search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hima Das"

    • சீனாவில் வருகிற 23-ந் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய தடகள அணியில் இடம் பெறவில்லை.
    • கடந்த 12 மாதங்களில் தனது இருப்பிடம் குறித்த தகவலை 3 முறை அளிக்க தவறியதால் அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனையான ஹிமா தாஸ் காயம் காரணமாக சீனாவில் வருகிற 23-ந் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய தடகள அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்துவதற்கு வசதியாக தான் இருக்கும் இடத்தை ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு தெரிவிக்காமல் விதிமுறையை மீறியதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் ஹிமா தாஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கடந்த 12 மாதங்களில் தனது இருப்பிடம் குறித்த தகவலை 3 முறை அளிக்க தவறியதால் அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதனால் அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    அசாமை சேர்ந்த 23 வயதான ஹிமா தாஸ் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், 400 மீட்டர் கலப்பு அணிகள் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அர்ஜூனா விருது பெற்ற இளம் ஓட்டப்பந்தைய வீரங்கனை ஹிமாதாஸ் அசாம் மாநில தூதராக முதல்- அமைச்சர் சர்பானாந்த் சோனாவால் நியமித்துள்ளார். #AssamAmbassador #himadas
    இளம் ஓட்டப்பந்தைய வீரங்கனையான ஹிமா தாஸ் உலக ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு சமீபத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கியது.

    இதற்கிடையே 18 வயதான ஹிமா தாசை அசாம் மாநில தூதராக அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கான அறிவிப்பை அசாம் முதல்- அமைச்சர் சர்பானாந்த் சோனாவால் அறிவித்துள்ளார். #AssamAmbassador #himadas
    தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #SatyanGnanasekaran #SmritiMandhana #HimaDas #ArjunaAward
    புதுடெல்லி:

    மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

    இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

    இதற்கிடையே, தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.



    இந்நிலையில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    மேலும், நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன், நிலாகுருதி சிக்கி ரெட்டி, சுபேதார் சதீஷ்குமார், ஸ்மிருதி  மந்தானா, போபண்ணா, ஸ்ரீ சுமித், சுபாங்கர் சர்மா ஆகியோருக்கும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவை டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது. #Satyanarayanan #SmritiMandhana #HimaDas #ArjunaAward
    அர்ஜூனா விருதுக்கு எனது பெயர் தேர்வு செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தெரிவித்துள்ளார். #ArjunaAward #HimaDas
    புதுடெல்லி:

    ஜூனியர் உலக தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவரும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்பட 20 பேரின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அவருக்கு விருது கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில் அசாமை சேர்ந்த 18 வயதான ஹிமா தாஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு எனது பெயர் தேர்வு செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு எனது பெயர் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படலாம் என்று நினைத்தேன். எனக்குரிய இந்த ஆண்டு போட்டிகள் நிறைவு பெற்று விட்டது. அடுத்த ஆண்டில் தெற்காசிய விளையாட்டு போட்டி, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவை நடக்க இருக்கிறது. அதற்கு தகுந்தபடி திட்டமிட்டு தயாராகுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.  #ArjunaAward #HimaDas
    ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட 20 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. #SmritiMandhana #HimaDas
    புதுடெல்லி:

    மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

    இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். 



    இந்நிலையில், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட 20 வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், தடகள வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. #SmritiMandhana #HimaDas
    ஆசிய விளையாட்டில் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாசுக்கு அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SarbanandaSonowal #HimaDas
    கவுகாத்தி:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் ஹீமா தாஸ் உள்ளிட்ட மகளிர் குழுவினர் பங்கேற்றனர். இப்போட்டியில், வேகமாக ஓடி சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். 

    அந்த வகையில் நேற்று நடந்த மகளிருக்கான தொடர் ஓட்டத்தில் ஹீமா தாஸ் உள்ளிட்ட இந்திய மகளிர் குழுவினர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டில் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாசுக்கு அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் ஹீமா தாஸ், மச்சித்ரா, சரிதாபென் கெய்க்வாட் மற்றும் கரோத் உள்ளிட்ட மகளிர் குழுவினர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் திறமையாக செயல்பட்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SarbanandaSonowal #HimaDas
    ஆசிய விளையாட்டு போட்டியின் கலப்பு 4X400 மீட்டர் ரிலேயில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கம் வென்றனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று கலப்பு 4X400 மீட்டர் ரிலே இறுதிச் சுற்று நடைபெற்றது. இந்தியாவுடன் 8 அணிகள் பதக்கத்திற்கான இறுதிச் சுற்றில் இடம்பிடித்தன.

    இதில் முகமது அனாஸ், ஹிமா தாஸ், ராஜிவ் ஆரோக்கியா, பூவம்மா ராஜு ஆகியோர் கொண்ட இந்திய அணி 3 நிமிடம் 15.71 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. பஹ்ரைன் 3 நிமிடம் 11.89 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றது. கஜகஸ்தான் 3 நிமிடம் 19.52 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றது.
    ஆசிய விளையாட்டு போட்டியின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டுட்டிசந்த்- ஹிமாதாஸ் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்யெங் நகரங்களில் நடந்து வருகிறது.

    10-ம் நாளான இன்று காலை பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் டூட்டி சந்த், ஹிமா தாஸ் பங்கேற்றனர்.

    இதில் 4-வது தகுதி சுற்றில் ஓடிய டூட்டி சந்த் 23.37 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்தமாக அவர் 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    2-வது தகுதி சுற்றில் ஓடிய ஹிமாதாஸ் 23.47 வினாடியில் கடந்து 4-வது இடத்தை பிடித்தார். ஆனால் அவர் நேரத்தின் அடிப்படை யில் 7-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    இதன் அரைஇறுதி போட்டி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. ஹமாதாஸ் 400 மீட்டர் ஓட்டத்திலும், டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தடகளத்தில் இன்று மாலை நடக்கும் பெண்களுக்கான 5ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சூர்யா பங்கேற்கிறார். பெண் களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் அன்னுராணியும் கலந்து கொள்கிறார்.

    இரவு 7.15 மணிக்கு நடக்கும் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது, ஆரோக்ய ராஜீவ், ஹிமாதாஸ், பூவம்மா ஆகியோரை கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. இப்போட்டியில் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ஸ்குவாஷ் போட்டியில் இந்திய பெண்கள் அணி இன்று ‘லீக்’ போட்டியில் தாய்லாந்துடன் மோதியது. ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், குருவில்லா, தன்விகன்னா ஆகிய கொண்ட இந்திய அணி 3-0 என்ற தளத்தில் வெற்றி பெற்றது. #AsianGames2018
    400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், இந்திய வீரர் முகமது அனாஸ் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் தற்போது தடகள போட்டிகளில் நடைபெற்று வருகின்றன. இன்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டி நடைபெற்றன. இதில் இந்தியாவின் ஹிமா தாஸ், நிர்மலா உள்பட 8 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் பஹ்ரைன் வீராங்கனை சல்வா நாசர் 50.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த ஆசிய விளையாட்டு போட்டியின் சாதனையை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 50.79 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றா். கஜகஸ்தான் வீராங்கனை எலினா மிகினா 52.63 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.



    ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் முகமது அனாஸ் 45.69 வினாடிகள் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கத்தார் வீரர் அப்டலேகா ஹசன் 44.89 வினாடிகளில் கடந்த தங்கப்பதக்கம் வென்றார். பஹ்ரைன் வீரர் அலி காமிஸ் 45.70 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.
    அசாம் மாநிலத்தின் விளையாட்டுத் துறை தூதராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக அம்மாநில முதல்மந்திரி சர்பனந்தா சோனோவால் அறிவித்துள்ளார். #HimaDas #AssamCM
    திஸ்ப்பூர்:

    சமீபத்தில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இளம் வீராங்கனை ஹிமா தாஸ் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றார். விளையாட்டில் மட்டுமன்றி, தனது தேசபக்தியால் இந்தியாவில் அனைவரது உள்ளங்களையும் வென்றார்.



    இந்நிலையில், ஹிமா தாஸின் இல்லத்துக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்த அசாம் மாநில முதல்மந்திரி சர்பனந்தா சோனோவால், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஹிமா தாஸின் வெற்றியின் மூலம் பெண்களின் திறன் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

    மேலும், ஹிமா தாஸுக்கு 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், மாநிலத்தின் விளையாட்டுத்துறை தூதராக ஹிமா தாஸ் நியமிக்கப்படுவார் எனவும் முதல்மந்திரி சோனோவால், ஹிமா தாஸின் பெற்றோர்களுக்கு வாக்குறுதி அளித்தார். #HimaDas #AssamCM
    உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது. #HimaDas #WorldJuniorAthletics
    கவுகாத்தி:

    பின்லாந்தில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (20 வயதுக்கு உட்பட்டோர்) இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த முதல் இந்திய மங்கை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார்.

    விவசாய குடும்பத்தை சேர்ந்த ஹிமாதாசின் சொந்த ஊர், அசாம் மாநிலம் நாகாவ்ன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமம் ஆகும். உடன் பிறந்தவர்கள் 4 பேர். ஹிமா தாசின் மகத்தான வெற்றியால் அந்த கிராமமே உற்சாகம் பூண்டுள்ளது.

    இதுதொடர்பாக ஹிமா தாஸ் கூறுகையில், தேசத்திற்காக பதக்கத்தை கொண்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும். இந்திய மக்களுக்கு இந்த பரிசை அளிப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிபேன்’ என்றார்.

    தங்கம் வென்ற வீராங்கனை ஹிமாதாசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.

    அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் ஹிமா தாசுக்கு50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்து அதற்கான உத்தரவை வெளியிட்டார்.

    ஏற்கனவே முன்னாள் முதல் மந்திரி தருண் கோகோய் ஒரு லட்சமும், அசாம் அத்லெடிக் அசோசியேஷன் 2 லட்சமும், முன்னாள் மந்திரி கவுதம் ராய் ஒரு லட்சமும் அளித்துள்ளனர் எனப்து குறிப்பிடத்தக்கது. #HimaDas #WorldJuniorAthletics
    பின்லாந்து உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாஸின் தேச பக்தியை கண்டு தான் நெகிழ்ச்சியடைந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #HimaDas #WorldJuniorAthletics #Modi
    புதுடெல்லி:

    பின்லாந்தில் நடந்து வரும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (20 வயதுக்குட்பட்டோர்) இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த முதல் இந்திய மங்கை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார்.

    புயல்வேக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவிதுள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி, ஹிமா தாஸ் வெற்றியின் மறக்க முடியாத தருணங்கள் என குறிப்பிட்டு 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் ஓடி வெற்ற பெற்ற வீடியோவை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், ‘வெற்றிக்கு பிறகு ஆர்வத்துடன் ஹிமா தேசியக்கொடியை தேடியதும், தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவர் உணர்ச்சி வயப்பட்டதையும் பார்த்தபோது என்னை மிகவும் நெகிழச்செய்துவிட்டது’ என மோடி  தெரிவித்துள்ளார்.  #HimaDas #WorldJuniorAthletics #Modi
    ×