search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holi Celebration"

    • வீடியோ வைரலாகி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.
    • பயனர்கள் பலரும் அவருக்கும், அவரது மனைவிக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹீரோஷி சுசுகி இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஷாப்பிங் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. மேலும் நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றிப்பார்த்த அவர், அப்போது அழகழகாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் அவர் தனது மனைவி எய்கோ சுசுகியுடன் இணைந்து வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை கொண்டாடிய காட்சிகளை 'ஹேப்பி ஹோலி' என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் தனது மனைவியுடன் ஹோலி கொண்டாடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த வீடியோ வைரலாகி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த நிலையில், பயனர்கள் பலரும் அவருக்கும், அவரது மனைவிக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • இந்திய வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா பகிர்ந்த குட்டி யானை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • தரையில் இருந்து மண், தூசியை தன் மீது வாரி இறைத்து விளையாடும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.

    வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது ஒருவர் மீது ஒருவர் பல விதமான வண்ண பொடிகளை வீசி மகிழ்ச்சியாக ஓடி, ஆடி கொண்டாடுவார்கள்.

    இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா பகிர்ந்த குட்டி யானை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்த குட்டி யானை மிகவும் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் உள்ளது. குறிப்பாக தரையில் இருந்து மண், தூசியை தன் மீது வாரி இறைத்து விளையாடும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது. 'அவரது பாணியில் ஹோலி கொண்டாட்டம்' என்ற தலைப்பில் சுஷந்தா நந்தா பகிர்ந்த இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரசனையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Holi #PMModi #RamnathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பண்டிகை, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமையை கொண்டுவரட்டும்” என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “தீமையை நன்மை தோற்கடித்ததை கொண்டாடும் திருநாள்தான் ஹோலி. இது, மகிழ்ச்சியையும், தோழமையையும் வெளிப்படுத்தும் திருநாள்” என்று கூறியுள்ளார்.



    பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சி திருவிழா, அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ செய்தியில், “ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து ஹோலி பண்டிகை வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். இந்த திருவிழா, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியால் ஒளிரச் செய்ய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
    வேப்பேரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டப்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கியதால் அங்கு கூடி நின்ற ஆண்களும், பெண்களும் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். #holicelebration

    சென்னை:

    சென்னை எழும்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக அங்கு ‌ஷவரில் தண்ணீர் விழுவதுபோல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த தண்ணீர் ஒரு தொட்டியில் நிரம்பியதும். அதில் இறங்கி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளித்து மகிழ்ந்தனர். கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

    சிறுவர்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடி இருந்தனர்.

    அப்போது திடீரென தண்ணீர் தொட்டியில் மின்சாரம் தாக்கியது. ஒரு சிறுவன் உள்பட 4 பேர் தூக்கிவீசப்பட்டு தண்ணீரில் மூழ்கினார்கள். இதனை பார்த்து அங்கு கூடி நின்ற ஆண்களும், பெண்களும் அதிர்ச்சியில் மூழ்கினார்கள்.


    உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன்பிறகு தண்ணீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவரும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் காரணமாக வேப்பேரியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஹோலி கொண்டாட்டத்தில் கவனக்குறைவாக செயல் பட்டதே மின்கசிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #holicelebration

    ×