search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
    X

    வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை

    • வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 53). கூலி தொழிலாளி. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதில் காலில் காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் செல்வகுமாரின் ஒரு கால் அகற்றப்பட்டது. அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று மாலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கான்பாளையம் பூசாரி தோப்பை சேர்ந்தவர் மாரியப்பன் (57). சில வாரங்களுக்கு முன்பு இவர் பூர்வீக நிலத்தை விற்றுள்ளார். இது அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. மேலும் மாரியப்பனின் காலில் ஆறாத புண் உள்ளது.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மீனாம்பாள்புரம், சத்திய மூர்த்தி தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்திய டைந்த கார்த்திக் ராஜா, நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×