search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Political leaders"

    பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மாபெரும் வெற்றியை தன் வசப்படுத்திய பா.ஜ.க.வுக்கும், நரேந்திரமோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்):-

    வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாக 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவேண்டும். நரேந்திர மோடி தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்திய உருவெடுக்கும் என்று நம்புகிறேன்.

    விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்):-

    பாராளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையோடு 2-ம் முறை பாரத பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):-

    பா.ஜ.க. அரசில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சியில் அமரப்போவது, ஒட்டுமொத்த இந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உறுதி ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியும், பா.ஜ.க.வின் பெரும்பான்மையும் நரேந்திர மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

    ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்):-

    நரேந்திரமோடியின் உழைப்புக்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். 5 ஆண்டு கால சாதனைகள் மூலம் மக்களின் இதயங்களை வென்று, 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்):-

    பா.ஜ.க.வின் அமோக வெற்றி இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மக்களின் பேராதரவோடு மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க இருக்கும் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சியில் நாடு வல்லரசாக மாறி சாதனை படைக்க வேண்டும்.

    பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Pongal
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:-

    உலக மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. இத்தகையை சிறப்புக்குரிய உழவர் பெருமக்களின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் வாழ்வு வளம் பெறவும் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசும், உன்னதத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.

    மக்கள் அனைவருடைய இல்லங்களிலும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று மனதார வாழ்த்தி அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்:-

    அறுவடை திருவிழாவான இந்த பொங்கல் நாளிலே, இறைவனுக்கும், உழைத்தோருக்கும், உழைப்புக்கு பக்கபலமாக இருந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றியை செலுத்தி, நம்முடைய நாடு மேலும் பல வெற்றிகளை அடைய கூடிய வகையில் இறைவன் நமக்கு அருள வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த பொங்கல் விழாவை கொண்டாடுவோம்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    இந்த பொங்கல் ஆரோக்கிய பொங்கலாக மலர, மருத்துவ காப்பீட்டு திட்டமும், சமூக நீதிப் பொங்கலாக மலர, 10 சதவீத இட ஒதுக்கீடும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். தாமரைப் பொங்கலாக, தமிழகத்திற்கு எய்ம்ஸ் கிடைக்கும் தாமரைப் பொங்கலாக தமிழ்ப் பொங்கலாக மலரும், இந்த பொங்கல் தாமரை மலர் போல், அனைவரும் வாழ்வும் மலர பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல, தை பிறந்து ஆட்சி மாற்றம் நிகழ்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    இந்நன்நாளில் ராகுல் காந்தி பாரதப் பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு சபதம் ஏற்று செயல்படுவோம். தமிழர்களின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த இந்நன்நாளில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    விவசாய விரோத திட்டங்கள், விவசாய நிலங்களில் திணிக்கப்படுவால், விவசாயிகள் கொந்தளிக்கும் மன நிலையோடு ஒவ்வொரு நாளும் போராட்ட களத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் உள்ளனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. ஏனெனில் விவசாயத்திற்கும், உணவு உற்பத்திக்கும் மாற்று இல்லை என்பதை இத்தருணத்தில் உணர்ந்திடுவோம், உணர்த்திடுவோம். பிறக்கும் தை அனைவரின் வாழ்விலும் நல்ல விடியலை ஏற்படுத்தட்டும்.

    டாக்டர் ராமதாஸ்:-

    அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதற்கேற்ற வகையில் தைத் திருநாளும், தமிழ் புத்தாண்டும் தமிழக மக்களுக்கு அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை பெற்றுத்தர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும்.

    இன்பத் திருநாள், நம் பண்புத் திருநாள் தை பொங்கல் என்பதால் தாய்த் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கும், தரணி வாழ் தமிழர்களுக்கும், குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்:-

    பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி வரும் நம் மண்ணை மீட்கவும் நமது வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் விவசாயப் பெருங்குடிகளின் வாழ்வுரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், பண்பாட்டுத் தளத்தில் மேலும் சனாதனத்தை நிலைநிறுத்த முயலும் சங்பரிவார் கும்பலிடமிருந்து இத்தேசத்தை மீட்கவும் இந்தப் பொங்கல் திருநாளில் சனநாயக சக்திகள் யாவரும் உறுதியேற்போம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதுடன், உலகம் முழுவதுமுள்ள தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது மனம்நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தை முதல் பேதங்களும், பிணக்குகளும், மோதல்களும், முரண்பாடுகளும் முழுமையாக மறைந்து, நல்லதே நடந்து, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் உயர வழி பிறந்து, அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்நாடு வளம் பெற இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டி தமிழ் மக்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    மேகதாது அணைகட்டு செயல், இயற்கை வளங்கள் மீதான கார்பரேட் ஆதிக்கம், சமூக நீதி கோட்பாட்டை சிதைக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை, அரசியல் சாசனத்திற்கே ஏற்பட்டுள்ள ஆபத்து அறிவியலுக்கு பொருந்தாத சாதிய தப்பெண்ணெங்கள் தேசத்தின் புகழார்ந்த பொது துறைகளை சிதைக்கும் செயல், தொழிலாளர் உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என அனைத்தையும் எதிர்த்து போராடி வெற்றிபெற தைதிருநாளில் சபதமேற்போம்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    தமிழ் மரபை போற்றி பேணும் நாளாக பொங்கல் விழா ஆண்டுதோறும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருவது தனி சிறப்பு.

    இயற்கையை வணங்கிய தமிழனின் தொன்மையான வரலாற்றை போற்றி நமது கலாச்சாரமும், நாகரிகமும் என்றும் தொடர, தமிழ் இனத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளிலே உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், உழவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார்:-

    அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள், மக்கள் ஆன்மிகத்துறையில் ஈடுபட்டு நல்ல எண்ணம், நல்ல உள்ளம் பெற்று நன்றாக இருக்க வேண்டும். அனைத்து உயிரினங்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பலபேர் ஒன்று கூடி நல்ல எண்ணத்தோடும், நல்ல வார்த்தையோடும், நல்ல செயலோடும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லும்போது, உள்ளம் பொங்கும் புன்சிரிப்பாக மாறி அனைவருக்கும் நல்லது ஏற்படும்.

    என்.ஆர். தனபாலன்

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன்:-

    தமிழ் மக்களின் கலாச்சாரமும், பண்பாடும் உலகம் முழுவதும் பரவி ஒற்றுமை ஓங்கி வளர்ந்து, சண்டை சச்சரவுகள் மார்கழி பனியில் கரைந்து பிறக்கிற தை திங்கள் அனைவருக்கும் நல்வழி காட்டி, தமிழர்களின் வாழ்வு ஏற்றம் காணட்டும்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இந்த நன்னாளில், கார்காலக் குளிரும், மார்கழி பனியும் விலகி, வாழ்வில் மாற்றம் வருவது போல் உலகத் தமிழர்கள் அனைவர் வாழ்விலும் பொங்கலோ பொங்கல் என பொங்கிடும் பொங்கல் போல் மகிழ்ச்சி பொங்கி நல்லறம் தழைத்தோங்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாதி, மத வேறுபாடுகளை மறந்து, இன, மொழி பாகுபாடுகளை துறந்து நாம் எல்லோரும் ஓர் இனம் ஒன்று பட்ட தமிழினம் என்னும் உணர்வோடு இந்நாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றோம். தமிழக மக்கள் அனைவருக்கும் உழவர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம், ஆகிய திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மேலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு-

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நிலத்தரகர் சங்க தலைவர் வி.என். கண்ணன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, தமிழர் தேசிய கழக தலைவர் வேலு. தாஸ் பாண்டியன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் எஸ்.ஜோசப் பெர்னாண்டோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Pongal
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை விரிவாக பார்க்கலாம். #TiruvarurByElection
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது.

    இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கூறியதாவது:

    திருவாரூர் தேர்தலை இன்முகத்துடன் வரவேற்க தயாராக இருந்த நிலையில் ரத்தாகி விட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

    மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் தேர்தலை எதிர்த்தன. கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. பாஜக உள்நோக்கத்துடன் இடைத்தேர்தலை அணுகியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே. எனது கணிப்பின் அடிப்படையில் திருவாரூர் தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்றேன். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது தேவை நிவாரணம்தான் தேர்தல் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

    முதல்வரை பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சந்தித்தபோதே தேர்தல் ரத்து முடிவாகிவிட்டது. திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    இதேபோல் திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் ரத்து அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். காமராஜ்  கூறினார். இடைத்தேர்தல் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே தேர்தல் ரத்தாகும் என முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக தி.மு.க. வேட்பாளரான பூண்டி கலைவாணன் கருத்து தெரிவித்துள்ளார்.

    மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு தேர்தலை ரத்து செய்துள்ளன என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது கூறினார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  #TiruvarurByElection 
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #RajivCaseConvicts
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பது தான் கருணாநிதி ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த தி.மு.க.வின் நிலைப்பாடாகும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக்கூட்டத்தைக் கூட்டி, 7 பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும், 27 வருடங்களாக சிறையில் இருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, தலைவணங்கி, வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறேன். ஏனெனில் இதுமாதிரியான வழக்குகளில், இந்திய அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு மாநிலங்களுக்கு வழங்கும் அதிகாரத்தை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திவிட்டது. இனிமேல் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தில் இத்தகைய பிரச்சினைகளில் குறுக்கிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக கவர்னருக்கு முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு விரைந்து பரிந்துரை செய்து, குற்றவாளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவிப்பவர்களை விடுவிக்கும் சூழல் இருக்கும் பட்சத்தில், மத்திய அரசு தலையிடாமல் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ் மக்கள் உள்ளத்தில் ஒரு ஆறுதலை ஏற்படுத்தி, பால்வார்த்துள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி, அதில் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை வழங்க வேண்டுமெனவும், இப்பரிந்துரையினை ஏற்று தமிழக கவர்னர் உடனடியாக இவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பை பயன்படுத்தி உடனடியாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    7 தமிழர்களும் எதிர்கொண்டு வரும் இருள் நிறைந்த பாதை முடிவடைந்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கும் நோக்கத்துடன் சீராய்வு மனு, மேல்முறையீட்டு மனு போன்றவற்றை மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை உடனடியாக பெற்று, அமைச்சரவையைக் கூட்டி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இப்பொழுது தமிழ்நாடு அரசுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது; இதனைப் பயன்படுத்தி, காலதாமதம் செய்யாமல் உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நாடே எதிர்ப்பார்த்திருக்கும் நல்லதோர் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளை உளமார பாராட்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது. இதை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக அமைச்சரவை கூட்டி, 7 பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். #RajivCaseConvicts
    பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee
    சென்னை:

    பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-

    தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி பாராளு மன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டி காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாது நடத்தியவர். தமிழ்நாடு சட்டமன்ற பொன்விழாவில் கலைஞர் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச் சிறந்த தலைவரின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    இந்திய நாடாளுமன்றத்தில் பத்து முறை மக்களவை உறுப்பினராக இருந்து அனைவரின் பாராட்டையும் பெறும் விதத்தில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று தனது ஆணித்தரமான திறமையால் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. அவரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    சோம்நாத் சாட்டர்ஜி ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரர். புகழ்பெற்ற மனித உரிமை போராளி நிர்மல் சந்திர சாட்டர்ஜியின் புதல்வரான சோம்நாத் சாட்டர்ஜி தலைசிறந்த கல்வியாளர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 10 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பொது வாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடை பிடித்தவர். மக்களவைத் தலைவராக பணியாற்றிய போது அரசு மாளிகையில் தங்கியிருந்தபோது தமது சொந்த தேவைகளை சொந்த செலவில் நிறைவேற்றிக் கொண்டார். அவரது மறைவு இடதுசாரி அரசியலுக்கும், நேர்மை அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வேதனைக்குரியது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எவ்வாறு செயல்பட்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கும், நாட்டிற்கும் பயன்தர வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இருந்தவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், மேற்கு வங்கத்திற்கும் பேரிழப்பு. அது மட்டுமல்ல அவரது இழப்பு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன்:-

    மூத்த கம்யூனிஸ்டு தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமுற்றேன். பத்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    சோம்நாத் சாட்டர்ஜி நாட்டில் உள்ள ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் நலனுக்காக ஓயாமல் குரல் கொடுத்தவர். இந்திய அரசியலில் அனைவருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். இவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #SomnathChatterjee
    காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டியதாக குமாரசாமி தெரிவித்தார். #CauveryIssue #Kumaraswamy
    திருமலை:

    கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை வந்தனர். அவர்களை, தேவஸ்தான அதிகாரிகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

    சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு ஏழுமலையானை முதல்வர் குமாரசாமியும், தேவேகவுடாவும் தரிசனம் செய்துவிட்டு கொடி மரத்தை தொட்டு வணங்கினர். இரவு விடுதியில் தங்கி ஓய்வெடுத்தனர்.

    இன்று காலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை மீண்டும் தரிசனம் செய்தனர். பிறகு, கோவில் வளாகத்தில் முதல்வர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


    காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ, நீதிமன்றத்தின் மூலமாகவோ தீர்வு காண முடியாது. தமிழக அரசியல் தலைவர்கள், காவிரி பிரச்சனையில் சுமூக தீர்வுகாண முன்வர வேண்டும்.

    இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டினேன்.

    மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு தான் நன்மை ஏற்படும். இதன் மூலம் காவிரி நீர் கடலில் வீணாகுவதை தடுக்க முடியும். மேலாண்மை வாரியம், அரசியல் சாசனம் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது.

    காவிரி பிரச்சனையில் இயற்கை ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனைதான் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக அரசியல் வாதிகளுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று குமாரசாமி பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   #CauveryIssue #Kumaraswamy
    தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறியது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறியது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    வைகைச்செல்வன் (அ.தி.மு.க.):-

    போராட்டத்தினுடைய வடிவம் சமீப காலமாக வன்முறையை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் வேறு திசையை நோக்கி சென்றது. காவிரி போராட்டமும் வேறு விதமாக நகர்ந்தது.

    இதேபோலத்தான் ஸ்டெர்லைட் போராட்டமும். போராட்டம் வேறு திசை நோக்கி சென்றதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

    டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.):-

    போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்? என்ற கேள்வியைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம். அப்பாவி மக்களை கொன்றது ஏன்? இறந்துபோன 13 பேரில் சமூக விரோதிகள் யார்? ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை விட்டுவிட்டு போலீசார் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றது ஏன்? என்பதற்கு ரஜினிகாந்த் பதில் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    திருநாவுக்கரசர் (காங்கிரஸ்):-

    சமூக விரோதிகள் என்று போராட்டக்காரர்களை ரஜினிகாந்த் கூறுவது சரியல்ல. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நான் மற்றும் மற்ற தலைவர்கள் எல்லோரும் கலவரம் நடந்த மறுநாள் அங்கு சென்று பார்த்தோம். அங்கு சமூகவிரோதிகளையும், பயங்கரவாதிகளையும் நாங்கள் பார்க்கவில்லை. ரஜினிகாந்துக்கு வந்த தகவல்படி அவர் கூறியிருக்கலாம். ஆனால் அதில் முழுவதும் உண்மை இல்லை.

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.க.):-

    இந்த போராட்டம் பயங்கரமாக மாறியது பயங்கரவாதிகளால் தான். பஸ்களுக்கு தீ வைப்பது, கல் எறிவது போன்றவை பொதுமக்களின் எண்ணம் கிடையாது. ஆகவே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கிறார்கள். போராட்டம் எந்த திசையை நோக்கி திரும்பியது என்று பார்த்தாலே அங்கு சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே ரஜினிகாந்த் கூறிய கருத்தை தான் நாங்களும் சொல்லிக்கொண்டு இருந்தோம்.

    பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):-

    தூத்துக்குடி விவகாரத்தில் ரஜினிகாந்தின் பிரவேசமும், அவருடைய கருத்துகளும் மர்மமாக இருக்கின்றன. எந்த கருத்துகளை பரப்புவதற்கு அவர் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார்? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. 100 நாட்கள் நடந்த போராட்டத்தில் ஒரு நாள் கூட அங்கு சென்று போராட்டக்காரர்களை சந்தித்து, அதன் பின்னணியில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ள ரஜினிகாந்த் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் புரட்சிக்காக போராடுபவர்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

    ஜி.கே.வாசன் (த.மா.கா.):-

    மக்கள் வாழ்வாதாரங்களுக்கு பாதகமாக இருக்கிற திட்டங்களை அரசு அவர்கள் மீது திணிக்க நினைத்தால் அநீதி. அந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் போராட்டம் அவசியம். போராடுபவர்கள் வன் முறைக்கு காரணமானவர்கள் கிடையாது. அந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படுகிறது என்றால், யார் காரணம்? ஏன் நடக்கிறது? எப்படி நடக்கிறது? என்பதற்கு அரசு தான் பொறுப்பு. அப்பாவி மக்கள் அல்ல.

    தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்):-

    பொதுமக்களின் போராட்டத்தை ரஜினிகாந்த் வலதுசாரி பார்வையில் இருந்து பார்த்திருக்கிறார். அவர் ஆட்சியாளர்களை பாதுகாக்கவேண்டும். போலீசாரை பாதுகாக்கவேண்டும். அதிகார வர்க்கத்தினர் எடுத்த முடிவு சரிதான் என்ற நிலைபாட்டில் முன்கூட்டியே அவர் எடுத்த முடிவின்படி இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். மக்களோடு நின்று போராடியவர்களை சமூகவிரோதிகள் என்று கூறுவது வேதனை அளிக்கிறது.

    ரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு):-

    போராட்டம் நடத்தவேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்படுகிறது? என்பதை ரஜினிகாந்த் முதலில் பார்க்கவேண்டும். வேண்டும் என்றே யாரும் போராடவில்லை. மக்கள் நடத்திய போராட்டத்தை திசை திருப்புகிற வகையில் தவறான முறையில் போலீசாரை வழிநடத்திய அரசை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ரஜினிகாந்தின் கருத்து ஏற்புடைய கருத்து இல்லை.

    கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):-

    தூத்துக்குடியில் மக்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய நியாயமான போராட்டத்தை சமூக விரோதிகளின் போராட்டம் என்று ரஜினிகாந்த் அடையாளப்படுத்துவது கண்டனத்துக்குரியது. போலீசார் துப்பாக்கிச்சூட்டை கண்டிக்காமல் அதை நியாயப்படுத்துகிறவராக ரஜினிகாந்த் மாறி இருக்கிறார். போராடினால் தமிழகம் சுடுகாடாகி விடும் என்று அவர் சொல்லி இருப்பது, போராடுகிற மக்களை கொச்சைப்படுத்தி இருக்கிறார். இந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்):-

    போராட்டம் ஏன் உருவாகுகிறது என்ற அடிப்படை கூட அறியாதவராக இருப்பது, ரஜினிகாந்த் அரசியலில் தான் உடனடியாக பதவி மாடத்தில் ஏறி அமர வேண்டும் என்ற ஆசையை மட்டும் தேக்கி வைத்திருக்கிறார். தூத்துக்குடி போராட்டகாரர்கள் விஷ கிருமிகள் தான் காரணம் என்றோ, சமூக விரோதிகள் தான் என்றோ பேசுவது அறியாமையின் உச்சம். மவுனமாக இருக்கும் போது மிகப்பெரிய அறிவாளியாக தோன்றுகிறார். ஆனால் பேச ஆரம்பிக்கும்போது, அவருடைய உண்மை அடையாளம் வெளிப்படுகிறது. அவர் நிறைய பேசட்டும். மக்கள் புரிந்துகொள்ளட்டும்.

    ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):-

    மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பா.ஜ.க.வின் குரலை ரஜினிகாந்த் எதிரொலித்து வருகிறார். பா.ஜ.க. அனுப்பிய தூதராகவே ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் பாசிச சக்திகளின் முகவர் ரஜினிகாந்தை தமிழக மக்கள் முழுவதுமாக புறக்கணிக்கவேண்டும்.

    தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. (மனிதநேய ஜனநாயக கட்சி):-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினிகாந்த் குற்றம் சாட்டி இருப்பதை கண்டிக்கிறேன். ரஜினிகாந்த் அரசியல் பேசுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த் தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

    இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×