search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayakar Statue"

    • இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.
    • இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

    செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) இருவரின் சடலங்களையும் போலீசர் கைப்பற்றியுள்ளனர்.

    விநாயகர் சிலை கரைப்பதற்காக காவிரியில் இறங்கியபோது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதியம்புத்தூர் அருகே உள்ள சாமி நத்தம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது.
    • சிலை திருட்டு குறித்து புதிய முத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள சாமி நத்தம் கிராமத்தில் ஊருக்கு தென்புறம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    இக்கோவிலில் வழிபடு பவர்கள் காலையில் சென்று பார்த்த போது கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருடப்பட்டது தெரிய வந்தது .

    சிலை திருட்டு குறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் சங்கர், புதியம் புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புதிய முத்தூர் போலீசார் சிலை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

    ×