search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர்-இளம்பெண் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    வாலிபர்-இளம்பெண் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

    • வாலிபர்-இளம்பெண் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள மேட்டுதொட்டியக் குளத்தை சேர்ந்தவர் கணேசன்(32), கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி கவிதா. கணேசனுக்கு மது பழக்கம் இருந்தது. இதனால் சரிவர வீட்டு செலவுக்கு பணம் தரவில்லை. இதனால் கணேசனுக்கும், அவரது தந்தை சின்னணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்றும் இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கவிதா அவர்களை விலக்கி விட்டுள்ளார். இந்த நிலையில் கணேசன் ரெயில்வே கேட் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மனைவி கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே செங்கமலப்பட்டியை சேர்ந்தவர்பாண்டியன், சவுதியில் வேலை பார்கி றார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் செல்வ சுபத்ரா.

    இவர் தனது உறவினரான லாரி டிரைவர் அய்யப்பனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அய்யப்பன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அப்போது அய்யப்பனின் தாய் குருவம்மாள், தந்தை பாண்டி ஆகியோர் செல்வ சுபத்ராவிடம் பிரச்சினை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமி யிடம் அவர் தெரிவித்தார். அவர் தனது உறவினரை அனுப்பி செல்வசுபத்ராவை அழைத்து வருமாறு கூறினார்.

    உறவினர் செல்வ சுபத்ராவின் வீட்டிற்கு சென்றபோது வீடு உள்பக்க மாக பூட்டி கிடந்தது. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்த போது செல்வசுபத்ரா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே பள்ளபட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள்(57). இவரது கணவர் மாரிமுத்துவை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குபே் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×