search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 2 பேர் பலி
    X

    கொடைக்கானலில் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் வேன்.

    கொடைக்கானலில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 2 பேர் பலி

    • நேற்று மாலை பெருமா ள்மலைக்கு இவர்கள் 3 பேரும் ஒரு வேனில் வந்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
    • பி.எல்.செட் பகுதியில் வேன் திடீரென நிலைதடு மாறி 200 பள்ளத்தில் கவிழ்ந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகில் உள்ள வடகவுஞ்சி ஜீவா நகரை சேர்ந்தவர் கமல நாதன் (வயது50). இவரது மகன்கள் ராபட்சாலமன் (28), யோவான் (26). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது.

    நேற்று மாலை பெருமா ள்மலைக்கு இவர்கள் 3 பேரும் ஒரு வேனில் வந்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை யோவான் ஓட்டிச் சென்றார். பி.எல்.செட் பகுதியில் வேன் திடீரென நிலைதடு மாறி 200 பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேன் சுக்குநூறாக உடைந்து உள்ளே இருந்த கமலநாதன் மற்றும் ராபட்சாலமன் ஆகியோர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். காயம் அடைந்த யோவான் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து கொடை க்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×