search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்கீல்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயம்
    X

    வக்கீல்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயம்

    • வக்கீல்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயமாகினர்.
    • டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பஜனைகூடத் தெருவை சேர்ந்தவர் வக்கீல் சந்திரசேகரன் (வயது62). இவர் நேற்று சிவகாசி கோர்ட்டிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு செ ன்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி செந்தாமரை லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துராஜ் மாயமானார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டிலிருந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தூர் அமீர் பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (38). கேரளாவில் டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (24). சாத்தூர் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×