என் மலர்
நீங்கள் தேடியது "Van overturned"
- போலீசார் பள்ளத்தில் இருந்த வேனை தனியார் கிரேன் மூலம் மீட்டனர்.
- போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
செல்லிப்பட்டு பகுதியில் இருந்து இன்று காலை பத்துக்கண்ணு நோக்கி குப்பை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது.
அம்மணக்குப்பம் பகுதியில் இடது புறம் ஒதுங்கும்போது சாலையின் ஓரத்தில் இருந்த மண் சறுக்கி பள்ளத்துக்குள் வேன் பாய்ந்தது. இதில் குப்பை வேன் பல்டி அடித்து தலை குப்புற கவிழ்ந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வேனுக்குள் காயத்துடன் சிக்கித் தவித்த டிரைவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்
தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வில்லியனூர் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசார் பள்ளத்தில் இருந்த வேனை தனியார் கிரேன் மூலம் மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் குப்பைவேனை ஒட்டி வந்தவர் வாதானூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன்(31) என்பதும், வேகமாக குப்பை வேனை ஓட்டி வந்ததால் விபத்துக்கு காரணமாக இருந்ததும் தெரிய வந்தது. இந்த விபத்துக்கு குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கார் மோதி பெண் பரிதாப சாவு; வேன் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவை சேர்ந்தவர் பாண்டி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்லம்மாள்(வயது35). இவர் நேற்று மாலை அட்டப்பட்டி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக செல்லம்மாள் மீது மோதியது. அதே வேகத்தில் கார் ரோட்டில் இருந்து வயலில் புகுந்தது.

பலியான செல்லம்மாள்
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேங்கையன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மேலூர் ராஜேந்தி ரன் என்பவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனது உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் லால்குடிக்கு வேனில் சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று இரவு வேனில் விஜய குமார் மற்றும் குடும்பத்தினர் ஊருக்கு புறப்பட்டனர். வேனை இசக்கிமுத்து என்பவர் ஓட்டி வந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் நடுவே மாடு சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை திருப்பினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பஸ் நிறுத்தம் முன்பு தலைக்குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்த வர்கள் கூக்குரலிட்டனர். உடனே அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் விஜயகுமார், வெங்கடேஷ், பால்ராஜ் மற்றும் பெண்கள் என 13 பேர் காயமடைந்தனர். இவர்கள் மேலூர் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நேற்று மாலை பெருமா ள்மலைக்கு இவர்கள் 3 பேரும் ஒரு வேனில் வந்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
- பி.எல்.செட் பகுதியில் வேன் திடீரென நிலைதடு மாறி 200 பள்ளத்தில் கவிழ்ந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகில் உள்ள வடகவுஞ்சி ஜீவா நகரை சேர்ந்தவர் கமல நாதன் (வயது50). இவரது மகன்கள் ராபட்சாலமன் (28), யோவான் (26). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது.
நேற்று மாலை பெருமா ள்மலைக்கு இவர்கள் 3 பேரும் ஒரு வேனில் வந்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை யோவான் ஓட்டிச் சென்றார். பி.எல்.செட் பகுதியில் வேன் திடீரென நிலைதடு மாறி 200 பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேன் சுக்குநூறாக உடைந்து உள்ளே இருந்த கமலநாதன் மற்றும் ராபட்சாலமன் ஆகியோர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். காயம் அடைந்த யோவான் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கொடை க்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ரோட்டில் கவிழ்ந்தது.
- சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனை களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்துள்ள புது கொத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் உள்பட 27 பேர் ஒரு வேனில் தாண்டாம்பாளையம் கிராமத்திற்கு கறி விருந்துக்கு சென்றனர். வேனை சல்மான் என்பவர் ஓட்டி வந்தார்.
தொடர்ந்து அவர்கள் விருந்தை முடித்துக்கொண்டு மீண்டும் வேனில் சத்திய மங்கலத்துக்கு வந்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் சத்தியமங்கலம் அடுத்த தாண்டாம்பாளையம் டி.என்.ஆர். நகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ரோட்டில் கவிழ்ந்தது.
இதில் சில தொழிலா ளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். மேலும் இதில் கட்டிட பெண் தொழிலாளர்கள் கவிதா (30), ஜோதி (50) ஆகிய 2 பெண்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் வேனில் வந்த கலைவாணி (38), முரளி (36), அம்ச வாணி (42), சுமதி (21), சேகர் (30), அமுதா (28), லட்சுமி (50), கார்த்தி (25), ரம்யா (28), கண்ணம்மாள் (60) செல்வி (30) பரமசிவன் (46) உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனை களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.






