search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co operative election"

    கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MadrasHCBench
    மதுரை:

    அண்மையில் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் பல இடங்களில் கூட்டுறவு சங்கத்தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.

    தமிழகத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு இன்று (13-ந்தேதி) நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.



    அப்போது தமிழகத்தில் எத்தனை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது? என்பது குறித்தும், வெளிப்படையாக தேர்தல் நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எத்தனை பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்? என்பது குறித்தும் வருகிற 19-ந்தேதி கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் கூட்டுறவு சங்கத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்வதை டிஜிட்டல் முறையாக்கவும், அதனை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MadrasHCBench
    திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய 2 வங்கிகளுக்கும் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது.

    இதில் மணலி கூட்டுறவு வங்கி நிர்வாக்ககுழு உறுப்பினர் பொறுப்புக்கு அ.தி.மு.க. தரப்பில் 11 பேரும், தி.மு.க. கூட்டணி தரப்பில் 11 பேரும் சுயேட்சைகளாக 8 பேரும் ஆக மொத்தம் 30 பேரும், கட்டக்குடி கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அ.தி.மு.க சார்பில் 11 பேரும் தி.மு.க. கூட்டணி சார்பில் 11 பேரும் மொத்தம் 22 பேரும் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் மணலி கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 பேர் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலசுப்ரமணியன் 701 வாக்குகள், மாரிமுத்து 700 வாக்குகள், ராஜேந்திரன் 661 வாக்குகள், ராமகிருஷ்ணன் 649 வாக்குகள், ராமலிங்கம் 667 வாக்குகள், சிங்காரவேலு 641 வாக்குகள், கமலா 711 வாக்குகள், எம்.சுமித்ரா 697 வாக்குகள், ஆர்.சுமத்திரா 705 வாக்குகள், முருகேசன் 756 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதன்மூலம் மணலி கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை அதிமுக கைப்பற்றியது.

    கட்டக்குடி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாசிலாமணி 250 வாக்குகள், இளமாறன் 239 வாக்குகள், கலியபெருமாள் 254 வாக்குகள், அமுதாதேவி 243 வாக்குகள், பிச்சைக்கண்ணு 242 வாக்குகள், டேவிட்ராஜ் 241 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களை பிடித்தனர். மீதமுள்ள இடங்களில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரிமளா 214 வாக்குகள். பவானி 213 வாக்குகள், கலா 225 வாக்குகள், தங்கமணி 258 வாக்குகள், அருமைராஜ் 250 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பான்மை இடங்களை அதிமுக பெற்றுள்ளதால் கட்டக்குடி கூட்டுறவு சங்கமும் அதிமுக வசம் வந்தது.

    கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு கூட்டுறவு சங்கங்களுக்கும் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது.

    ஒட்டன்சத்திரம் அருகே வாக்கு பெட்டிக்குள் மை ஊற்றியதால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது. #CooperativeElection

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

    மொத்தம் 70 பேர் வாக்களிக்க இருந்த நிலையில் 69 நபராக ஓடைப்பட்டி வெங்கடாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வாக்களிக்க வந்தார்.

    அப்போது திடீரென வாக்கு பெட்டிக்குள் மையை ஊற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் அதிகாரி சுப்பிரமணியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இது குறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியை கைது செய்தனர். 68 பேர் வாக்களித்த நிலையில் திடீரென மை வீசப்பட்டதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. எனவே இந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், மற்றொரு நாள் நடைபெறும் எனவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #CooperativeElection

    ×