search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹோலி பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
    X

    ஹோலி பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து

    ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Holi #PMModi #RamnathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பண்டிகை, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமையை கொண்டுவரட்டும்” என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “தீமையை நன்மை தோற்கடித்ததை கொண்டாடும் திருநாள்தான் ஹோலி. இது, மகிழ்ச்சியையும், தோழமையையும் வெளிப்படுத்தும் திருநாள்” என்று கூறியுள்ளார்.



    பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சி திருவிழா, அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ செய்தியில், “ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து ஹோலி பண்டிகை வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். இந்த திருவிழா, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியால் ஒளிரச் செய்ய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×