search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congratulates"

    • மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ,சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • இளைஞரணியைச் சேர்ந்த சிவா,இடுவாய் கிளை அவைத்தலைவர் இடுவாய் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    மங்கலம் :

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும்,சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினை திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ,சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது தி.மு.க. கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சகாபுதீன், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.முகமது ஜீனைத், மங்கலம் பள்ளிவாசல் வார்டு செயலாளர் பாபு என்கிற நூர்முகமது, திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சசி, திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் இடுவாய்ரவி, திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இடுவாய் சரவணன், இளைஞரணியைச் சேர்ந்த சிவா,இடுவாய் கிளை அவைத்தலைவர் இடுவாய் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நாட்டின் முக்கியமான தருணத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய பிரதமரை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
    • தங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் வழிகாட்டுதல்கள், உறுதியான நடவடிக்கைகள் தற்போதையை சமூகத்துக்கு அவசிய தேவையாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப் பதாவது:-

    நாட்டின் முக்கியமான தருணத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய பிரதமரை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் வழிகாட்டுதல்கள், உறுதியான நடவடிக்கைகள் தற்போதையை சமூகத்துக்கு அவசிய தேவையாக உள்ளது.

    இந்தியாவை கட்டமைப்பதில் உலகளவில் சிறந்த தலைவராக திகழ்வதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுவை மாநில மக்கள் சார்பிலும், எனது சார்பிலும், நல் ஆரோக்கியத்தோடு, நல் உடல்நலத்தோடு நீண்டகாலம் வாழ்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேற இறைவன் அருள்புரியட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மாபெரும் வெற்றியை தன் வசப்படுத்திய பா.ஜ.க.வுக்கும், நரேந்திரமோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்):-

    வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாக 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவேண்டும். நரேந்திர மோடி தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்திய உருவெடுக்கும் என்று நம்புகிறேன்.

    விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்):-

    பாராளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையோடு 2-ம் முறை பாரத பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):-

    பா.ஜ.க. அரசில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சியில் அமரப்போவது, ஒட்டுமொத்த இந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உறுதி ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியும், பா.ஜ.க.வின் பெரும்பான்மையும் நரேந்திர மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

    ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்):-

    நரேந்திரமோடியின் உழைப்புக்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். 5 ஆண்டு கால சாதனைகள் மூலம் மக்களின் இதயங்களை வென்று, 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்):-

    பா.ஜ.க.வின் அமோக வெற்றி இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மக்களின் பேராதரவோடு மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க இருக்கும் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சியில் நாடு வல்லரசாக மாறி சாதனை படைக்க வேண்டும்.

    சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya
    திருவனந்தபுரம்:

    2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா(வயது 22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்று உள்ளார். கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.



    இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

    “ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவருடைய கனவை இன்று நினைவாக்கி உள்ளது. ஸ்ரீதன்யாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். அவர் தேர்வு செய்யும் பதவியில் மிகப்பெரும் வெற்றியை பெற வாழ்த்துகிறேன்” என்று கூறி உள்ளார்.

    இதேபோல் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனும், ஸ்ரீதன்யாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், “சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் ஸ்ரீதன்யா பெற்ற வெற்றியை மன மகிழ்ந்து பாராட்டுகிறேன். அவருடைய வெற்றி, மற்ற மாணவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்” என்றும் அவர் தனது முகநூலில் பதிவிட்டு உள்ளார்.   #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya
    செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர். #Modi #MissionShakti #RamNathKovind #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “மிஷன் சக்தி, இந்தியாவின் பெருமைமிகு தருணம். இந்த சோதனை, இந்தியாவின் விஞ்ஞான திறன் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்“ என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகளால் நாம் பெருமைப்படுகிறோம்“ என்று கூறியுள்ளார்.

    நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்தன், சுரேஷ் பிரபு, ஸ்மிரிதி இரானி, முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். #MissionShakti #RamNathKovind  #VenkaiahNaidu
    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். #edappadiPalanisamy #NewYear2019

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ‘‘எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதே எனது அரசின் குறிக்கோள்” என்ற அம்மாவின் கனவினை நனவாக்கும் வகையில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

    மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்கான திட்டங்களை தீட்டி, மக்கள் வாழ்வு வளம்பெற தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி, வளமும், வலிமையும் மிக்க தமிழ்நாட்டை படைத்திடவும், தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.

    இப்புத்தாண்டு தமிழ் நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #edappadiPalanisamy #NewYear2019

    சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #SahityaAkademi #WriterRamakrishnan #EdappadiPalaniswami
    சென்னை:

    30 ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகில் பணியாற்றி வரும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் விருதுநகரின் மல்லாங்கிணறை பூர்வீகமாக  கொண்டவர்.  சென்னையில் தற்பொழுது வசித்து வருகிறார்.  கடந்த 1984ம் ஆண்டில் இருந்து சிறுகதை, நாவல் ஆகியவற்றை எழுதி வருகிறார்.

    இதற்கிடையே, 'சஞ்சாரம்'  என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இலக்கியத்திற்கான உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

    எளிய நடையில் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பல சிறுகதைகள், நாவல்களை படைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். அவருக்கு விருது அறிவித்திருப்பது அவரது புகழுக்கு மணி மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.

    தமிழகத்துக்கு பெருமை சேர்த்த எஸ் ராமகிருஷ்ணனுக்கு மக்கள் சார்பில் எனது பாரட்டுகள். மேன்மேலும் இதுபோல் பல்வேறு விருதுகள் பெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். #SahityaAkademi #WriterRamakrishnan #EdappadiPalaniswami
    திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய 2 வங்கிகளுக்கும் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது.

    இதில் மணலி கூட்டுறவு வங்கி நிர்வாக்ககுழு உறுப்பினர் பொறுப்புக்கு அ.தி.மு.க. தரப்பில் 11 பேரும், தி.மு.க. கூட்டணி தரப்பில் 11 பேரும் சுயேட்சைகளாக 8 பேரும் ஆக மொத்தம் 30 பேரும், கட்டக்குடி கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அ.தி.மு.க சார்பில் 11 பேரும் தி.மு.க. கூட்டணி சார்பில் 11 பேரும் மொத்தம் 22 பேரும் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் மணலி கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 பேர் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலசுப்ரமணியன் 701 வாக்குகள், மாரிமுத்து 700 வாக்குகள், ராஜேந்திரன் 661 வாக்குகள், ராமகிருஷ்ணன் 649 வாக்குகள், ராமலிங்கம் 667 வாக்குகள், சிங்காரவேலு 641 வாக்குகள், கமலா 711 வாக்குகள், எம்.சுமித்ரா 697 வாக்குகள், ஆர்.சுமத்திரா 705 வாக்குகள், முருகேசன் 756 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதன்மூலம் மணலி கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை அதிமுக கைப்பற்றியது.

    கட்டக்குடி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாசிலாமணி 250 வாக்குகள், இளமாறன் 239 வாக்குகள், கலியபெருமாள் 254 வாக்குகள், அமுதாதேவி 243 வாக்குகள், பிச்சைக்கண்ணு 242 வாக்குகள், டேவிட்ராஜ் 241 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களை பிடித்தனர். மீதமுள்ள இடங்களில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரிமளா 214 வாக்குகள். பவானி 213 வாக்குகள், கலா 225 வாக்குகள், தங்கமணி 258 வாக்குகள், அருமைராஜ் 250 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பான்மை இடங்களை அதிமுக பெற்றுள்ளதால் கட்டக்குடி கூட்டுறவு சங்கமும் அதிமுக வசம் வந்தது.

    கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு கூட்டுறவு சங்கங்களுக்கும் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது.

    தொழில்நுட்ப உதவியுடன் திறமையை மேம்படுத்த வேண்டும் என்று ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களின் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். #Modi #AsianGames #MedalWinner
    புதுடெல்லி:

    இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை குவித்து அசத்தியது. ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியா கைப்பற்றிய அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இது தான்.

    ஆசிய விளையாட்டில் மகுடம் சூடிய இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை வெகுவாக பாராட்டிய பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.



    “உங்களின் விளையாட்டு சாதனையால், இந்தியாவின் புகழும், கவுரவமும் உயர்ந்துள்ளது. அதே சமயம் இந்த பாராட்டு, புகழால் உங்களின் கவனம் சிதறி விடக்கூடாது. தொடர்ந்து விளையாட்டில் முழு மனதுடன் கவனம் செலுத்த வேண்டும். வீரர், வீராங்கனைகள் தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள தொழில்நுட்பத்தின் உதவியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் முன்னணி வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு அலசி ஆராய்ந்து நமது திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியமாகும்” என்று மோடி அவர்கள் மத்தியில் பேசினார் .

    “சிறு நகரங்கள், கிராமப்புறங்கள் மற்றும் ஏழ்மையான பின்னணியில் இருந்து விளையாட்டு களத்திற்குள் நுழைந்து தேசத்திற்காக பதக்கம் வென்று சாதித்துக்காட்டிய இளைஞர்களை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையான திறமை கிராமப்புறங்களில் தான் அதிகம் கொட்டி கிடக்கிறது. அத்தகைய திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு, சிறந்த வீரர்களாக உருவாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

    “இந்த வெற்றியோடு திருப்தி அடைந்து ஓய்ந்து விடக்கூடாது. மேலும் பல சாதனைகளை நிகழ்த்த தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். பதக்கம் வென்றவர்களுக்கு இனி தான் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கமேடையில் ஏற வேண்டும் என்ற லட்சியத்தை ஒரு போதும் விட்டு விடக்கூடாது” என்றும் மோடி ஆலோசனை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோரும் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில், ‘2024, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நோக்கி இப்போதே எங்களது பணிகள் தொடங்கி விட்டன. ஆசிய விளையாட்டு வெற்றியை கொண்டாடும் இந்த வேளையில் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் நெருங்கி வருவதையும் மறந்து விடக்கூடாது. எங்களது பிரதான இலக்கு 2024 மற்றும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் தான் என்றாலும் டோக்கியோ ஒலிம்பிக்கையும் விட்டு விடக்கூடாது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்கு, வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து கொடுப்போம். டோக்கியோ ஒலிம்பிக்குக்கு இன்னும் 600-க்கும் மேற்பட்ட நாட்கள் இருக்கிறது. அதற்குள் நிறைய சாதகமான மாற்றங்கள் உருவாகும்’ என்றார். 
    ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் பெற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். #AsianGames2018 #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா நேற்று நிறைவடைந்தது.

    இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் பெற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இந்திய வீர்ர்  வீராங்கனைகளுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். 2018-ம் ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா புதிய வரலாறை உருவாக்கியுள்ள்து. இதில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

    போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பெற்றோர்கள், உறவினர் மற்று நண்பர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாம்பியன்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.  #AsianGames2018 #PMModi
    ஆசிய விளையாட்டில் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாசுக்கு அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SarbanandaSonowal #HimaDas
    கவுகாத்தி:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஹீமா தாஸ் உள்ளிட்ட மகளிர் குழுவினர் பங்கேற்றனர். இப்போட்டியில், வேகமாக ஓடி சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். 

    அந்த வகையில் நேற்று நடந்த மகளிருக்கான தொடர் ஓட்டத்தில் ஹீமா தாஸ் உள்ளிட்ட இந்திய மகளிர் குழுவினர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாசுக்கு அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் ஹீமா தாஸ், மச்சித்ரா, சரிதாபென் கெய்க்வாட் மற்றும் கரோத் உள்ளிட்ட மகளிர் குழுவினர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் திறமையாக செயல்பட்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SarbanandaSonowal #HimaDas
    ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை குதித்து நீளம் தாண்டுதல்) இந்தியாவின் அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், இந்தோனேசியாவின் ஆசிய விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் சமயோசிதம் மற்றும் கடும் உழைப்பால் அர்பிந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
    ×