search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மே தின வாழ்த்து
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மே தின வாழ்த்து

    • கல் உடைப்பவர் முதல் கணினியில் வேலை செய்பவர் வரையில் அனை வருமே உழைப்பாளர்கள் தான்.
    • தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம், சர்வதேச தொழிலாளர் தினம் என்று இதை உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல் உடைப்பவர் முதல் கணினியில் வேலை செய்பவர் வரையில் அனை வருமே உழைப்பாளர்கள் தான். உலகம் முழுவதும், இவர்களின் தினசரி 8 மணி நேர வேலையை உறுதிப் படுத்திய வரலாற்று சிறப்புமிக்க நாள்தான் மே1

    தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம், சர்வதேச தொழி லாளர் தினம் என்று இதை உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். உழைப்பே உயர்வு என்பது நம்முடைய பொன்மொழி. வெற்றியை தேடி உழைப்ப வர்கள் மட்டுமே தங்களு டைய வாழ்க்கையில் அந்த வெற்றியைப் பெற முடியும்.

    இன்று உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய அனை வருமே கடுமையாக உழைத்த வர்கள்தான். அவ ர்களின் அந்த உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான். அவர்கள் பெற்றுள்ள வெற்றி. உழைக் காமல் வரக்கூடிய உயர்வும், செல்வமும் ஒருபோதும் நிலைக்காது.

    உழைக்கக்கூடிய மக்க ளால் உயர்ந்துள்ள நாடு நம் இந்தியா.

    இந்த பெருமைமிக்க மே தின நன்னாளில், உழைக்கும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய மே தின நல்வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கின்றேன். உழைக்கும் மக்கள் அனை வரும் தங்கள் வாழ்வில் உயர்வும், மகிழ்ச்சி யும், ஆரோக்கியமும் பெற்று சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கின்றேன்.

    இவ்வாறு அதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    Next Story
    ×