என் மலர்
நீங்கள் தேடியது "drowned in river"
- பிறந்தநாளை கொண்டாட ஆற்றுக்கு அருகே வந்துள்ளனர்.
- அவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கினர்.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் நேற்று, 25 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மூவர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெய்ப்பூரில் இருந்து வந்த 11 இளைஞர்கள், அவர்களில் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட ஆற்றுக்கு அருகே வந்துள்ளனர்.
அவர்களில் சிலர் குளிக்க ஆற்றில் இறங்கியபோது ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கியஅவர்களைக் காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஆற்றில் இறங்கியபோது, அவர்களும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
மீட்கப்பட்ட மூவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
- இளைஞர்கள் குழு டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றங்கரை சென்றது.
- இதில் 8 பேர் மூழ்கி இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள் குழு பிறந்தநாள் கொண்டாட டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றங்கரை சென்றது.
அவர்களில் சிலர் நீந்துவதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது அவர்கள் திடீரென நீரில் மூழ்கத் தொடங்கினர். மற்ற நண்பர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
இதில் 8 இளைஞர்கள் மூழ்கி இறந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர் என தகவல் வெளியானது.
இதுகுறித்து உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கூட்டு மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இளைஞர்கள் நீரில் மூழ்கிய சம்பவத்தில் 8 பேர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உடல்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
ஆற்றில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழந்ததை அறிந்து முதல் மந்திரி பஜன்லால் சர்மா இரங்கல் தெரிவித்தார்.
- வசந்த் பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.
- நீச்சல் தெரியாததால் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார்.
சத்தியமங்கலம்:
கோபிசெட்டிபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வசந்த் (19). இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் வசந்த் தனது கல்லூரி நண்பர்க ளுடன் சத்தியமங்கலம் அடுத்த அரசூர் பவானி ஆற்று பகுதிக்கு சென்றார்.
இதையடுத்து வசந்த் பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நீச்சல் தெரியா ததால் அவர் திடீரென நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.
இதை கண்ட அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர். இவர்களது சத்தத்தை கேட்டு அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டனர். ஆனால் அவர் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீ சாருக்கு தகவல் கிடைத்தும் அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
- புவனேஷ் திடீரென ஆழமான பகுதி சென்றார்.
- பின்னர் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கரட்டாங்காடு அடுத்துள்ள அன்னாசி கடை வீதியை சேர்ந்தவர் செல்வம். தறி பட்டறை தொழிலாளி.
இவரது மகன் புவனேஷ் (வயது 17). இவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்நிலையில் புவனேசுக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு கரட்டாங்காட்டில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக புவனேஷ் மற்றும் அவரது தந்தை செல்வம் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று பரிசல் துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் காலை நேரத்தில் குளித்து வந்தனர்.
அதேபோல் இன்று காலை 8 மணிக்கு தந்தை, மகன் 2 பேரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது குளித்து கொண்டிருத்த போது புவனேஷ் திடீரென ஆழமான பகுதி சென்றார். பின்னர் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார்.
இது குறித்து மொடக்கு–றிச்சி தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் இறங்கி மாணவர் புவனேஷ் உடலைதேடினர்.
பின்னர் புவனேஷ் உடலை மீட்டு மொடக்குறிச்சி போலீ–சாரிடம் ஒப்படைத்தனர்.
தந்தை கண் முன்பே மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருந்தது.
- கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் எதிரே காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதன்பேரில் கொடுமுடி போலீசார் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த நபருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்று தெரியவந்தது.
ஆனால் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதியவர் ஆற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






