search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு- கடையம் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் பாராட்டு
    X

    தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் சிவபத்பநாபனை,கடையம் பஞ்சாயத்து கூட்டைப்பினர் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்தி தெரிவித்த காட்சி.


    மாவட்ட செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு- கடையம் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் பாராட்டு

    • தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    கடையம்:

    தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடையம் ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    இதில் பெரும்பத்து பொன் ஷீலா பரமசிவன், ஏ.பி.நாடானூர் அழகுதுரை, சேர்வைகாரன்பட்டி ரவிச்சந்திரன், தெற்கு மடத்தூர் பிரேமராதா ஜெயம், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி, முதலியார்பட்டி அசன் பீவி மைதீன், ரவணசமுத்திரம் உசேன் மற்றும் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி தொழிலதிபர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×