என் மலர்
செய்திகள்

திருப்பதி கோவில் கொடிமரத்தை குமாரசாமி தொட்டு வணங்கிய காட்சி.
தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்- குமாரசாமி
காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டியதாக குமாரசாமி தெரிவித்தார். #CauveryIssue #Kumaraswamy
திருமலை:
கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை வந்தனர். அவர்களை, தேவஸ்தான அதிகாரிகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு ஏழுமலையானை முதல்வர் குமாரசாமியும், தேவேகவுடாவும் தரிசனம் செய்துவிட்டு கொடி மரத்தை தொட்டு வணங்கினர். இரவு விடுதியில் தங்கி ஓய்வெடுத்தனர்.

காவிரி விவகாரத்தில் சட்டத்தின் மூலமாகவோ, நீதிமன்றத்தின் மூலமாகவோ தீர்வு காண முடியாது. தமிழக அரசியல் தலைவர்கள், காவிரி பிரச்சனையில் சுமூக தீர்வுகாண முன்வர வேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டினேன்.
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு தான் நன்மை ஏற்படும். இதன் மூலம் காவிரி நீர் கடலில் வீணாகுவதை தடுக்க முடியும். மேலாண்மை வாரியம், அரசியல் சாசனம் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது.
காவிரி பிரச்சனையில் இயற்கை ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனைதான் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசியல் வாதிகளுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று குமாரசாமி பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #CauveryIssue #Kumaraswamy
கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை வந்தனர். அவர்களை, தேவஸ்தான அதிகாரிகள் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு ஏழுமலையானை முதல்வர் குமாரசாமியும், தேவேகவுடாவும் தரிசனம் செய்துவிட்டு கொடி மரத்தை தொட்டு வணங்கினர். இரவு விடுதியில் தங்கி ஓய்வெடுத்தனர்.
இன்று காலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை மீண்டும் தரிசனம் செய்தனர். பிறகு, கோவில் வளாகத்தில் முதல்வர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்த விஷயத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டினேன்.
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு தான் நன்மை ஏற்படும். இதன் மூலம் காவிரி நீர் கடலில் வீணாகுவதை தடுக்க முடியும். மேலாண்மை வாரியம், அரசியல் சாசனம் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது.
காவிரி பிரச்சனையில் இயற்கை ஒத்துழைக்காவிட்டால் பிரச்சனைதான் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசியல் வாதிகளுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று குமாரசாமி பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #CauveryIssue #Kumaraswamy
Next Story