என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "drown"
- ஆற்றில் தீயணைப்புத் துறை, போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடி வந்தனர்.
- சுற்றுலா வந்த மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சோலையாறு சுங்கம் ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை, போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், மாணவர்கள் 5 பேரையும் சடலமாக மீட்டுள்ளனர்.
உயிரிழந்த 5 பேரும் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் இருந்து சுற்றுலா வந்த மாணவர்கள் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
- இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.
- இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.
விநாயகர் சிலை கரைப்பதற்காக காவிரியில் இறங்கியபோது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குளிப்பதற்காக சென்ற நிலையில் பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 27).கூலி தொழிலாளி. இவர் நேற்று ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்மியாம்பட்டில் உள்ள உறவினர் பார்த்திபன் வீட்டிற்கு வந்தார்.
இன்று காலை ஸ்ரீராம் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பார்த்திபனின் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றார்.
கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென ஸ்ரீராம் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட அவரது நண்பர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ஸ்ரீராமை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீராம் நீரில் மூழ்கியதால் மீட்க இயலாமல் போனது பணி தோல்வியில் முடிந்தது.இதையடுத்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஸ்ரீராமை பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீரிழ் மூழ்கி உயிரிழந்த 5 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர்.
குஜராத் மாநிலம் பொடாட் நகரில் உள்ள கிருஷ்ணா சாகர் ஏரியில் குளிப்பதற்காக சிறுவர்கள் 5 பேர் நேற்று மதியம் சென்றுள்ளனர். முதலில் 2 சிறுவர்கள் ஏரியில் இறங்கி நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருவரும் நீருக்குள் திடீரென மூழ்கத் தொடங்கினர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கரையில் இருந்த மூன்று சிறுவர்களும் ஏரியில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்ற முயன்று ஏரியில் குதித்தனர். ஆனால், அவர்களும் நீரில் மூழ்கினர். இதில், 5 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நீரிழ் மூழ்கி உயிரிழந்த 5 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர்.
மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிணற்றில் குளிக்கும்போது விபரீதம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி களம்பூர் பகுதியில் மரப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே செல்வம் என்பவருடைய நிலத்தில் உள்ள தரை கிணற்றில் கிருஷ்ணமூர்த்தி குளிக்க சென்றார். மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணெதிரே குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
நீண்ட நேரம் அவர் வராததால், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றில் குதித்து தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய கிருஷ்ணமூர்த்தியை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து வள்ளியம்மாள் ஆரணி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
- சிப்காட்டில் உள்ள கிறிஸ்டி கம்பெனியில் 6 வருடங்களாக பாய்லர் ஆப ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
- ஆழமான பகுதியில் குளித்ததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி கதவணை 2-வது மதகில் சிக்கி கிடந்த இளைஞர் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் முப்பாட்டாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் லட்சுமி நாராயணன். இவரது மகன் பரசுராமன்( வயது 30). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள கிறிஸ்டி கம்பெனியில் 6 வருடங்களாக பாய்லர் ஆப ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நட்டாத்தீஸ்வரர் கோயில் அருகே காவிரி ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதியில் குளித்ததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் காவிரி ஆற்றின் கரையோரம் தேடி வந்து பார்த்தபோது நேற்று சோழசிராமணி கதவணையில் இரண்டாவது மதகில் பரசுராமன் இறந்த நிலையில் பிணமாக மிதநதார்.
இது குறித்து ஜேடர்பா ளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமனின் உடலை மீட்டு பிரேத சோத னைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடகில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்தவர் கிணற்றில் நீச்சல் பழகிய போது தண்ணீரில் மூழ்கி பலியானார்.
- அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் கோகுலபிரகாஷ் (22).
இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோகுல பிரகாஷ் பெரியபாளையம் பட்டியில் உள்ள வடக்குத் தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பழகினார்.
அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலக வுண்டம்பட்டி போலீசார் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து கோகுலபிரகாஷின் உடலை மீட்டனர்.
பின்பு அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்ககிரி அருகே உள்ள தேவூர் சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது.
- ஓய்வு பெற்ற கண்டக்டர் தங்கவேல் (வயது 67) என்பவர் தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் சென்ற போது சறுக்கி, தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே உள்ள தேவூர் சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இந்த தடுப்பணையின் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். மேலும் கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் வழிந்தோடுவதால், அந்த பகுதி பாசி படர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற கண்டக்டர் தங்கவேல் (வயது 67) என்பவர் தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் சென்ற போது சறுக்கி, தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள தொங்குட்டிபாளையம் ஊராட்சி ஆண்டிபாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்த சேமன் மகன் தமிழரசன் (வயது 16),
அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தர். இவரது மாமா காங்கேயம் படியூர் சண்முகத்தின் மகன் பூபதி (18), கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் பூபதி தமிழரசனின் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று மாலை இருவரும் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது நீச்சல் தெரியாததால் பூபதி தண்ணீர் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற தமிழரசனையும் தண்ணீர் இழுத்து சென்றுள்ளது.
இதனை பார்த்த அப்பகுதியில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இது குறித்து பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறு வர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார்3 கி.மீ. தூரத்தில் உள்ள சேமலை கவுண்டன்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் சிறுவர்களின் சடலங்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவிநாசி பாளையம் போலீசார் மீட்டனர். இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து அவி நாசிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது.
எனவே பொதுமக்கள் வாய்க்காலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவிநாசிபாளையம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.