search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayakar chathurthi"

    • சப்பரம் வளைவில் திரும்பியபோது மரத்தின் மீது மோதி விபத்து.
    • விளம்பர பலகை சாய்ந்து விழுந்து மின்சாரம் தாக்கியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் அனைத்து சமுதாயத்தினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது.

    ஊர் மக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இரவில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட கோவில் சப்பரத்தில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    அந்த ஊர்வலத்தில் சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு 10.30 மணி அளவில் சொக்க நாதன்புத்தூரில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைத்தனர். பின்பு ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் வீட்டிற்கு திரும்பியபடி இருந்தனர்.

    விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்ட சப்பரத்தை சொக்க நாதன்புத்தூர் யாதவர் தெருவை சேர்ந்த ராசு மகன் முனீஸ்வரன் (வயது 24), கருப்பையா மகன் மாரிமுத்து (33) உள்ளிட்டோர் கோவிலுக்கு இழுத்து சென்றனர்.

    தெரு வழியாக சப்பரத்தை இழுத்து சென்று கொண்டிருந்தனர். டிரான்ஸ்பார்மர் இருந்த பகுதி வழியாக சென்றபோது சப்பரத்தின் மேல் பகுதியில் இருந்த இரும்பு கம்பி மேலே சென்ற மின் கம்பியின் மீது உரசியது. இதனால் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்தது.

    சப்பரத்தை இழுத்து சென்ற முனீஸ்வரன், மாரிமுத்து, செல்வகிருஷ்ணன் (31), செல்லப்பாண்டி (40), முப்பிடாதி (20) ஆகிய 5 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை மாவட்டம் சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே முனீஸ்வரன், மாரிமுத்து ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.

    மின்சாரம் தாக்கி பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். இறந்தவர்களின உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை சென்றனர். அவர்கள் பலியான வாலிபர்கள் மற்றும் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    மேலும் காயம் அடைத்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர். விநாயகர் சிலை சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் குறித்து சேத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமரன், விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சொக்கநாதன்புத்தூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ×