search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MSM.Anandhan"

    • பல்வேறு துறைகளில் தொழிலாளர்களாக பாணிபுரிந்து வருகின்றனர்.
    • இது போன்ற சம்வங்கள் நிகழாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    முன்னாள் அமைச்சரும் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எம்.எஸ். எம்.ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கபடுவதாக ஏற்பட்ட வதந்தியை தொடர்ந்து அம்மாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக பல தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஹார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களாக பாணிபுரிந்து வருகின்றனர். பல்லாண்டுகளாக இவர்கள் இங்கே பணியாற்றியும் ஒரு சிலர் வளர்ந்து இங்கே தொழில் நிறுவனங்களை துவங்கியும் அமைதியான முறையில் வாழ்ந்து வரும் போது இப்போது ஏற்பட்டுள்ள இந்த அசாத்திய சூழ்நிலை துரதிர்ஷ்டவிதமானது.

    கடந்த எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொரோனா கால ஊரடங்கின் போது புலம் பெயர் தொழிலாளர்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு அவர்கள் இருக்கும் இடம் தேடி அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டது. மேலும் தங்களின் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி உற்றாருக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தந்து அவர்களின் சொந்த மாநிலத்திற்கே சிரமமின்றி அழைத்து செல்லபட்டதை நினைவு கூற விரும்புகிறேன். திருப்பூர் மாவட்டத்தில் பெருகி கிடக்கும் வேலை வாய்ப்பின் மூலம் திருப்பூர் மாநகரிலும் பல்லடத்திலும் பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு, சாய ஆலை, நூற்பாலை, விசைத்தறி, ப்ரிண்டிங் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள், ஏற்கனவே திமுக ஆட்சி அமைந்தது முதல் நூல் விலை உயர்வு, கடுமையான மின்

    கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் ஜவுளி தொழில் புலம் பெயர் தொழிலாளர்கள் பணியை விட்டு செல்லும் நிலையில் மிகப்பெரிய சவாலையும், உற்பத்தி தடையையும் சந்திக்க வேண்டிய அபாயம் உள்ளது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இப்பிரச்சனையை சீர் செய்ய அனைத்து முயற்ச்சிகளும் எடுத்து வருவது ஆறுதல் அளிக்கும் நிலையில் தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் குழப்பங்களை தீர்வு கண்டு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் என்றும் தங்களை நம்பி வருவோருக்கு துணை இருப்பார்கள் என்ற வரலாற்று உண்மையை உறுதிபடுத்துகின்ற வகையில் சிறிதும் சமூக பொறுப்பின்றி தமிழ்நாடு புலம்பெறும் தொழிலாளர்களுக்கு ஆபத்தான மாநிலம் என்பது போன்ற வதந்திகளை பரப்பும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து மேலும் இது போன்ற சம்வங்கள் நிகழாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர். விந்தியா மற்றும் திருப்பூர் சாய்பாபா நகர் கே.சுப்பிரமணியன்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் பிரவீன் ஆகியோர் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6மணிக்கு பொங்கலூர் அருகே உள்ள சாந்தி மகாலில் திருமண வரவேற்பு விழா நடக்கிறது.

    விழாவில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர் வரும் வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமண மண்டபத்திற்கு செல்லும் முன் பகுதியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் உள்பட முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இதனால் வாகன நிறுத்தும் இடத்திற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கலூர் பகுதிக்கு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி வருகையால் பொங்கலூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×