search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Secretary"

    • அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • மாவட்ட செயலாளர் கலந்து கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அ.தி.மு.க. வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி யினர், கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி விமரி சையாக கொண்டாடினர்.

    குன்றக்குடியில் பேருந்து நிலையம் அருகில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் சிவகங்கை மாவட்டச் செய லாளரும், சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் கட்சி கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.வி.நாகராஜன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி செயலாளர் பார்த்திபன், பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகி கள் ஏராளமானோர் கலந்து கொண்டாடினர்.

    • நீதிபதி முறையாக அனுமதி பெற்று மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.
    • கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய விவகாரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வருத்தம் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதை கண்டித்து மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

    இதனால் குமரகுரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து முன்ஜாமீன் பெற சென்னை ஐகோர்ட்டில் குமரகுரு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி முறையாக அனுமதி பெற்று மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அ.தி.மு.க. மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் குமரகுரு, அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

    அந்த பேச்சு புண்படும் படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூகவலை தளங்கள் வழியாக தெரிவித்து இருந்தேன். இப்போதும் இந்த கூட்டத்தின் வாயிலாக அவ்வாறு புண்படும் படி பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

    அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

    • ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
    • சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும்

    கிராமங்கள் தன்னிறைவு பெற்றதால் நாடு வளர்ச்சி அடையும் என்பது தேசப்பிதா மகாத்மா காந்தியின் கூற்று. அதன்படி கிராமங்களின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதில் அரசு மிகுந்த கவனம் காட்டி வருகிறது. கிராம மக்களின் குரல் எப்போதும், எந்த சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும். அதற்காகத்தான் கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு தடையின்றி நடத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தெரிவித்தார்.

    ஒரு மாநிலத்தின் வளர்ச்சி சமுதாயத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டுமென்றால் கிராமங்கள் முழுமையான வளர்ச்சியை பெற வேண்டும். இதனை மனதில் வைத்துத்தான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனால் இதற்கெல்லாம் கரும்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவர், ஊராட்சி செயலாளரால் எட்டி உதைக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

    இதுபோன்ற சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்றும், அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர், வட்டார வளர்ச்சி அதிகாரி, பொதுமக்கள் முன்னிலையில் குறைகளை சபைக்கு எடுத்துவைத்த விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்வதோடு மட்டுமின்றி, டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. இந்த கோரிக்கை வலுத்தும் வருகிறது.

    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
    • வீர. பொன்னிவளவனுக்கு கட்சியினர் ஆளுய மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் கிழக்கு மாவட்டமான வானூர், கண்ணமங்கலம், கோட்டகுப்பம் ஒருங்கிணைந்த பகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளராக வீர.பொன்னிவளவன் நியமிக்கப்பட்டார்.

    அவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வீர. பொன்னிவளவன் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றதையடுத்து அக்கட்சியினர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். வீர. பொன்னிவளவனுக்கு கட்சியினர் ஆளுய மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தொகுதி துணை செயலாளர் நல்லாவூர் அன்பரசு, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இளங்கோவன், வழக்கறிஞர் நாகராஜன், தமிழ்ச்செல்வன், ஈழத்தமிழன், ராமதாஸ், கலைமாறன், தங்கராசு, ஆதிமுத்துராம், வீரப்புதல்வன், நீதிதேவன், மோகன், வெங்கடேசன், ஜான், தட்சிணாமூர்த்தி சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 7 வருடத்திற்கு பிறகு கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
    • வட சென்னை வடக்கு இளங்கோவன், வடசென்னை தெற்கு-அப்புன், மத்திய சென்னை கிழக்கு-சாரநாத், மத்திய சென்னை மேற்கு-வேலுமணி.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    7 வருடத்திற்கு பிறகு கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக 144 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    வடசென்னை கிழக்கு சி.சவுந்தர், வட சென்னை மேற்கு-உஷாராணி, வட சென்னை வடக்கு இளங்கோவன், வடசென்னை தெற்கு-அப்புன், மத்திய சென்னை கிழக்கு-சாரநாத், மத்திய சென்னை மேற்கு-வேலுமணி, மத்திய சென்னை வடக்கு-சேத்துப்பட்டு இளங்கோ.

    தென் சென்னை மையம்-சைதை ஜேக்கப், தென் சென்னை வடக்கு-கரிகால் வளவன், தென் சென்னை தெற்கு-இளையா, மேற்கு சென்னை-ஞான முதல்வன்.

    திருவள்ளுவர் கிழக்கு-நீலமேகம், திருவள்ளூர் மேற்கு-தளபதி சுந்தர், திருவள்ளூர் மையம்-அருண் கவுதம், வேலூர் கிழக்கு-கோவேந்தன், வேலூர் மேற்கு சுதாகர், திருப்பத்தூர்-வெற்றி கொண்டான், திருப்பத்தூர் வடக்கு-ஓம்பிரகாசம்.

    செங்கல்பட்டு வடக்கு-தென்னவன், செங்கல்பட்டு மையம்-கானல் விழி, செங்கல்பட்டு மேற்கு-பொன்னிவளவன், செங்கல்பட்டு தெற்கு-தமிழினி, ஆவடி மாநகர்-ஆதவன், காஞ்சிபுரம் மாநகர்-மதி ஆதவன், வேலூர் மாநகர்-பிலிப், ஓசூர் மாநகர்-ராமச்சந்திரன், கடலூர் மாநகர்-செந்தில், கும்பகோணம் மாநகர்-ராஜ்குமார், தஞ்சாவூர் மாநகர்-இடிமுரசு இலக்கண்ணன், கரூர் மாநகர்-இளங்கோ, திண்டுக்கல் மாநகர்-மைதீன் பாவா, சிவகாசி மாநகர்-செல்வன் ஜேசுதாஸ், நெல்லை மாநகர்-முத்துவளவன், நாகர்கோவில் மாநகர்-அப்துல் காலித்.

    சேலம் கிழக்கு-கருப்பையா, சேலம் மேற்கு-மேட்டூர் மெய்யழகன், சேலம் வடக்கு-தெய்வானை, சேலம் தெற்கு-தமிழன், ஈரோடு மாநகர்-சாதிக், ஈரோடு மேற்கு-தங்கவேல், ஈரோடு தெற்கு-கமலநாதன், ஈரோடு வடக்கு-அந்தியூர் ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு-மும்பை அர்ஜூன், நாமக்கல் மேற்கு-முகிலன், நாமக்கல் மையம்-நீலவானத்து நிலவன்.

    கோவை கிழக்கு-ஸ்டீபன், கோவை மாநகர் வடக்கு-குரு, கோவை மாநகர் தெற்கு-குமணன், கோவை வடக்கு-குடி மைந்தன், கோவை தெற்கு-அசோக்குமார்.

    திருச்சி கிழக்கு-அன்புசெல்வன், திருச்சி தெற்கு-ஆற்றலரசு, திருச்சி வடக்கு-கலைச்செல்வன், தஞ்சாவூர் மையம்-ஜெய்சங்கர், தஞ்சாவூர் மேற்கு-ஜான்பீட்டர், தஞ்சாவூர் தெற்கு-அரவிந்த்குமார், தஞ்சாவூர் வடக்கு-முல்லைவளவன்.

    திருப்பூர் மாநகர்-மூர்த்தி, திருப்பூர் கிழக்கு-ஓவியர் மின்னல், திருப்பூர் தெற்கு-சதிஷ்குமார், திருப்பூர் வடக்கு-சண்முகம்.

    மதுரை கிழக்கு-முத்துப் பாண்டியன், மதுரை மேற்கு-சிந்தனைவளவன், மதுரை தெற்கு-காளிமுத்து, மதுரை மாநகர் தெற்கு-ரவிக்குமார், மதுரை மாநகர் வடக்கு-சுடர்மொழி, தேனி கிழக்கு-ரபிக் முகமது, தேனி மேற்கு-போடி மதன், திண்டுக்கல் மையம்-தமிழரசன், திண்டுக்கல் மேற்கு-கணபதி, திண்டுக் கல் கிழக்கு-தமிழ்முகம்.

    தூத்துக்குடி தெற்கு-டிலைட்டா, தூத்துக்குடி மையம்-கணேசன், தூத்துக் குடி வடக்கு-முருகன், நெல்லை தெற்கு-அருட் செல்வன், நெல்லை மேற்கு-எப்.சி.சேகர், கன்னியாகுமரி மையம்-மேசியா, கன்னியாகுமரி மேற்கு-தேவகி, கன்னியாகுமரி கிழக்கு பேரறிவாளன்.

    தாம்பரம் மாநகர் வடக்கு-திருநீர்மலை தமிழ ரசன், தாம்பரம் மாநகர் தெற்கு-சாமுவேல், சேலம் மாநகர் வடக்கு-காஜா மைதீன், சேலம் மாநகர் தெற்கு-மொழியரசு, திருச்சி மாநகர் மேற்கு-புல்லட் லாரன்ஸ், திருச்சி மாநகர் கிழக்கு-கனியமுதன்.

    சிவகங்கை தெற்கு-பாலையா, ராமநாதபுரம் கிழக்கு-அற்புதகுமார், ராமநாதபுரம் மேற்கு-பிரபாகர், விருதுநகர் கிழக்கு-இனியவன், விருதுநகர் மேற்கு-பிரியதர்ஷினி, விருதுநகர் மையம்-சாத்தூர் சந்திரன்.

    காஞ்சீபுரம் வடக்கு-மேனகா தேவி கோமகன், காஞ்சிபுரம் தெற்கு-எழிலரசு, மயிலாடுதுறை வடக்கு-இனியவன், மயிலாடுதுறை தெற்கு-மோகன்குமார், நாகப்பட்டினம் வடக்கு-அருட் செல்வன், நாகப்பட்டினம் தெற்கு-செல்வராஜ், கடலூர் வடக்கு-அறிவுடை நம்பி, கடலூர் மையம்-நீதிவள்ளல், கடலூர் மேற்கு-திராவிடமணி, கடலூர் தெற்கு-மணவாளன், கடலூர் கிழக்கு-அரங்க-தமிழ் ஒளி, பெரம்பலூர் மேற்கு-ரத்தின வேல், பெரம்பலூர் கிழக்கு-கலையரசன் உள்ளிட்ட மேலும் சில மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    • கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.
    • கோடைகாலம் முழுவதும் தண்ணீர்பந்தல் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வைக்க வேண்டும். தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்ப்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும்.

    மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் தகுந்த ஏற்பாடுகளை செய்து கோடைகாலம் முழுவதும் தண்ணீர்பந்தல் தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
    • சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை கண்டித்து அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். 

    இந்த நிலையில் நெல்லிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் கொடுத்த புகாரின் நெல்லிக்குப்பம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    • மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
    • இதில் இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அதன்படி நாளை மாலை திசையன்விளை பேரூராட்சி, வள்ளியூர் பேரூராட்சி, ராதாபுரம் மேற்கு ஒன்றியம் இடிந்தகரை உள்ளிட்ட இடங்களில் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.

    இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், நகர்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு அதிக அளவு உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும். இதில் இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    கடையம்:

    தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடையம் ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    இதில் பெரும்பத்து பொன் ஷீலா பரமசிவன், ஏ.பி.நாடானூர் அழகுதுரை, சேர்வைகாரன்பட்டி ரவிச்சந்திரன், தெற்கு மடத்தூர் பிரேமராதா ஜெயம், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி, முதலியார்பட்டி அசன் பீவி மைதீன், ரவணசமுத்திரம் உசேன் மற்றும் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி தொழிலதிபர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் ஆடித்தபசு கொடியேற்ற விழாவில் கலந்து கொள்ள இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்தனர்.
    • வருகிற 31-ந் தேதி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை மற்றும் நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

    நெல்லை:

    ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் இன்று காலை கே. டி.சி. நகர் பகுதியில் நிர்வாகிகளை சந்தித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், வருகிற 31-ந் தேதி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை மற்றும் நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியா தை செலுத்தப்பட உள்ளது. இதில் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சங்கரன்கோவில் ஆடித்தபசு கொடியேற்ற விழாவில் கலந்து கொள்ள இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முருகேசன், ஜெயலலிதா பேரவை தலைவர் கணபதி சுந்தரம், தாழையூத்து மாடசாமி, மானூர் கந்த சாமி,சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் கழகத்தை பலப்படுத்தும் பணிகளை விரைவு படுத்திட மக்கள் செல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
    • வெற்றியை பரிசளிக்க நாம் அயராது பணியாற்ற வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், ராயபுரம் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்டக் கழக அவைத் தலைவர் பாலுசாமி,மாவட்ட கழக பொருளாளர் சேகர், துணைச் செயலாளர்கள் சூர்யா செந்தில், புல்லட் ரவி, மாவட்டக் கழக இணைச்செயலாளர் ஹாஜிரா பானு,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரத்தினசாமி, பொதுக்குழு உறுப்பினர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் கழகத்தை பலப்படுத்தும் பணிகளை விரைவு படுத்திட மக்கள் செல்வர் உத்தரவிட்டு உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டி இருக்கிறது. ஏற்கனவே நடந்த தேர்தல்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்காக கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும். ஒவ்வொரு வார்டு, பகுதிகளில் உள்ள இளம் வாக்காளர்களை கட்சியில் இணைத்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    பகுதி கழகங்கள் பிரிக்கப்பட்டு மேலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வார்டில் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் செல்வருக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளிக்க நாம் அயராது பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட செயலாளர் அ.விசாலாட்சி பேசினார்.கூட்டத்தில், ராயபுரம் பகுதி பொறுப்பாளர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க.வின் கொடி நாள் விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை மாவட்ட செயலாளர் வழங்கினார்.
    கரூர்:

    தே.மு.தி.க.வின் கொடி நாள் விழா கரூர் 1-வது வார்டு மற்றும் லைட் ஹவுஸ் கார்னரில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு நகர செயலாளர் காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் எம்.ஆனந்த்    வரவேற்றார்.

    தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, நகர இளைஞரணி பிரநிதி பன்னீர், செயலாளர் ரவிக்குமார்,   நெசவாளர் அணி துணை செயலாளர் கன்னியப்பன், வார்டு நிர்வாகிகள் கிருஷ்ணன், சதீஷ், விக்னேஷ், பாலமுருகன், மகேஷ், சிவகுமார், லோகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.வி.தங்கவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கரூர் 1-வது வார்டு மற்றும் லைட் ஹவுஸ் கார்னரில் கட்சி கொடியேற்றி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

    இதில் கரூர் சட்டமன்ற பொறுப்பாளர் சோமூர் ரவி, பொருளாளர் அரிவின்ஸ், பொதுக்குழு உறுப்பினர் முருகன்  சுப்பையா, கேப்டன் மன்றம் ராஜா, சரவணன், தொழிற்சங்க துணை தலைவர் ஹரிஹரன், நகர நிர்வாகிகள் மகாமணி, பழனிவேல், ஆரியப்ப ராஜா, சிவகுமார், ராஜகுமரேசன், அண்ணாதுரை, மோகன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தொழிற் சங்கதுணை செயலாளர் எம். ஆனந்த் செய்திருந்தார். #tamilnews
    ×