என் மலர்

    நீங்கள் தேடியது "Plus 1 student"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 15 வயது மாணவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
    • ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி,

    ஆனைமலை உப்பிலியர் வீதியை சேர்ந்தவர் 15 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது அக்கம் பக்கத்தினர் மூலமாக அவரது தந்தைக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது மகனை கண்டித்தார்.

    இதனால் கடந்த சில நாட்களாக மாணவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மானூர் அருகே உள்ள பல்லிக்கோட்டையை சேர்ந்த 15 வயது சிறுவன் பிளஸ்-1 படித்து வருகிறான். நேற்று இவன் பள்ளிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தான்.
    • இதைத்தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவனை மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள பல்லிக்கோட்டையை சேர்ந்த 15 வயது சிறுவன் பிளஸ்-1 படித்து வருகிறான். நேற்று இவன் பள்ளிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தான்.

    அப்போது பஸ் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்பாக அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிளஸ்-2 மாணவர், அவரது தம்பி 10-ம் வகுப்பு மாணவர் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து பிளஸ்-1 மாணவனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவனை மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 2 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சங்கராபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார்.
    • செல்வம் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வட்டம் கடுவனுாரைச சேர்ந்தவர் செல்வம். அவரது 16 வயது மகள் பிளஸ்1 படித்து வருகிறார். இவரை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை அதிர்ச்சி அடைந்த செல்வம் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை . இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பரீட்சை விடுமுறையில் படிக்க வற்புறுத்தியதால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை கப்பலூர் மில் காலனியை சேர்ந்த முருகா னந்தம் மகள் இளைய ராணி (வயது17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 முடித்து விட்டு பரீட்சை விடுமுறை என்பதால் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது இளைய ராணியின் தாய் பிளஸ்-2 படிப்பு என்பது அரசு பரீட்சை. எனவே 12-ம் வகுப்பு புத்தகங்களை இப்போது முதலே படிக்க தொடங்கு என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இளைய ராணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் அங்கன்குளத்தைச் சேர்ந்த வர் கார்த்திக் (27). இவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார்.

    இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.

    இந்த நிலையில் கார்த்திக் சம்பவத்தன்று ஒத்தக்கடை காந்தி நகரில் இருக்கும் நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு நள்ளிரவில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாணவி குறித்து அவதூறு கருத்து பரப்பி கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மதுசூடியான். இவரது மகன் ரேனியல் (வயது19). இவர் நெல்லையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவிக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் ரேனியலின் பழக்க வழக்கம் பிடிக்காததால் அந்த மாணவி பேஸ்புக்கில் இருந்து அவரை நீக்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரேனியல் அந்த மாணவி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியும், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவியின் தாய் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ரேனியலை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரசு பள்ளி மாணவர்கள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சக மாணவனை கடத்தி கொத்தடிமையாக அனுப்பிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கோடியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தஞ்சையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான்.

    அதேபள்ளியில் திருக்கருக்காவூரை சேர்ந்த ராஜா (17), வளையபேட்டையை சேர்ந்த சரவணன், மாத்தூரை சேர்ந்த சந்திரன், கரந்தட்டான் குடியை சேர்ந்த சுந்தர் (மேலே உள்ள 4 மாணவர்களின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) இவர்கள் 4 பேரும் அதே அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த டிசம்பர் 4-ந் தேதி தினேஷ் காலை வழக்கம் போல்பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மீண்டும் மாலை வீடு திரும்பவில்லை. தினேசின் தந்தை வெளியூரில் வேலை பார்த்து வந்ததால் அவரது தாய் மகனை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இதையடுத்து தன்னுடைய கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ஊருக்கு வந்த தினேசின் தந்தை மாயமான மகனை சில நாட்கள் தேடி அலைந்துள்ளார். ஆனால் மகன் எங்கு சென்றான் என்ற தகவல் கிடைக்காததால் தஞ்சையில் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் போலீசில் புகார் அளித்து நீண்ட நாட்கள் ஆகியும் போலீசார் தினேசை கண்டு பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இனி போலீசாரை நம்பி பயன் இல்லை என தன்னுடய மகனை கண்டுபிடிக்க தானே களத்தில் இறங்கி விசாரணையில் இறங்கினார்.

    அதன்படி தினேஷ் படித்த அரசு பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தியபோது டிசம்பர் 4-ந் தேதி பள்ளிக்கு வந்த தினேஷ் அதேபள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் ராஜா, சரவணன், சந்திரன், சுந்தர் ஆகிய 4 மாணவர்களுடன் பள்ளியை விட்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 4 மாணவர்களது வீடுகளுக்கும் சென்று தன்னுடைய மகனை எங்கு அழைத்து சென்றீர்கள் என கேட்டுள்ளார். அப்போது தாங்கள் அழைத்து செல்லவில்லை என அடித்து கூறினர்.

    அதனை தொடர்ந்து அந்த 4 மாணவர்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது அவர்கள் 4 பேரும் அடிக்கடி பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றுபவர்கள் அவர்கள் தீய பழக்கங்கள் உள்ளவர்கள் என தெரிவித்தார்.

    இதற்கிடையே தினேசின் தந்தைக்கு, 4 மாணவர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் கடந்த மாதம் 14-ந் தேதி மாணவர் சந்திரனின் வீட்டிற்கு சென்ற தினேசின் தந்தை உங்களுடைய மகனும் அவனது நண்பர்களும் சேர்ந்து எனது மகனைகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எனவே நிதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளேன் என கூறி விட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி காலையில் தினேசின் தந்தை செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அந்த 4 மாணவர்களில் ஒருவரான ராஜா உங்களுடைய மகன் கரம்பத்தூர் பகுதியில் பார்த்ததாக கூறிவிட்டு போனை கட் செய்துள்ளான்.

    இதையடுத்து அங்கு சென்று தேடி பார்த்த போது தினேஷ் ஆவூர் சாலையில் உள்ள பாலத்தில் சுய நினைவை இழந்தபடி மயக்கத்தில் இருந்தான். அவனது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

    தினேசை மீட்டு அவனுடைய தந்தை விசாரித்தார். அப்போது சம்பவத்தன்று தனது நண்பர்கள் 4 பேரும் தன்னை பள்ளியை விட்டு வெளியே வா. முக்கியமான இடத்திற்கு அழைத்து செல்கிறோம் என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.

    பின்னர் 4 பேரும் என்னை கொடிமரத்து மூலை அருகே உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த மணி என்பவரிடம் தன்னை அறிமுகம் செய்தனர். அவர்கள் தனியாக சென்று பேசினர். மணி அவர்கள் 4 பேருக்கும் பணம் கொடுத்தார். அதன்பின்னர் தனக்கு டீ வாங்கி கொடுத்தனர். அதன்பிறகு நான் மயக்கம் அடைந்துவிட்டேன். முழித்து பார்த்த போது திருப்பூரில் ஒரு அறையில் கிடந்தேன்.

    அங்கிருந்த சிலர் தனக்கு சாப்பாடு போட்டு அடித்து துன்புறுத்தி கொத்தடிமையாக வேலை வாங்கியதாக கூறியுள்ளான்.

    இதையடுத்த தினேசின் தந்தை அந்த 4 மாணவர்களிடமும் சென்று இதுகுறித்து மிரட்டி விசாரித்த போது தங்களுக்கும் இதுபோன்ற மாணவர்களை கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் நாங்கள் அழைத்து விடும் மாணவர்களுக்கு ஏற்றாற்போல் பணம் தருவார்கள் என கூறியுள்ளனர். நாங்கள் இதுபோன்று இனிமேல் செய்யமாட்டோம். தங்களை போலீசில் மாட்டி விட வேண்டாம் என கெஞ்சியுள்ளனர்.

    பள்ளி மாணவர்கள் என்பதால் தினேசின் தந்தை அவர்களை கண்டித்து விட்டு சென்றுவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு சென்ற பிளஸ்-1 மாணவி மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கல்கோவில் கிராமத்தை சேர்ந்த கங்கைஅமரன் மகள் மகாலெட்சுமி (வயது15). ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    அரையாண்டு தேர்வு விடுமுறை தினத்தையொட்டி பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    மாணவி மகாலெட்சுமி இன்று காலை சிறப்பு வகுப்பில் பங்கேற்க பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். 2-வது மாடியில் உள்ள அவரது வகுப்பறைக்கு சென்றார் காலை 9.30 மணிக்கு மாணவி திடீரென 3-வது மாடிக்கு சென்றார்.

    அங்கு சென்ற அவர் மாடியில் இருந்து திடீரென விழுந்தார். இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் ஓடிவந்தனர். அவர்கள் மாணவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மாணவியின் பெற்றோர் ஆலங்காயம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் உறவினர்கள் பள்ளியில் குவிந்தனர். அவர்கள் மாணவியின் உடலை கண்டு கதறி அழுதனர்.

    ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து போலீசார், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உல்லாச வாழ்க்கைக்காக பைக்குகளை திருடி விற்ற பள்ளி மாணவன் மற்றும் வாலிபரை கைது செய்த போலீசார் 19 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை சென்னலேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 26). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    ஜெய்சங்கர் தன்னுடைய பைக்கை கலவை காளிஅம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வையாபுரி என்பவரது வீட்டில் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

    நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வையாபுரி வீட்டு வளாகத்தில் பைக்கை நிறுத்தி விட்டு ஜெய்சங்கர் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை திரும்பிவந்து பார்த்தார். அப்போது, பைக் திருடு போயிருந்தது.

    உடனடியாக கலவை போலீசில் புகார் அளித்தார். ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். கலவை பஸ்நிலையத்தில் திருடு போன ஜெய்சங்கரின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.

    அங்கிருந்த பைக் திருடிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பள்ளிகொண்டா வேப்பூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மாணவன் என்பது தெரியவந்தது.

    மற்றொருவர், பள்ளிகொண்டா ஒலகாச்சி தென்னந்தோப்பு பகுதியை சேர்ந்த பொற்கொடி மகன் வைரம் என்கிற பிரபு (20) என்பது தெரியவந்தது.

    பிளஸ்-1 மாணவனின் பாட்டி வீடு கலவை அகரம் பகுதியில் உள்ளது. இங்கு, மாணவனும், அவருடைய நண்பர் பிரபுவும் அடிக்கடி சென்றனர்.

    அப்போது, ஆற்காடு மற்றும் கலவை பகுதிகளில் தொடர்ந்து பைக்குகளை திருடி பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம், வாழத்தோப்பு பகுதியில் பதுக்கியுள்ளனர்.

    திருடிய பைக்குகளை குறைந்த விலைக்கு விற்று, அந்த பணத்தில் உல்லாசமாக இருந்தனர். மது குடிப்பது, பெண்களுடன் சுற்றுவது என பணத்தை அள்ளிவீசி செலவழித்ததாக 2 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.

    இதையடுத்து, ஒரு பைக்கை பறிமுதல் செய்த போலீசார் மாணவன் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். பிறகு வெட்டுவானம், வாழத்தோப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வீடுகளில் சோதனையிட்டனர்.

    அங்கு 18 திருட்டு பைக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மாணவன் உள்பட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திண்டுக்கல் அருகே திருமணத்திற்கு பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை செங்குறிச்சி சடையம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த உறவினரான பிளஸ்-1 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதுநாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். ஆனால் உறவு முறையில் லட்சுமணன் அந்த பெண்ணுக்கு சித்தப்பா என்பதால் உறவினர்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் லட்சுமணன் அந்த பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை லட்சுமணன் திருமண ஆசை காட்டி கடத்திச்சென்றார். அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கடத்திய லட்சுமணனை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜேடர்பாளையத்தில் கடத்தப்பட்ட பிளஸ்-1 மாணவியை போலீசார் மீட்டனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த 24-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற இம்மாணவி இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர், மகளை பள்ளி, உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் மகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தார்.

    இந்த நிலையில் மாணவி வைத்துள்ள செல்போனை சைபர் கிரைம் போலீசார் கணினி மூலம் ஆய்வு செய்த போது, ஏற்காட்டில் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதையடுத்து போலீசார் ஏற்காட்டிற்கு சென்று மாணவியை பத்திரமாக மீட்டனர். அவரை ஏற்காடு, கொலக்கூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (21) என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.

    போலீசார் விசாரிக்கையில், மாணவி வைத்துள்ள செல்போனில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக விஜயகுமாரின் செல்போனுக்கு அழைப்பு போய் உள்ளது. தவறுதலாக அழைப்பு வந்து விட்டது என்று கூறிய பிறகும், விஜயகுமார் கேட்காமல் தொடர்ந்து செல்போனில் கால் செய்து பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர், ஆசை வார்த்தை காட்டி ஜேடர் பாளையத்துக்கு சென்று மாணவியை விஜயகுமார் கடத்திச் சென்றது தெரியவந்தது. விஜயகுமார் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo