனில் தாண்டாம்பாளையம் கிராமத்திற்கு கறி விருந்துக்கு சென்றனர். வேனை சல்மான் என்பவர் ஓட்டி வந்தார்.

    தொடர்ந்து அவர்கள் விருந்தை முடித்துக்கொண்டு மீண்டும் வேனில் சத்திய மங்கலத்துக்கு வந்து கொண்டு இருந்தனர்.

    அவர்கள் சத்தியமங்கலம் அடுத்த தாண்டாம்பாளையம் டி.என்.ஆர். நகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் சில தொழிலா ளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். மேலும் இதில் கட்டிட பெண் தொழிலாளர்கள் கவிதா (30), ஜோதி (50) ஆகிய 2 பெண்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    மேலும் வேனில் வந்த கலைவாணி (38), முரளி (36), அம்ச வாணி (42), சுமதி (21), சேகர் (30), அமுதா (28), லட்சுமி (50), கார்த்தி (25), ரம்யா (28), கண்ணம்மாள் (60) செல்வி (30) பரமசிவன் (46) உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனை களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    ×