search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "holi festival"

    • கர்னூல் மாவட்டத்தில் விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது.
    • ஆண்கள் பெண்கள் வேடமிட்டு மன்மத பூஜை செய்யும் திருவிழா.

    திருப்பதி:

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சியாக வண்ணங்களை தூவி உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

    ஆனால் ஆந்திராவில் ஹோலி பண்டிகையில் ஆண்கள் பெண்கள் வேடமிட்டு மன்மத பூஜை செய்யும் திருவிழா பாரம்பரியமாக நடத்தப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சந்தேகுட்லூர் கிராமத்தில் பழங்காலத்தில் இருந்தே விசித்திரமான பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹோலி கொண்டாட்டத்தின் போது அங்குள்ள மன்மதா தெய்வத்திற்கு திருவிழா நடத்தப்படுகிறது.

    அப்போது கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் பெண்கள் வேடமணிகிறார்கள். அவர்கள் அழகாக பட்டு சேலை கட்டி, நகைகள் அணிந்து பெண்கள் போல அலங்காரம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் தலை நிறைய பூ வைத்து தட்டுகளில் பூ, பழம் தேங்காய் உள்ளிட்டவைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக அங்குள்ள மன்மதன் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    அங்கு ஆண்கள் பெண்கள் உடையில் மன்மத பூஜை செய்கிறார்கள். மேலும் அந்த தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களையும் செலுத்துகின்றனர். பாரம்பரியமாக நடைபெறும் மன்மதத் திருவிழா எங்கள் கிராமத்தின் கடவுள் நம்பிக்கையின் உணர்வை குறிக்கிறது என அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறு வனங்களில் பணியாற்றுகின்றனர்.
    • ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர்.

    திருப்பூர்:

    வட மாநிலத்தவர்களின் கொண்டாட்டங்களில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னலாடை நகரான திருப்பூரில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறு வனங்களில் பணி யாற்றுகின்றனர்.

    இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ரெயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்று ள்ளனர். திருப்பூரில் வசிக்கும் வட மாநில த்தவர்கள், தங்களது குடும்பத்தினரோடு இன்று முதலே ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளி மாநிலத்தவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர். 

    • பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    • சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர்.

    ராயபுரம்:

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

    வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் இடங்களில் ஒன்றான சவுகார்பேட்டை பகுதியில் காலை முதலே வண்ணப் பொடிகளுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.

    பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கைகுலுக்கி ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் வண்ணப் பொடிகளை தூவியபடி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர்.

    இதேபோல் வடமாநிலத்தவர் அதிகம் உள்ள புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், துறைமுகம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹோலி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒலி பெருக்கிகள் மூலம் பாடல்களை இசைக்க விட்டு இளைஞர்கள் இளம்பெண்கள் நடனம் ஆடியும் வண்ணப்பொடிகளை தூவியும் மகிழ்ந்தனர்.

    • தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.
    • பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகிற 24-ந்தேதி ஹோலி பண்டிகை வருவதாலும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாலும் பலர் குழுக்களாக திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.

    பெரும்பாலும் ஒரு குழு சென்றால் மறு குழு பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் திரும்பி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை வருகிற 24-ந்தேதி முடிந்தவுடன் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.வடமாநிலங்களில் ஜூன் மாதம் வரை பல கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப மேலும் காலதாமத மாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவதில் காலதாமதமாகும் என்பதால் பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண கலர் பொடி பூசி அன்பை பரிமாறிக்கொண்டனர்.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கலர் பவுடரை பூசியும், சாயம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்ந்தனர்.

    சென்னை:

    அன்பை பரிமாறக்கூடிய ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் மட்டுமின்றி கடந்த சில வருடங்களாக தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று வடமாநிலத்தவர்கள் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

    டெல்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் கணிசமாக வசித்து வருகின்றனர். அவர்கள் ஹோலி பண்டி கையை கொண்டாடும் விதமாக நேற்று இரவு பழையன கழிதல் என்ற அடிப்படையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இன்று காலையில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண கலர் பொடி பூசி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கலர் பவுடரை பூசியும், சாயம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்ந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியில் வந்து ஹோலியை கொண்டாடினர்.

    வாலிபர்கள், இளம்பெண்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் கலர் பூசினர். கார், மோட் டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களில் சென்றும் வீதிகளில் ஆரவாரமாக கொண்டாடினர்.

    காலையில் இருந்து மதியம் வரை ஒருவரையொருவர் விரட்டி சென்று வண்ண கலர் பொடிகளை பூசினர். சென்னையில் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர்கள் ஒருவருக்கொருவர் நேரிலும், போனிலும் ஹோலி வாழ்த்துக்களை கூறி அன்பை வெளிப்படுத்தினர். சிலர் கட்டிப்பிடித்து ஆட்டம், பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    • வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
    • ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பகுதியில், ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வட மாநிலத்தவர்களின் கொண்டாட்டங்களில், ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னலாடை நகரான திருப்பூரில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பிகார், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி, திருப்பூரில் உள்ள பணியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

    இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ரயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள், தங்களது குடும்பத்தினரோடு இன்று முதலே ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து, ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர்.

    இதே போல் நாளையும் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள்.
    • இந்து மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    ஹோலி பண்டிகை நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ண பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    அப்போது அங்கு வந்த ஒரு அமைப்பினர் இந்து மாணவர்களை ஹோலி கொண்டாடக்கூடாது என கூறினார்கள். இதனால் அவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்து மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் கேத் குமார் என்ற மாணவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்து மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக துணைவேந்தர் கூறும் போது, பல்கலைக்கழக வளாகத்தில் ஹோலி நிகழ்ச்சி நடத்த மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்றும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.

    இந்த சம்பவம் இந்து மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
    • திரும்பி வருவோம் என்று வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட கிளம்பி செல்வதால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    திருப்பூர் மாநகரில் பனியன் தொழில் நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். நீண்டகாலம் திருப்பூரில் தங்கி இருந்து பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பண்டிகை காலங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு செலவது வழ்ககம். அந்த அடிப்படையில் வரும் 8 ஆம்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பணியாற்றும் பீகார், ஒடிசா, மேற்கு வங்க, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சாரை சாரையாக சொந்த ஊருக்கு கிளம்பி செல்கிறார்கள். இதனால் திருப்பூரில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் ரயில்களில்வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னை சென்று அங்கிருந்து வடமாநிலங்களுக்கு செல்வதால், சென்னை செல்லும் ரயில்களிலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஏறிச் செல்வதை பார்க்க முடிந்தது. ஹோலி பண்டிகை முடிந்ததும்திருப்பூரில் பணியாற்ற திரும்பி வருவோம் என்று வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சோகம் இன்னும் நீங்காத நிலையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட போவதில்லை என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #Holi #PulwamaAttack
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சோகம் இன்னும் நீங்காத நிலையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட போவதில்லை என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கடந்த 2017-ம் ஆண்டில் சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டபோது, ராஜ்நாத் சிங் ஹோலி பண்டிகையை கொண்டாடவில்லை என்பது நினைவிருக்கலாம். #RajnathSingh #Holi #PulwamaAttack
    ×