search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arpinder Singh"

    சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் கண்டங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #ArpinderSingh #IAAF
    ஆஸ்ட்ராவா:

    சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் கண்டங்களுக்கு இடையிலான (கான்டினென்டல் கோப்பை) தடகள சாம்பியன்ஷிப் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 3-வது கான்டினென்டல் தடகள போட்டி செக்குடியரசு நாட்டின் ஆஸ்ட்ராவா நகரில் 2 நாட்கள் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதலில் (டிரிபிள் ஜம்ப்) ஆசியா-பசிபிக் அணி சார்பில் பங்கேற்ற இந்திய வீரர் அர்பிந்தர்சிங் 16.59 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் தங்கப்பதக்கமும் (17.59 மீட்டர்), பர்கினோ பாசோ நாட்டைச் சேர்ந்த ஹக்ஸ் பேப்ரிஸ் ஜாங்கோ வெள்ளிப்பதக்கமும் (17.02 மீட்டர்) பெற்றனர்.

    பஞ்சாப்பை சேர்ந்த 25 வயதான அர்பிந்தர்சிங், இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இவர் சமீபத்தில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது நினைவிருக்கலாம்.  #ArpinderSingh #IAAF
    ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை குதித்து நீளம் தாண்டுதல்) இந்தியாவின் அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், இந்தோனேசியாவின் ஆசிய விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் சமயோசிதம் மற்றும் கடும் உழைப்பால் அர்பிந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
    ×