search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wishes"

    • எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து.
    • பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!

    பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கல் உடைப்பவர் முதல் கணினியில் வேலை செய்பவர் வரையில் அனை வருமே உழைப்பாளர்கள் தான்.
    • தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம், சர்வதேச தொழிலாளர் தினம் என்று இதை உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல் உடைப்பவர் முதல் கணினியில் வேலை செய்பவர் வரையில் அனை வருமே உழைப்பாளர்கள் தான். உலகம் முழுவதும், இவர்களின் தினசரி 8 மணி நேர வேலையை உறுதிப் படுத்திய வரலாற்று சிறப்புமிக்க நாள்தான் மே1

    தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம், சர்வதேச தொழி லாளர் தினம் என்று இதை உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். உழைப்பே உயர்வு என்பது நம்முடைய பொன்மொழி. வெற்றியை தேடி உழைப்ப வர்கள் மட்டுமே தங்களு டைய வாழ்க்கையில் அந்த வெற்றியைப் பெற முடியும்.

    இன்று உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய அனை வருமே கடுமையாக உழைத்த வர்கள்தான். அவ ர்களின் அந்த உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான். அவர்கள் பெற்றுள்ள வெற்றி. உழைக் காமல் வரக்கூடிய உயர்வும், செல்வமும் ஒருபோதும் நிலைக்காது.

    உழைக்கக்கூடிய மக்க ளால் உயர்ந்துள்ள நாடு நம் இந்தியா.

    இந்த பெருமைமிக்க மே தின நன்னாளில், உழைக்கும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய மே தின நல்வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கின்றேன். உழைக்கும் மக்கள் அனை வரும் தங்கள் வாழ்வில் உயர்வும், மகிழ்ச்சி யும், ஆரோக்கியமும் பெற்று சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கின்றேன்.

    இவ்வாறு அதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    • தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    கடையம்:

    தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடையம் ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    இதில் பெரும்பத்து பொன் ஷீலா பரமசிவன், ஏ.பி.நாடானூர் அழகுதுரை, சேர்வைகாரன்பட்டி ரவிச்சந்திரன், தெற்கு மடத்தூர் பிரேமராதா ஜெயம், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி, முதலியார்பட்டி அசன் பீவி மைதீன், ரவணசமுத்திரம் உசேன் மற்றும் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி தொழிலதிபர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர். விந்தியா மற்றும் திருப்பூர் சாய்பாபா நகர் கே.சுப்பிரமணியன்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் பிரவீன் ஆகியோர் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6மணிக்கு பொங்கலூர் அருகே உள்ள சாந்தி மகாலில் திருமண வரவேற்பு விழா நடக்கிறது.

    விழாவில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர் வரும் வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமண மண்டபத்திற்கு செல்லும் முன் பகுதியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் உள்பட முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இதனால் வாகன நிறுத்தும் இடத்திற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கலூர் பகுதிக்கு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி வருகையால் பொங்கலூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மே தினம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #MayDay #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள மே தின வாழ்த்து வருமாறு:-

    உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.



    உழைப்பாளர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்து, ஓயாது போராடிய தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் அத்தியாவசியத்தையும், அதன் மேன்மை மிக்க சிறப்பினையும் உலகத்தார்க்கு உணர்த்துகின்ற திருநாளாகவும் `மே தின’ திருநாள் விளங்குகிறது.

    தொழிலாளர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #MayDay #EdappadiPalaniswami #OPS
    மலையாள புத்தாண்டு தினமான “விஷு” திருநாள் மக்களின் வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #Vishu
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மலையாள புத்தாண்டு தினமான “விஷு” திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “விஷு” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புத்தாண்டு தினமான “விஷு” திருநாளன்று, மலையாள மொழி பேசும் மக்கள், அதிகாலை கண் விழித்து அரிசி, காய்கனிகள், கண்ணாடி, கொன்றை மலர்கள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக் கனி கண்டு, மலரும் இப்புத்தாண்டு தங்கள் வாழ்வில் குறைவற்ற செல்வத்தையும், அளவற்ற மகிழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்று இறைவனைத் தொழுது, உற்றார் உறவினர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு, அறுசுவை விருந்துண்டு உற்சாகமாக “விஷு” தினத்தை கொண்டாடி மகிழ்வார்கள்.



    இப்புத்தாண்டு மக்களின் வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை மலையாள மொழி பேசும் மக்களுக்கு எனது இனிய “விஷு” திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #Vishu

    தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ தமிழ் புத்தாண்டு உதயமாகட்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #BanwarilalPurohit #TamilNewYear
    சென்னை:

    தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் புத்தாண்டு தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மேம்பட்ட நிலையின் அடையாளமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அன்பு, இரக்கம் மற்றும் வீரம் ஒன்றிணைந்த பண்பின் அடையாளமாக விளங்குகின்றனர். நேர்மையும், ஒழுக்கமும் இவர்களை சமாதானம் மற்றும் நிறைவான வளத்தை நோக்கி வழிநடத்தி செல்கின்றன.



    மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ இந்த நாள் உதயமாகட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BanwarilalPurohit #TamilNewYear
    ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Holi #PMModi #RamnathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பண்டிகை, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமையை கொண்டுவரட்டும்” என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “தீமையை நன்மை தோற்கடித்ததை கொண்டாடும் திருநாள்தான் ஹோலி. இது, மகிழ்ச்சியையும், தோழமையையும் வெளிப்படுத்தும் திருநாள்” என்று கூறியுள்ளார்.



    பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சி திருவிழா, அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ செய்தியில், “ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து ஹோலி பண்டிகை வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். இந்த திருவிழா, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியால் ஒளிரச் செய்ய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vijayakanth #KSAlagiri
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டதற்கும், மேலும் புதியதாக பதவியில் நியமிக்கப்பட்ட மற்ற நிர்வாகிகளுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதியதாக பதவி ஏற்றவர்கள் தங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Vijayakanth #KSAlagiri

    நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Republicday
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றை நமக்கு பெற்றுத்தந்த தேசத் தலைவர்களின் தியாகங்களை என்றென்றும் போற்றி நினைவுகூருவோம். இந்நாளில் மதவாத சக்திகளை ஒடுக்கி, ஜனநாயகத்தைக் காக்க பாசிச, ஊழல், மத்திய-மாநில ஆட்சிகளை வீழ்த்திட புதிய இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் சபதமேற்போம். இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

    அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒவ்வொருவரும் முழுமையாக பெறுவதற்கு தடையாக இருப்பது தவறான பொருளாதார கொள்கை, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லாத மனப்பாங்கு ஆகியவைகளே இந்திய தேசமும் இந்திய திருநாட்டு மக்களும் தொட வேண்டிய சிகரத்தை இன்னும் தொடவிடாமல் தடுக்கும் பெரும் தடைகளாக இருந்து வருகின்றன. இத்தடைகள் எல்லாம் இனி உடையட்டும். வளமும், வளர்ச்சியும் பொருளாதார ஏற்றமும் சமூக நல்லிணக்கமும் தழைத்து சிறந்திட குடியரசு தின நன்னாளில் உறுதி ஏற்போம்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இந்திய தேசத்தின் பெருமைமிகு மாண்பும், வரலாறும் தாங்கி நிற்கும் ஒருமைப்பாட்டிற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடித்தள ஆணிவேரையும் எந்த சூழலிலும் எவராலும் அசைக்க முடியாது என்பதை இந்தியராகிய நாம் அனைவரும் உறுதியோடு எடுத்துரைக்க வேண்டும். உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

    நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியை சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் ஒரே அணியில் திரள வேண்டும். குடியரசு தினத்தில் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

    ‘‘பாரத நாடு பழம்பெரும் நாடு’’ என்றாலும் பழமையும், புதுமையும் சம விகிதத்தில் கலந்து காணப்படுவதால், வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து இந்திய கலாசாரத்தை கண்டு அதிசயித்து தங்களை அக்கலாசாரத்தில் இணைத்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    என்.ஆர்.தனபாலன்

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் குடியரசு தின வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். #Republicday


    எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும். அதற்கான விவசாயம், இந்நாளில் தொடங்கட்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Pongal #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து வருமாறு:-

    எத்தனையோ விழாக்கள் உண்டு. அவை மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம், ஊருக்கு ஊர் மாறுபடும். வேறுபடும். ஆனால், ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் இருக்கும் ஒரே விழா இதுதான். உயர்வு தாழ்வற்ற சமத்துவ விழா.

    இலக்கியத்துக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் மண்ணுக்கும் இலக்கணம் வகுத்தவன் தமிழன். மண்ணும், மக்களுமானது தான் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை. உழவே நமது உயிர். மாடுகள் நமது செல்வங்கள். அதனால் தான் மண்ணைக் காப்பதற்கு நாம் போராடுகிறோம். ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறோம்.



    கீழடியைக் காப்பாற்றப் போராடுகிறோம். மேகதாதுவை தடுக்கப் போராடுகிறோம். இந்தப் போராட்டங்களில் அரசியல் இல்லை; நம் வாழ்க்கை இருக்கிறது. தமிழர்களின் எதிர்காலம் இருக்கிறது. அதனால் தான் வாழ்க்கையையும், அதனோடு தொடர்புடைய விழாவையும் ஒருசேர வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

    அத்தகைய உழவர் வாழ்க்கை இன்று உற்சாகமாக இல்லை. அனைத்துத் தரப்பு மக்களின் துன்ப துயரங்கள் கவலைகள் சொல்லி மாளாது. இதற்கு காரணமான அரசுகள் அதுபற்றிய கவலைகள் இல்லாமல் இருப்பதும் உண்மைதான்.

    இவர்களை வாழ்த்தும் ஜனநாயகப் போர்க்களம் நம்மை விரைந்து அழைக்கிறது. அதற்கு முன்னதாக உற்சாகத்தை வழங்கும் விழாவாக பொங்கல் திருநாள் வருகிறது.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டிப் போற்றப்பட்ட தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொங்கல் திருவிழாவுடன் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கொண்டாடிட, 1921-ம் ஆண்டு தமிழ் புலவர்கள் கூடி முடிவெடுத்ததை 2006, 2011 ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தியவர் கலைஞர். அதன்படி, தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    எதிர்கால நிலத்தில், நல்லாட்சி விளையட்டும். அதற்கான விவசாயம், இந்நாளில் தொடங்கட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Pongal  #MKStalin

    பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Pongal
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:-

    உலக மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. இத்தகையை சிறப்புக்குரிய உழவர் பெருமக்களின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் வாழ்வு வளம் பெறவும் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசும், உன்னதத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.

    மக்கள் அனைவருடைய இல்லங்களிலும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று மனதார வாழ்த்தி அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்:-

    அறுவடை திருவிழாவான இந்த பொங்கல் நாளிலே, இறைவனுக்கும், உழைத்தோருக்கும், உழைப்புக்கு பக்கபலமாக இருந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றியை செலுத்தி, நம்முடைய நாடு மேலும் பல வெற்றிகளை அடைய கூடிய வகையில் இறைவன் நமக்கு அருள வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த பொங்கல் விழாவை கொண்டாடுவோம்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    இந்த பொங்கல் ஆரோக்கிய பொங்கலாக மலர, மருத்துவ காப்பீட்டு திட்டமும், சமூக நீதிப் பொங்கலாக மலர, 10 சதவீத இட ஒதுக்கீடும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். தாமரைப் பொங்கலாக, தமிழகத்திற்கு எய்ம்ஸ் கிடைக்கும் தாமரைப் பொங்கலாக தமிழ்ப் பொங்கலாக மலரும், இந்த பொங்கல் தாமரை மலர் போல், அனைவரும் வாழ்வும் மலர பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல, தை பிறந்து ஆட்சி மாற்றம் நிகழ்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    இந்நன்நாளில் ராகுல் காந்தி பாரதப் பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு சபதம் ஏற்று செயல்படுவோம். தமிழர்களின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த இந்நன்நாளில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    விவசாய விரோத திட்டங்கள், விவசாய நிலங்களில் திணிக்கப்படுவால், விவசாயிகள் கொந்தளிக்கும் மன நிலையோடு ஒவ்வொரு நாளும் போராட்ட களத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் உள்ளனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. ஏனெனில் விவசாயத்திற்கும், உணவு உற்பத்திக்கும் மாற்று இல்லை என்பதை இத்தருணத்தில் உணர்ந்திடுவோம், உணர்த்திடுவோம். பிறக்கும் தை அனைவரின் வாழ்விலும் நல்ல விடியலை ஏற்படுத்தட்டும்.

    டாக்டர் ராமதாஸ்:-

    அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதற்கேற்ற வகையில் தைத் திருநாளும், தமிழ் புத்தாண்டும் தமிழக மக்களுக்கு அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை பெற்றுத்தர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும்.

    இன்பத் திருநாள், நம் பண்புத் திருநாள் தை பொங்கல் என்பதால் தாய்த் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கும், தரணி வாழ் தமிழர்களுக்கும், குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்:-

    பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி வரும் நம் மண்ணை மீட்கவும் நமது வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் விவசாயப் பெருங்குடிகளின் வாழ்வுரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், பண்பாட்டுத் தளத்தில் மேலும் சனாதனத்தை நிலைநிறுத்த முயலும் சங்பரிவார் கும்பலிடமிருந்து இத்தேசத்தை மீட்கவும் இந்தப் பொங்கல் திருநாளில் சனநாயக சக்திகள் யாவரும் உறுதியேற்போம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதுடன், உலகம் முழுவதுமுள்ள தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது மனம்நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தை முதல் பேதங்களும், பிணக்குகளும், மோதல்களும், முரண்பாடுகளும் முழுமையாக மறைந்து, நல்லதே நடந்து, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் உயர வழி பிறந்து, அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்நாடு வளம் பெற இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டி தமிழ் மக்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    மேகதாது அணைகட்டு செயல், இயற்கை வளங்கள் மீதான கார்பரேட் ஆதிக்கம், சமூக நீதி கோட்பாட்டை சிதைக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை, அரசியல் சாசனத்திற்கே ஏற்பட்டுள்ள ஆபத்து அறிவியலுக்கு பொருந்தாத சாதிய தப்பெண்ணெங்கள் தேசத்தின் புகழார்ந்த பொது துறைகளை சிதைக்கும் செயல், தொழிலாளர் உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என அனைத்தையும் எதிர்த்து போராடி வெற்றிபெற தைதிருநாளில் சபதமேற்போம்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    தமிழ் மரபை போற்றி பேணும் நாளாக பொங்கல் விழா ஆண்டுதோறும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருவது தனி சிறப்பு.

    இயற்கையை வணங்கிய தமிழனின் தொன்மையான வரலாற்றை போற்றி நமது கலாச்சாரமும், நாகரிகமும் என்றும் தொடர, தமிழ் இனத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளிலே உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், உழவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார்:-

    அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள், மக்கள் ஆன்மிகத்துறையில் ஈடுபட்டு நல்ல எண்ணம், நல்ல உள்ளம் பெற்று நன்றாக இருக்க வேண்டும். அனைத்து உயிரினங்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பலபேர் ஒன்று கூடி நல்ல எண்ணத்தோடும், நல்ல வார்த்தையோடும், நல்ல செயலோடும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லும்போது, உள்ளம் பொங்கும் புன்சிரிப்பாக மாறி அனைவருக்கும் நல்லது ஏற்படும்.

    என்.ஆர். தனபாலன்

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன்:-

    தமிழ் மக்களின் கலாச்சாரமும், பண்பாடும் உலகம் முழுவதும் பரவி ஒற்றுமை ஓங்கி வளர்ந்து, சண்டை சச்சரவுகள் மார்கழி பனியில் கரைந்து பிறக்கிற தை திங்கள் அனைவருக்கும் நல்வழி காட்டி, தமிழர்களின் வாழ்வு ஏற்றம் காணட்டும்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இந்த நன்னாளில், கார்காலக் குளிரும், மார்கழி பனியும் விலகி, வாழ்வில் மாற்றம் வருவது போல் உலகத் தமிழர்கள் அனைவர் வாழ்விலும் பொங்கலோ பொங்கல் என பொங்கிடும் பொங்கல் போல் மகிழ்ச்சி பொங்கி நல்லறம் தழைத்தோங்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாதி, மத வேறுபாடுகளை மறந்து, இன, மொழி பாகுபாடுகளை துறந்து நாம் எல்லோரும் ஓர் இனம் ஒன்று பட்ட தமிழினம் என்னும் உணர்வோடு இந்நாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றோம். தமிழக மக்கள் அனைவருக்கும் உழவர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம், ஆகிய திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மேலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு-

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நிலத்தரகர் சங்க தலைவர் வி.என். கண்ணன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, தமிழர் தேசிய கழக தலைவர் வேலு. தாஸ் பாண்டியன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் எஸ்.ஜோசப் பெர்னாண்டோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Pongal
    ×