என் மலர்
நீங்கள் தேடியது "ஆற்றில் மூழ்கி பலி"
- ரைசா என்ற 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
- அப்போது அவரின் கால்களுக்கு வித்தியாசமாக எதோ தட்டுப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள Bacabal நகரில் Mearim என்ற ஆறு உள்ளது. இந்த பகுதிக்கு அருகில் ரைசா என்ற 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் சிறுமி குறித்து செய்தி சேகரிக்க லெனில்டோ ஃபிரசாவோ என்ற பத்திரிக்கையாளர் அங்கு சென்றுள்ளார்.
சிறுமி கடைசியாக காணப்பட்ட இடத்தை விளக்க லெனில்டோ ஆற்றில் இறங்கினார். அப்போது அவரின் கால்களுக்கு வித்தியாசமாக எதோ தட்டுப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னரே அவர் காணாமல் போன சிறுமியின் உடலை மிதித்தது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுமியின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சிறுமி தனது நண்பர்களுடன் நீந்தும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
- ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
- ஒரு வாரத்திற்கு முன் மெடிகட்டா தடுப்பணையிலும் இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தனர்.
தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் புனித நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சமீபத்திய மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த அந்த இளைஞர்கள் ஆழம் தெரியாமல் ஆற்றுக்குள் சென்றதே விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கோதாவரி படித்துறையில் தொடர்ச்சியான இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரியில் கொண்டபோச்சம்மாவிலும், ஒரு வாரத்திற்கு முன் மெடிகட்டா தடுப்பணையிலும் இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.
- பிறந்தநாளை கொண்டாட ஆற்றுக்கு அருகே வந்துள்ளனர்.
- அவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கினர்.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் நேற்று, 25 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மூவர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெய்ப்பூரில் இருந்து வந்த 11 இளைஞர்கள், அவர்களில் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட ஆற்றுக்கு அருகே வந்துள்ளனர்.
அவர்களில் சிலர் குளிக்க ஆற்றில் இறங்கியபோது ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கியஅவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கியபோது, அவர்களும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
மீட்கப்பட்ட மூவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
- நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.
நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.
திடீரென நீர் மட்டம் உயர்ந்தபோது அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சாம்டோலியில் உள்ள போடார் குரு வளாகத்தில் வசிக்கும் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) என்று அடையாளம் காணப்பட்டனர்.
நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- புவனேஷ் திடீரென ஆழமான பகுதி சென்றார்.
- பின்னர் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கரட்டாங்காடு அடுத்துள்ள அன்னாசி கடை வீதியை சேர்ந்தவர் செல்வம். தறி பட்டறை தொழிலாளி.
இவரது மகன் புவனேஷ் (வயது 17). இவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்நிலையில் புவனேசுக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு கரட்டாங்காட்டில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக புவனேஷ் மற்றும் அவரது தந்தை செல்வம் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று பரிசல் துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் காலை நேரத்தில் குளித்து வந்தனர்.
அதேபோல் இன்று காலை 8 மணிக்கு தந்தை, மகன் 2 பேரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது குளித்து கொண்டிருத்த போது புவனேஷ் திடீரென ஆழமான பகுதி சென்றார். பின்னர் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார்.
இது குறித்து மொடக்கு–றிச்சி தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் இறங்கி மாணவர் புவனேஷ் உடலைதேடினர்.
பின்னர் புவனேஷ் உடலை மீட்டு மொடக்குறிச்சி போலீ–சாரிடம் ஒப்படைத்தனர்.
தந்தை கண் முன்பே மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் என 6 மொழிகளில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
- காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்வதால் சுழல் மற்றும் பாறையின் இடுக்குகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சாதாரண நாட்களை விட கோடை விடுமுறை காலத்தில் தான் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிகிறது.
இதனால் ஒகேனக்கல் பகுதியில் மே மாதம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் தலைகளாகவே காட்சி அளித்தன. தற்போது பள்ளிகள் திறப்பு நாட்கள் தள்ளி போனதால் வருகிற 11-ந் தேதி வரை கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆலம்பாடி பரிசல் துறை, ஊட்டலை பரிசல் துறை, முதலைப்பண்ணை, நாகர்கோயில், கோத்திக் நாகர்கோயில், கோத்திக்கல் பரிசல்துறை, மாமரத்துகடவு உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க, தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி, ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தண்ணீரை கண்டதும் ஆசையில் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர்.
இதனால் ஆழமான பகுதி மற்றும் சுழல், பாறை இடுக்கில் சிக்கி உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கடந்த வாரம் பென்னாகரம் மருக்கலாம்பட்டியை சேர்ந்த தந்தை மகன் 2 பேரும் ஒகேனக்கல் ஆலம்பாடி காவேரி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
கடந்த மாதம் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சாமுண்டீஸ்வரி லே-அவுட் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சிவப்பா (37), நண்பர்களுடன் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தபோது அவர் ஆழமான பகுதியில் சென்று ஆற்றில் மூழ்கி இறந்தார்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சந்திரசேகரன் (36) என்பவரும் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்தார்.
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நபர்கள் நீரில் மூழ்கி உயிரை இழக்கும் அபாயம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரங்கேறி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 31 பேர் இதுவரை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர்.
உயிர் பலியை தடுக்க, மாவட்ட நிர்வாகம் குளிக்க தடைவிதிக்கப்பட்ட இடங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் என 6 மொழிகளில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு பலகையில், அபாயகரமான கூர்மையான வழுக்கும் பாறைகள் மிகுந்த பகுதியாகும். அதிக உயிரிழப்பு ஏற்படக்கூடிய பகுதி.
இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி குளித்தால், போலீசாரால் தண்டிக்கப்படுவீர்கள் என அந்த அறிவிப்பு பலகையில் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்வதால் சுழல் மற்றும் பாறையின் இடுக்குகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
கடந்த 5 மாதத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த உயிரிழப்பை தடுக்க ஆபத்தான முக்கிய இடங்களில் தமிழ் ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 6 மொழிகளில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.
ரோந்து பணியில் போலீசார் கூடுதலாக ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
- ரஷியாவில் உள்ள ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் இறந்தனர்.
- மேலும் ஒரு மாணவர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாஸ்கோ:
ரஷியாவில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களது உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ரஷிய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
விசாரணையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷல் அனந்தராவ் டேசலே, ஜிஷான் அஷ்பக் பின்ஜரி, ஜியா பிரோஜ் பின்ஜரி மற்றும் மாலிக் குல்ம்கோஸ் முகம்மது யாகூப் ஆகிய 4 மாணவர்களும் ரஷியாவின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதகரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம். அவர்களைப் பிரிந்துள்ள குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவியையும் வழங்குவோம். பத்திரமாக மீட்கப்பட்ட மாணவருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
- ஆற்றில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள குண்டூச்சி எரிஞ்சிபுழா பகுதியை சேர்ந்த தம்பதி அஷ்ரப்-ஷபானா. தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் அதனை கொண்டாடும் விதமாக இவர்களது வீட்டுக்கு அவர்களது உறவினர்களான மஜீத்-சபீனா தம்பதி மற்றும் மஞ்சேஸ் வரத்தை சேர்ந்த சித்திக்-ரம்லா தம்பதி தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் அனைவரும் அங்குள்ள எரிஞ்சிபுழா ஆற்றிற்கு நேற்று குளிக்க சென்றனர். அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அஷ்ரப்பின் மகன் யாசின் (வயது12), அவர்களது வீட்டுக்கு வந்திருந்த மஜீத்தின் மகன் சமத்(12), சித்திக்கின் மகன் ரியாஸ்(17) ஆகிய 3 பேரும் ஆற்று சுழலில் சிக்கி மூழ்கினர்.
அவர்களை அவர்களது குடும்பத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறுவர்கள் 3 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் கண்ணூரில் ஆற்றில் மூழ்கி 2 பேர் பலியாகிவிட்டனர். கோட்டாலி பகுதியை சேர்ந்த வின்சென்ட்(42) மற்றும் அவரது பக்கத்து வீட்டு சிறுவனரான அல்பின்(9) ஆகிய இருவரும் சரல்புழா ஆற்றுக்கு சென்றனர். அப்போது சிறுவன் அல்பின் ஆற்றுக்குள் தவறி விழுந்தான்.
இதையடுத்து அவனை காப்பாற்ற வின்சென்ட் ஆற்றுக்குள் குதித்துள்ளார். அப்போது இருவரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர். காசர்கோடு மற்றும் கண்ணூரில் ஆற்றில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
- தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று மாலை வந்தனர்.
பின்னர் மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சிறிது நேரத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர். இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ் ஆகிய 2 பேர் உடலை சடலமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரவீன்ராஜ், தாவீது, ஈசாக், தெர்மஸ் ஆகிய 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து திருக்காட்டுபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






